Mar 16, 2012

மன்னிப்பாயா மன்னிப்பாயா

கடலினில் மீனாக இருந்தவள் நான்
உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்
துடிதிருந்தேன் தரையினிலே
திரும்பிவிட்டேன் என் கடலிடமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமல்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா

கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும்
உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஒ ஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்
உள்ளே உள்ள ஈரம் நீ தான்
வரம் கிடைத்தும் நான் தவற விட்டேன்
மன்னிப்பாயா அன்பே
காற்றிலே ஆடும் காகிதம் நான்
நீ தான் என்னை கடிதம் ஆக்கினாய்
அன்பில் தொடங்கி அன்பில் முடிக்கிறேன்
என் கலங்கரை விளக்கமே

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமால்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா

அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்
அன்பிற்கும் உண்டோ அடைகுந்தாழ் ஆர்வலர்
புன்கணீர் பூசல் தரும்
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்றும் உரியர் பிறர்க்கு
புலம்பல் எனசசென்றேன் புல்லினேன் நெஞ்சம்
கலத்தல் உறுவது கண்டேன்
ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ
போவாயோ கானல் நீர் போலே தோன்றி
அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்
எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

ஒரு நாள் சிரித்தேன்
மறு நாள் வெறுத்தேன்
உனை நான் கொல்லாமால்
கொன்று புதைத்தேனே
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
மன்னிப்பாயா
கண்ணே தடுமாறி நடந்தேன்
நூலில் ஆடும் மழையாகி போனேன்
உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே
தொலை தூரத்தில் வெளிச்சம் நீ
உனை நோக்கியே
எனை ஈர்க்கிறாயே
மேலும் மேலும்
உருகி உருகி
உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்
ஒ ஹோ உனை எண்ணி ஏங்கும்
இதயத்தை என்ன செய்வேன்

எவனோ ஒருவன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்…
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்…
தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

தவம் போல் இருந்து யோசிக்கிறேன்
அதைத் தவணை முறையில் நேசிக்கிறேன்
கேட்டு கேட்டு நான் கிறங்குகிறேன்
கேட்பதை அவனோ அறியவில்லை
காட்டு மூங்கிலின் காதுக்குள்ளே
அவன் ஊதும் ரகசியம் புறியவில்லை
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி
புல்லாங்குழலே பூங்குழலே
நீயும் நானும் ஒரு ஜாதி

உள்ளே உறங்கும் ஏக்கத்திலே
உனக்கும் எனக்கும் சரி பாதி
கண்களை வருடும் தேனிசையில்
என் காலம் கவலை மறந்திருப்பேன்
இன்னிசை மட்டும் இல்லையென்றால்
நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள் மனதில் ஒரு மாறுதலா
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
உறக்கம் இல்லா முன்னிரவில்
என் உள் மனதில் ஒரு மாறுதலா
இரக்கம் இல்லா இரவுகளில்
இது எவனோ அனுப்பும் ஆறுதலா
எந்தம் சோகம் தீர்வதற்கு
இது போல் மருந்து பிரிதில்லையே
அந்தக் குழலைப் போல் அழுவதற்கு
அத்தனை கண்கள் எனக்கில்லையே

எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்
எவனோ ஒருவன் வாசிக்கிறான்
இருட்டிலிருந்து நான் யாசிக்கிறேன்

Mar 12, 2012

விடுதலை

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்.

காற்றும் நம்மை அடிமை என்று விலகவில்லையே
கடல் நீரும் அட்ல்மை என்று சுடுவதில்லையே சுடுவதில்லையே,

காலம் நம்மை விட்டுவிட்டு நடப்பதில்லையே
காதல் பாசம் தாய்மை நம்மை மறப்பதில்லை மறப்பதில்லை,

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்.

கோடி மக்கள் சேர்ந்து வாழ வேண்டும் விடுதலை
கோயில் போல நாடு காண வேண்டும் விடுதலை வேண்டும் விடுதலை

அச்சம் இன்றி ஆடி பாட வேண்டும் விடுதலை
அடிமை வாழும் பூமிஎங்கும் வேண்டும் விடுதலை வேண்டும் விடுதலை

ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்.

அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்
ஒரே வானிலே ஒரே மண்ணிலே
ஒரே கீதம் உரிமை கீதம் பாடுவோம்.

Mar 10, 2012

காதல்.

காதல்
               “காதல், காதல், காதல்
காதல் போயின் சாதல் சாதல் சாதல்"


பாரதியையே பாடாய் படுத்தியுள்ளது இந்த மூன்றெழுத்து வார்த்தை.
கவிஞர்கள் எல்லோருக்கும் பாடுபொருளாய் உள்ள இந்த காதல் அப்படி என்ன மந்திரத்தை தன்னுள் கொண்டிருக்கிறது?

`காதல் என்பது பசி, தாகம், கோபம் போன்ற ஓர் இயல்பான உணர்வு! உடல் ரீதியாக பார்த்தால் காதல் என்பது சுரபிகளின் விளையாட்டு. ஆண்ட்ரோஜன், ஈஸ்ட்ரோஜன், அட்ரினலின் போன்ற சுரப்பிகளின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்கின்றனர் அறிஞர்கள்.
அன்பு, நட்பு, நம்பிக்கை, பொறுப்பு ஆகிய நான்கு தூண்களின் மீது கட்டப்படும் அழகிய மாளிகை. இயல்பான காதல் என்பது முதலில் நம்பிக்கையில் தொடங்கும். பொறுப்புணர்வு முழுமையாக இருக்கும். அதன் பின்னரே காமம் வரும். நம்பிக்கை, பொறுப்புணர்வு, காமம் இவை முன்றும் சரியான விகிதத்தில் கலந்திருப்பதே உண்மையான காதலாகும்..
காதல் என்பது பாலியல் ரீதியானதாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. பெற்றோர்கள், குழந்தைகள், உறவினர்களுடன் நீங்கள் மன ரீதியாக சாதகமான தொடர்புகளைக் கொண்டிருக்கும் போது, மதிப்புக்கு உரியவராக உணர்வீர்கள். இத்தகைய மதிப்பு வாய்ந்த காதலால் கிடைக்கும் நன்மைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.

மனவிரக்தி:
காதல் சூழலில் வாழ்பவர்களுக்கு மனவிரக்தி மற்றும் உளரீதியான துன்பங்கள் வருவது குறைவு என்கின்றன ஆய்வுகள். மாறாக தனியே வாழும் பலரும் விரக்தியுறுவதும், மது, போதை போன்றவற்றை நாடுவதும், அவற்றிற்கு அடிமையாவதும் அதிகம். அதே போல தனிமைப்பட்டவர்கள் மனவிரக்திக்கு ஆளாவது அதிகம் என்பதை பல ஆய்வுகள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றன.

மனப்பதற்றம்:
புதிதாக காதல் வயப்பட்டவர்களைவிட நீண்ட காலமாக நேசமான உறவில் இருப்பவர்களுக்கு மனப்பதற்றம் ஏற்படுவது குறைவு என கண்டறியப்பட்டுள்ளது. MRI பரிசோதனைகள் மூலம் மூளையின் பகுதிகளை பரிசோதித்ததில் இது தெரிய வந்துள்ளது.

வலிகளைத் தாங்கும் தன்மை:
மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளுக்கு உடல்வலி, தலைவலி ஆகியன ஏற்படுவது குறைவாம். MRI பரிசோதனைகள் மூலம் வலிகளைத் தாங்கும் மூளையின் பகுதி அதிகமாகச் செயற்பட்டு வலி தோன்றுவதைக் குறைக்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

ரத்த அழுத்தம்:
மணமுடித்து மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளின் இரத்த அழுத்தம் மற்றவர்களைவிடக் குறைவாக இருக்கிறது. தனியாக இருப்பவர்களுக்க சற்று அதிகமாகவும் உள்ளது. மணமுடிப்பதால் மட்டும் இரத்த அழுத்தம் குறைந்து விடுவதில்லை. மகிழ்ச்சியாக வாழ்வதே முக்கியம் என்பதை இந்த ஆய்வுகள் தெரிவித்துள்ளன.

காய்ச்சல் அதிகம் வராது:
காதல் வயப்பட்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதனால் காய்ச்சல், போன்ற தொல்லைகள் அடிக்கடி ஏற்படாது. சிறிய காயங்கள் தாமாகவே விரைவில் குணமாகிவிடும் என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நீண்ட ஆயுள்:
தனித்து இருப்பவர்களை விட திருமணம் முடித்தவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள். திருமண உறவால் , பரஸ்பர ஆதரவும், பிள்ளைகளின் உதவியும், நிதி தட்டுப்பாடின்மையும் காரணமாக இருக்கலாம். ஆனால் அதற்கு மேலாக தாம் காதலிக்கப்படுகிறோம், ஆதரவுள்ளவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு உடல்நலத்தையும் நீடித்த வாழ்வையும் கொடுக்கிறது.

காதலின் மிகப் பெரிய கொடை:
குடும்ப வருமானத்தையும் வாழ்க்கை வசதிகளையும் விட பரஸ்பர அன்பும், நெருக்கமான உறவும், மனமொத்த காதலும் முக்கியமானது. அது ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது.
இவை வெற்று வார்த்தைகள் அல்ல விஞ்ஞானபூர்வமாகவும் நிறுவப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
ஆதலினால் காதல் செய்வீர் - இதுவும் பாரதி சொன்னதுதான்.



பூ‌‌க்களு‌ம் காதலை‌ச் சொ‌ல்லு‌ம்!
            காதல் என்பது இளமையின் வசந்தகாலம். எல்லோருமே ஏதாவது ஒரு கால கட்டத்தில் காதலை கடந்து வந்திருப்பார்கள். எல்லா காதலுமே வெற்றிகரமாக திருமணத்தில் முடிந்திருக்க வாய்ப்பில்லை. சின்ன சின்ன விசயங்கள்தான் பூதாகரமாக மாறி தோல்விக்கு அடிகோலியிருக்கும்.
காதலில் வெற்றி பெறுவதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஜெயித்த காதலர்கள் சிலர் கூறிய விசயங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறோம். இப்போது காதலிப்பவர்கள் இவற்றை பின்பற்றலாம்.
- காதல‌‌ர்க‌‌ளி‌ல் இரு வகை உ‌ண்டு, பெரு‌ம்பாலு‌ம் பே‌சி‌ப் பழ‌கிய‌ப் ‌பி‌ன்னரே காதல‌ர்களாக ஆவது‌ம், பா‌ர்‌த்த மா‌த்‌திர‌த்‌‌திலேயே காத‌ல் உ‌ண்டா‌கி காதலை‌த் தெ‌ரி‌வி‌த்த ‌பி‌ன் காதல‌ர்களானவ‌ர்களு‌ம் உ‌ண்டு.இ‌தி‌ல் எ‌ந்த வகையாக இரு‌ந்தாலு‌ம், காதல‌ர்க‌ள் ‌சில அடி‌ப்படையான ‌விஷய‌ங்க‌ளி‌ல் அ‌திக கவன‌ம் செலு‌த்த வே‌ண்டு‌ம்.
- காத‌ல் ம‌ற்றவ‌ர்களு‌க்கு வே‌ண்டுமானா‌ல் தெ‌ரியாம‌ல் இரு‌க்கலா‌ம். ஆனா‌ல் காத‌லி‌‌ப்பவரு‌க்கு தெ‌ரியாம‌ல் இரு‌க்க‌க் கூடாது. காதலை மறை‌ப்ப‌தி‌ல் எ‌ந்த பயனு‌ம் இ‌ல்லை. தை‌ரியமாக வெ‌ளி‌ப்படு‌த்‌தினா‌ல் ம‌ட்டு‌ம் ‌நீ‌ங்க‌ள் காதலராக முடியு‌ம்.
- உ‌ங்க‌ள் ந‌ண்ப‌ர்க‌ளிட‌ம் எ‌ல்லா‌ம் மா‌ய்‌ந்து மா‌ய்‌ந்து ‌நீ‌ங்க‌ள் காத‌லி‌ப்பதை தெ‌ரி‌வி‌ப்பதை ‌விட ஒரு ‌நி‌மிட‌ம் தை‌ரியமாக‌ச் செ‌ன்று ‌நீங்கள் காதலிப்பவரிடம் உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள்.
- காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் அடி‌க்கடி உ‌ங்களது காதலை தெ‌ரி‌வியு‌‌ங்க‌ள். அது வா‌ர்‌த்தையாகவு‌ம் இரு‌க்கலா‌ம். வா‌ழ்‌த்து அ‌ட்டையாகவு‌ம் இரு‌க்கலா‌ம். பூ‌‌க்களு‌ம் உ‌ங்க‌ள் காதலை‌ச் சொ‌ல்லு‌ம்.
- எதை வேண்டுமென்றாலும் மறக்காலம் காதலிப்பவரின் பிறந்தநாளை மட்டும் மறக்கக்கூடாது. துணையுடன் இணைந்து சிறப்பாக கொண்டாடுங்கள். பிறந்தநாள் நினைவில் இல்லாதது போல இருந்துவிட்டு பின்னர் பரிசு கொடுத்து அசத்தலாம்.
- ஈகோ மனப்பான்மை இருக்கக்கூடாது. இதுதான் காதலர்கள் பிரிவதற்கு முக்கிய காரணியாக உள்ளது.
- காதல‌‌ர்க‌ள் எ‌ங்கு செ‌ன்றாலு‌ம் இருவரது பாதுகா‌ப்பையு‌ம் க‌ரு‌த்‌தி‌ல் கொ‌ள்ளு‌ங்க‌ள். செ‌ல்லு‌ம் இடமு‌ம், போ‌ய் வரு‌ம் நேரமு‌ம் பாதுகா‌ப்பானதாக இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் அமையு‌ம் படி ‌தி‌ட்ட‌மிடு‌ங்க‌ள்.

குறைகளை பட்டியல் இடாதீர்கள்
- உ‌ங்களு‌க்கு‌த் தெ‌ரி‌ந்தவ‌ர்க‌ளிட‌ம் எ‌ல்லா‌ம் காதல‌ரி‌ன் குறைக‌ளை‌க் கூ‌றி‌க் கொ‌ண்டிரு‌க்க வே‌ண்டா‌ம்.
- காத‌லி‌ப்பவ‌ரி‌‌ன் குணா‌திசய‌ங்களை மா‌ற்ற வே‌ண்டு‌ம் எ‌ன்று நிினை‌க்கா‌தீ‌ர்க‌ள். அதனை ஏ‌ற்று‌க் கொ‌ள்ளு‌ங்க‌ள். ‌மிகவு‌ம் தவறான செயலாக இரு‌‌ந்தா‌ல் ம‌ட்டு‌ம் அதனை எடு‌த்து‌க் கூ‌றி அவரு‌க்கு உண‌ர்‌த்து‌ங்க‌ள்.
- கரு‌த்து வேறுபாடு ஏ‌ற்படு‌ம்போதெ‌ல்லா‌ம் காதல‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் குறைகளை‌ப் ப‌‌ட்டிய‌லிடா‌தீ‌ர்க‌ள். அத‌‌ற்கு ப‌திலாக அவ‌ரிட‌ம் இரு‌க்கு‌ம் ‌ந‌ற் குண‌ங்களை‌ எடு‌த்து‌க் கூ‌றி இ‌ப்படி‌ப்ப‌ட்ட ‌நீ‌ங்களா இதை‌ச் சொ‌ன்‌னீ‌ர்க‌ள் அ‌ல்லது செ‌ய்‌தீ‌ர்க‌ள் எ‌ன்று கூ‌றினா‌ல் ச‌ற்று மேலாக இரு‌க்கு‌ம்.
- காதலரை ‌விட ‌‌நீ‌ங்க‌ள் உய‌ர்‌ந்தவ‌ர் எ‌ன்ற அடி‌ப்படை‌யி‌ல் எ‌ந்த பே‌ச்சு‌ம் இரு‌க்க‌க் கூடாது. இருவரு‌ம் ஒரே உ‌யி‌ர் எ‌ன்பது போ‌ன்று‌ம், ஒருவரை ஒருவ‌ர் ந‌ம்‌பி வா‌ழ்வது போ‌ன்று‌ம் உ‌ங்க‌ள் பே‌ச்சு இரு‌க்க‌ட்டு‌ம். ம‌ற்றவ‌ர்களை‌ப் ப‌ற்‌றிய அடி‌க்கடி காத‌லி‌ப்பவ‌ரிட‌ம் பே‌சி‌க் கொ‌ண்டு இரு‌ந்தா‌ல் அவ‌ர்களு‌க்கு ச‌‌லி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டு‌விடு‌ம்.
- ரகசியம் காப்பது காதலில் மிகவும் முக்கியம். காதலர்களுக்குள் இருக்கும் ரகசியங்கள் அவர்களுக்கு மட்டும் தெரிந்தவையாக இருக்கவேண்டும்.
இப்படி இன்னும் இன்னும் நிறைய. அத்தனையையும் பின்பற்ற முடியாவிட்டாலும் கூட நச்சென்று நாலை கையில் எடுத்தால் இனிமையான காதல் உங்கள் வசமாகும்.






காதலில் வெற்றி பெற வழிமுறைகள்
                    காதலை உணர்கிற தருணமும், காதலோடு நாம் வாழ்கிற தருணமும் மிகமிக அற்புதமானது. வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி காதல்தான் மனிதனை வழி நடத்துகிறது. அப்படிப்பட்ட காதலை சொல்ல பல வழிகள் உண்டு. முன்பெல்லாம் அன்னம், மயில், என பறவைகளை தூதுவிட்டு காதலை தெரிவித்தனர். இந்த நவீன யுகத்தில் பாதுகாப்பாக எவ்வாறு காதலை வெளிப்படுத்தினால் வெற்றிகரமாக்க முடியும் என்பதற்கு சில யோசனைகள் :
- நம் ஒவ்வொருவருக்குமே நமக்கு மிகவும் பிடித்தமானவர்களை சந்தித்த அந்த முதல் தருணம் மறக்க முடியாதது. அதனை நினைவூட்டும் விதமாக நம்முடைய செயல்கள் இருக்கவேண்டும்.
- நாம் காதலிக்கிறோம் என்பதை விட நாம் காதலிக்கப்படுகிறோமா ? என்பது மிகவும் முக்கியமானது. நீங்கள் விரும்பும் நபரே உங்களை விரும்புகிறார் என்றால் உங்களை விட அதிர்ஷ்டசாலி யாரும் கிடையாது. உடனடியாக காதலை கன்பார்ம் செய்யும் நடவடிக்கையில் இறங்கவேண்டியதுதான்.
- நண்பர்களுடன் சேர்ந்திருக்கும் தருணங்களில் உங்களவர் உடன் இருந்தால் அவரது மொத்த கவனமும் உங்கள் மீது மட்டுமே பதிகிறதா என்று கவனிக்கவும்.
- நீங்கள் கூறும் ஒவ்வொரு வார்த்தையும் உன்னிப்பாக கவனித்து பதில் கொடுத்தால் நிச்சயம் அவர் உங்களுடையவர்தான்.
- சாதாரணமாக பேசும் பொழுது நீங்கள் அணிய உள்ள உடையின் நிறம் பற்றி நண்பர்களுடன் பேசுங்கள். உங்களுக்கு மிகவும் பிடித்த கலரை நீங்கள் அணிய உள்ளதாக கூறினால் நீங்கள் விரும்பும் நபரும் அதே கலர் உடையில்தான் வருவார் என்பது நிச்சசயம்.
- உங்களுக்குப் பிடித்த பாடலை முணுமுணுங்கள். உடனே அது உங்களவரின் ரிங்டோனாகவோ, காலர் டியூனாகவோ மாறிவிடும்.
- பிடித்த பொருட்களை கூறுவதை விட பிடிக்காத விசயங்களை கூறுங்கள். மறுநாள் முதல் நீங்கள் விரும்பும் நபருக்கு அது பிடிக்காததாகிவிடும்.
- எந்த ஒரு விஷேச தினமென்றாலும் வாழ்த்து சொல்லுங்கள். அது உங்கள் மீதான மதிப்பை அதிகமாக்கும்.
- எதற்காகவும் பொய் சொல்லாதீர்கள். காதல் தருணங்களில் உண்மைதான் அன்பின் ஆழத்தை அதிகப்படுத்தும்.
- நீங்கள் விரும்பும் நபர் உங்களைத்தான் விரும்புகிறார் என்பது நிச்சயமாக தெரிந்து விட்டால் நேரடியாக சென்று இடம் பொருள் பார்த்து காதலை வெளிப்படுத்துங்கள். இந்த காலத்தில் தூது விடுவது எல்லாம் சரிப்பட்டு வராது. நம் காதலிக்கும் நபரிடம் இருந்து முத்தமோ, அடியோ எதுவென்றாலும் வாங்குவது நாமாகத்தான் இருக்க வேண்டும்.
- ஆல் தி பெஸ்ட். தைரியமாக காதலை வெளிப்படுத்துங்கள் வெற்றி பெறுங்கள். இது போல் மேலும் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.






காதலில் முத்தம், என்பது ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அதை பற்றிய சில கருத்துக்கள்:

காதலின் மொழி முத்தம். காதலர்கள் ஒருவருக்கொருவர் தங்களின் அன்பை பரிமாற பயன்படுத்தும் ஆயுதம். அந்த முத்தம் மனிதர்களுக்குள் எண்ணற்ற ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஆர்வம் அதிகரிக்கும்
இந்தியாவில் காதல் திருமணம் செய்து கொண்டவர்களை விட வீட்டில் பெற்றோர் பேசி திருமணம் செய்து கொண்டவர்கள் அதிகம் முத்தமிட்டுக் கொள்வதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வேலைக்குச் செல்லும் முன் தன் மனைவியை முத்தமிட்டுச் செல்பவர்கள் அப்படி செய்யாதவர்களை விட 5 ஆண்டுகள் கூடுதலாக ஆர்வமுடன் வேலை பார்த்ததாக அந்த ஆய்வு ஆச்சரியமான தகவலை வெளியிட்டுள்ளது. அமெரிக்காவில் பெண்கள் திருமணத்திற்கு முன்னர் 80 ஆண்களை முத்தமிட்டுள்ளதாகவும் அந்த ஆய்வு கூறுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி
இதழோடு இதழை இணைத்து முத்தமிடுகையில் பரிமாபப்படும் எச்சிலில், புரதம், கொழுப்பு, ஊட்டச்சத்துக்கள் அடங்கியிருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. அதேசமயம் 5 மில்லியன் பாக்டீரியாக்களும் பரிமாறப்படுகிறதாம்.

தொப்பை குறையும்
ஒருமுறை முத்தமிடுவதால் முகத்தின் 29 தசைகள் இயங்கவைக்கப்படுகிறது. எவ்வளவுக்கு எவ்வளவு முத்தமிடுகிறோமோ அந்த அளவிற்கு முகத்தில் சுருக்கம் விழுவது தவிர்க்கப்படும். ஒருமுறை முத்தமிடுவதன் மூலம் உடலில் 3 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறதாம். அதேசமயம் லிப் கிஸ் என்றால் 5 கலோரிகள் வரை எரிக்கப்படுகிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குண்டாக இருப்பவர்கள் தொடர்ந்து ஒரு நிமிடம் முத்தமிடுவதன் மூலம் 26 கலோரிகள் எரிக்கப்படுகிறதாம். அதனால் தொப்பை குறைவதாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன அழுத்தம் குறைகிறது
66 சதவிகிதம் பேர் முத்தமிடுகையில் தனது முகத்தை மூடிக்கொள்கின்றனர். மீதமுள்ள 34 சதவிகிதம் பேர்தான் கண்களைத் திறந்து தனது பார்ட்னரை பார்த்து முத்தமிடுகின்றனராம். முத்தமிடுவதால் பெண்களுக்கு மன அழுத்தம் குறைகிறது. அதேசமயம் ஆண்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறதாம்.






இக்கருத்துகள் கிழ்க்கண்ட இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்டது. இது பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த இணையத்தை
பர்ர்க்கவும். மேலும் இந்த இணையத்தில் தாம்பத்தியம் மற்றும் திருமணம்
போன்றவற்றே பற்றிய அறிய பல கருத்துகள் உள்ளன.

நன்றி: http://tamil.indians.com/

Mar 8, 2012

வாக்காளர்களே சற்றே சிந்தியுங்கள்

எல்லா அரசியல் கட்சிகளும் மக்கள் விரோத நடவடிக்கைகளில் ஈடுபடும்போது தேர்தலில் ஒரு வாக்காளர் என்ன செய்யலாம் என்பதற்கு நமது சட்டம் அளித்துள்ள வழிமுறைதான் 49 ஓ பிரிவு.
இன்றும் அர்த்தமுள்ள முழக்கம் ஓ போடு என்பதாகும்.
ஓ போடு என்றால் என்ன ? ஓட்டு போடு என்று அர்த்தம். ஓட்டு போடுவது மக்களின் உரிமையும் கடமையும் ஆகும். ஆனால் சராசரியாக எந்தத் தேர்தலிலும் வாக்காளர்களில் நூற்றுக்கு 45 பேர் ஓட்டு போடுவதில்லை.
ஏன் ஓட்டு போடுவதில்லை என்று கேட்டால் பல பேர் சொல்லும் காரணம் இதுதான். "எந்த வேட்பாளரும் சரியில்லை; இருப்பதில் ஒருத்தருக்கு ஓட்டு போட எனக்கு பிடிக்கவில்லை," என்று சொல்லுகிறார்கள்.
அப்படி நினைப்பவர்களும் கூட போய் ஓட்டு போட முடியும். சட்டத்தில் அதற்கு வசதி செய்யப்பட்டிருக்கிறது.
அதுதான் 49 ஓ.
எல்லா வேட்பாளர்களையும் நிராகரிக்கும் உரிமையை நமக்கு இந்தப் பிரிவு கொடுத்திருக்கிறது. வாக்குச் சாவடிக்கு சென்று ஓட்டு போடுவதற்காக விரலில் மை வைக்கபட்ட பிறகு, எந்த வேட்பாளருக்கும் ஓட்டளிக்க விரும்பவில்லை என்று நாம் தெரிவிக்கலாம். அதை ஓட்டுச் சாவடி அதிகாரி பதிவு செய்தாக வேண்டும். இதுதான் தேர்தல் விதிகள் (1961)ன் 49 (ஓ) பிரிவு. வாக்காளர் இதற்காக எந்த விண்ணப்பத்தையும் நிரப்பத் தேவையில்லை. ஓட்டுச் சாவடி அதிகாரியிடம் சொன்னால் போதும். அவர் தன்னிடம் உள்ள பாரம் 17 ஏ என்ற பதிவேட்டில் இதை எழுதிக் கொள்வார். அதில் நாம் கையெழுத்திட்டால் போதும்.
எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு நாம் உணர்த்தவேண்டும். அதற்கு சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும். அரசியலே சரியில்லை என்று அலுத்துக் கொண்டு நாம் ஓட்டு போடாமல் இருந்தால், அதனால் அரசியல் கட்சிகளுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆனால் 49 ஓவின் கீழ் நம்முடைய ஓட்டைப் பதிவு செய்தால் நமது அதிருப்தியை அவர்களுக்குத் தெரியப்படுத்த முடிகிறது.
ஒரு தொகுதியில் ஜெயிக்கிற வேட்பாளரை விட , 49 ஓவுக்கு அதிக ஓட்டு விழுந்தால், எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். அப்போது 'இனி நேர்மையான அரசியல் செய்ய வேண்டும், நல்ல வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்; இல்லாவிட்டால் மக்கள் தரவு கிடைக்காது' என்பது அரசியலில் உள்ளவர்களுக்கு உறைக்கும். மக்களுடைய அதிருப்தியை அரசியல்வாதிகளுக்கு தெரியப்படுத்த சிறந்த வழி - 49 ஓ.
ஓட்டு போடாமல் இருப்பது, நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதாகும்.
49 ஓ போடுவது, நம்மை இனி ஏமாற்ற முடியாது என்று அறிவிப்பதாகும்.
ஓட்டு போடுங்க. 49 ஓ போடுங்க.
ஓ' போடு கீழ் வரும் கோரிக்கைகளை வலியுறுத்துகிறது.
1. எல்லா வாக்காளர்களும் ஓட்டு போட வேண்டும். ஓட்டு போடாமல் இருப்பது அரசியலின் தரத்தை மேம்படுத்த விடாமல் தடுப்பதாகும்.
2. எந்த வேட்பாளரும் ஏற்கத் தகுந்தவராக இல்லை என்றால் அதை அரசியல் கட்சிகளுக்கு உணர்த்துவதற்கான சிறந்த வழி ஓட்டு போடாமல் இருப்பது அல்ல. 49 ஓவின் கீழ் பதிவு செய்வதே சரியான முறையாகும்.
3. ஓட்டுச் சாவடி அதிகாரிகளுக்கு வகுப்பு நடத்தும்போது தவறாமல் 49 ஓ பிரிவு பற்றி கற்றுத் தருவது தேர்தல் ணையத்தின் கடமையாகும். ஓட்டுச் சாவடிக்கு வந்து 49 ஓ பிரிவின் கீழ் பதிவு செய்ய விரும்பும் எந்த வாக்காளரையும், அது பற்றி எனக்குத் தெரியாது என்று சாவடி அதிகாரி திருப்பி அனுப்புவது தவிர்க்கப்பட வேண்டும்.
இந்தப் பிரசுரத்தை இயன்ற அளவுக்கு பரப்புங்கள். இந்தக் கருத்தை நண்பர்களுடன் விவாதியுங்கள்.

< இது கிழ்க்கண்ட வலைபூவிளிருந்து எடுக்கப்பட்டது. நன்றிகள் ஸ்ரீ.ராம் >
     http://gsram83.blogspot.in/

இது பற்றிய தகவல்கள் மேலும் அறிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.

காதல் மன்னன்

உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னை கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே
உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
ஏன் பிறந்தேன் என்று நான் இருந்தேன்
உன்னை பார்த்தவுடன் உண்மை நான் அறிந்தேன்
என்னுயிரில் நீ பாதியென்று
உன் கண்மணியில் நான் கண்டுகொண்டேன்
எத்தனை பெண்களை கடந்திருப்பேன்
இப்படி என் மனம் துடித்ததில்லை
இமைகள் இரண்டையும் திருடிக்கொண்டு
உறங்க சொல்வதில் நியாயமில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ
யே யே யே யே யே...
தன்னை தருவாயோ இல்லை கறைவாயோ
உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
நீ நெருப்பு என்று தெரிந்த பின்னும்
உன்னை தொட துணிந்தேன் என்ன துணிச்சலடி
மணமகளாய் உன்னை பார்த்த பின்னும்
உன்னை சிறையெடுக்க மனம் துடிக்குதடி
மரபு வேலிக்குள் நீயிருக்க
மறக்க நினைக்கிறேன் முடியவில்லை
இமய மலை என்று தெரிந்த பின்னும்
எறும்பின் ஆசையோ அடங்கவில்லை
நீ வருவாயோ இல்லை மறைவாயோ
யே யே யே யே யே
தன்னை தருவாயோ இல்லை கறைவாயோ
உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே
என் நினைவு தெரிந்து நான் இது போல இல்லையே
எவளோ எவளோ என்று நெடுநாள் இருந்தேன்
இரவும் பகலும் சிந்தித்தேன்
இவளே இவளே என்று இதயம் தெளிந்தேன்
இளமை இளமை பாதித்தேன்
கொள்ளை கொண்ட அந்த நிலா
என்னை கொன்று கொன்று தின்றதே
இன்பமான அந்த வலி
இன்னும் வேண்டும் வேண்டும் என்றதே
உன்னை பார்த்த பின்பு நான் நானாக இல்லையே!!!!!!!
காதல் மன்னன்

கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

ஆய கலைகள் அறுபத்து நான்கினையும்
ஏய உணர்விக்கும் என் அன்னை
தூய உருப்பளிங்கு போல் வழ என்
உள்ளத்தினுள்ளே இருப்பவள் இங்கு
வாராது இடர்
படிக நிறமும் பவளச் செவ்வாயும்
கடிகமல் பூந்தாமரை போற்கையும்
துடி இடையும்
அல்லும் பகலும் அனவரதம்
துதித்தால்
கல்லும் சொல்லாதோ கவி
தானனா தானனன தன்னன்னானா
தான தான நானா தான நானா தன்னன்னானா
தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
எத்தனை சபைகள் கண்டோம்
எத்தனைஎத்தனை தடையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
எத்தனை சபைகள் கண்டோம் எத்தனை
எத்தனை தடையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
இது மக்கள் பாட்டு தன்மானப்பாட்டு
இது போராடும் உங்கள் வாழ்கைப்பாட்டு
கல்லூரிப்பெண்கள் பாடும் கன்னிப்பாட்டு
சபைகளை வென்றுவரும் சபதம் போட்டு
நாம் கட்டும் பாட்டு ஈரம் சொட்டும் பாட்டு
கட்டிச்செந்தேனாய் நெஞ்சில் கொட்டும் பாட்டு
தாய்ப்பாலைப்போல் ரத்தத்தில் ஓட்டும் பாட்டு
தமிழ்மக்கள் வீட்டைச்சென்று தட்டும் பாட்டு
மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
இனி கண்ணீர் வேண்டாம் ஒரு கவிதை செய்க
எங்கள் கானங்கள் கேட்டுக் காதல் செய்க
நம் மண்ணுக்கும் விண்ணுக்கும் பாலம் செய்க
நலம் பெற வேண்டும் என்றால் நன்மை செய்க
நம் பூமி மேலே புது பார்வை கொள்க
நம் இயற்கை மேல் இன்னும் இச்சை கொள்க
கொஞ்சம் நிலவுக்கு நேரம் வைத்து தூக்கம் கொள்க
பாறைக்குள் வேரைப் போலே வெற்றி கொள்க
மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு
தங்கமே தமிழுக்கில்லை தட்டுப்பாடு ஒரு
சரக்கிருக்குது முறுக்கிருக்குது மெட்டுப்போடு
எத்தனை சபைகள் கண்டோம் எத்தனைஎத்தனை தடையும் கண்டோம்
அத்தனையும் சூடம் காட்டிச் சுட்டுப்போடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு என்
தாய் கொடுத்த தமிழுக்கில்லை தட்டுப்பாடு
மெட்டுப்போடு மெட்டுப்போடு
அட கடலுக்குண்டு கற்பனைக்கில்லை கட்டுப்பாடு

அழகு

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே

எந்தன் உள்ளங்கையில் அவள் உயிரை வைத்தாள்
ஒரே சொல்லில் மனசை தைத்தாள்
சுட்டும் விழி பார்வையில் சுகம் வைத்தாள்
நான் காதலின் கடலில் விழுந்துவிட்டேன்
நீ கரம் ஒன்று கொடுத்தாய் எழுந்துவிட்டேன்

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே

அன்பே உன் ஒற்றை பார்வை அதை தானே யாசித்தேன்
கிடையாதென்றால் கிளியே என் உயிர் போக யோசித்தேன்
நான்கு ஆண்டு தூக்கம் கெட்டு இன்று உன்னை சந்தித்தேன்
காற்றும் கடலும் நிலவும் அடி தீ கூட தித்தித்தேன்
மாணிக்க தேரே உன்னை மலர் கொண்டு பூஜித்தேன்
என்னை நான் கிள்ளி இது நிஜம் தானா சோதித்தேன்
இது போதுமே இது போதுமே
இனி என் கால்கள் வான் போகுமே
என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே

நான் கொண்ட ஆசைகள் எல்லாம் நான்காண்டு ஆசைதான்
உறங்கும் பொழுது ஒலிக்கும் அடி உன் கொலுசு ஓசைதான்
நீ வீசும் பார்வை இல்லை நெருப்பாச்சு நெஞ்சம் தான்
வலியின் கொடுமை மொழிய‌ அடி தமிழ் வார்த்தை கொஞ்சம் தான்
இன்றே தான் பெண்ணே உன் முழு பார்வை நான் கண்டேன்
கை தொட்ட நேரம் என் முதல் மோட்சம் நான் கொண்டேன்
மகராணியே மலர் வாணியே இனி என் ஆவி உன் ஆவியே

என்ன அழகு எத்தனை அழகு
கோடி மலர் கொட்டிய அழகு
இன்று எந்தன் கை சேர்ந்ததே
சின்ன அழகு சித்திர அழகு
சிறு நெஞ்சை கொத்திய அழகு
இன்று எந்தன் தோள் சாய்ந்ததே

***********************************

எட்டில் அழகு பதினெட்டில் அழகு
எந்த பெண்ணும் இருபதில் ரெட்டை அழகு

எட்டில் அழகு பதினெட்டில் அழகு
எந்த பெண்ணும் இருபதில் ரெட்டை அழகு

பெண்ணின் அழகே உச்ச அழகு
பூமியில உள்ளதெல்லாம் மிச்ச அழகு
ஆடை அழகு பாதி அழகு
அந்த சொல்லை மாற்றியது பெண்ணின் அழகு
பெண்ணை கொண்டு கூடியது மண்ணின் அழகு
உதட்டை மூடி சிரிப்பதழகு
உதிரிப்பூக்கள் தொடுப்பதழகு
மணநாள் குறித்ததும் தேதி தாள்களை திருப்பி பார்ப்பது ஓர் அழகு
வானொலியோடு பாடும் அழகு
பாடிக்கொண்டே சமைப்பதழகு
தாமரை இலையில் நீர் அழகு
அட தாவணி பெண் போல் யார் அழகு
பின்னல் ஜடையை பிரிப்பதழகு
தன்னை தானே ரசிப்பதழகு
நல்ல ஆணின் அழகினை ரசிக்கும் பெண்களின் ஓர பார்வைகள் ஓர் அழகு
காதல் பெண்ணின் மிரட்டல் அழகு
ஹய்யோ ஹய்யோ அலட்டல் அழகு
ஒவ்வோர் பெண்ணும் ஒர் அழகு
அந்த ஒன்றுக்குள்ளே நூறழகு

எட்டில் அழகு பதினெட்டில் அழகு
எந்த பெண்ணும் இருபதில் ரெட்டை அழகு

பாரதம்

பாரத சமுதாயம்

பாரத சமுதாயம் வாழ்கவே! - வாழ்க வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்கவே! - ஜய ஜய ஜய
பாரத சமுதாயம் வாழ்க வாழ்க!

முப்பது கோடி ஜனங்களின் சங்கம்
முழுமைக்கும் பொது உடைமை
ஒப்பிலாத சமுதாயம்
உலகத் துக்கொரு புதுமை - வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்க வாழ்க!

மனித ருணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ ? - புலனில்
வாழ்க்கை இனியுண்டோ ? - நம்மி லந்த
வாழ்க்கை இனியுண்டோ ?
இனிய பொழில்கள் நெடிய வயல்கள்
எண்ணரும் பெருநாடு,
கனியும் கிழங்கும் தானி யங்களும்
கணக்கின்றித் தரு நாடு - இது
கணக்கின்றித் தரு நாடு - நித்த நித்தம்
கணக்கின்றித் தரு நாடு - வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்க வாழ்க!

இனியொரு விதிசெய் வோம் - அதை
எந்த நாளும் காப்போம்,
தனியொரு வனுக் குணவிலை யெனில்
ஜகத்தினை அழித்திடு வோம் - வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்க வாழ்க!

எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்
என்றுரைத்தான் கண்ண பெருமான்,
எல்லாரும் அமரநிலை எய்தும்நன் முறையை
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - ஆம் ஆம்
இந்தியா உலகிற் களிக்கும் - வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்க வாழ்க!

எல்லாரும் ஓர்குலம் எல்லாரும் ஓரினம்
எல்லாரும் இந்திய மக்கள்,
எல்லாரும் ஓர்நிறை எல்லோரும் ஓர்விலை
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - நாம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - ஆம்
எல்லாரும் இந்நாட்டு மன்னர் - வாழ்க!
பாரத சமுதாயம் வாழ்க வாழ்க!

**********************************

எங்கள் பாரத நாடு.

பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

ஞானத்தி லேபர மோனத்திலே - உயர்
மானத்தி லேஅன்ன தானத்திலே
கானத்தி லேஅமு தாக நிறைந்த
கவிதையி லேஉயர் நாடு - இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

தீரத்தி லேபடை வீரத்திலே - நெஞ்சில்
ஈரத்தி லேஉப காரத்திலே
சாரத்தி லேமிகு சாத்திரங் கண்டு
தருவதி லேஉயர் நாடு - இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

நன்மையி லேஉடல் வன்மையிலே - செல்வப்
பன்மையி லேமறத் தன்மையிலே
பொன்மயி லொத்திடும் மாதர்தம் கற்பின்
புகழினி லேஉயர் நாடு - இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

ஆக்கத்தி லேதொழில் ஊக்கத்திலே - புய
வீக்கத்தி லேஉயர் நோக்கத்திலே
காக்கத் திறல்கொண்ட மல்லர்தம் சேனைக்
கடலினி லேஉயர் நாடு - இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

வண்மையி லேஉளத் திண்மையிலே - மனத்
தண்மையி லேமதி நுண்மையிலே
உண்மையி லேதவ றாத புலவர்
உணர்வினி லேஉயர் நாடு - இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

யாகத்தி லேதவ வேகத்திலே - தனி
யோகத்தி லேபல போகத்திலே
ஆகத்தி லேதெய்வ பக்திகொண் டார்தம்
அருளினி லேஉயர் நாடு - இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

ஆற்றினி லேசுனை யூற்றினிலே - தென்றல்
காற்றினி லேமலைப் பேற்றினிலே
ஏற்றினி லேபயன் ஈந்திடுங் காலி
இனத்தினி லேஉயர் நாடு - இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

தோட்டத்தி லேமரக் கூட்டத்திலே - கனி
ஈட்டத்தி லேபயிர் ஊட்டத்திலே
தேட்டத்தி லேஅடங் காத நதியின்
சிறப்பினி லேஉயர் நாடு - இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.

தேட்டத்தி லேஅடங் காத நதியின்
சிறப்பினி லேஉயர் நாடு - இந்தப்
பாருக்குள்ளே நல்ல நாடு - எங்கள்
பாரத நாடு.
**************************************

செந்தமிழ் நாடு

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே

வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு..!!!!!

பொதிகைமலை உச்சியிலே

பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல்
ஆடை பூட்டி வைத்த மேனியிலும் தவழ்ந்திடும் தென்றல்
பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்
பதி மதுரை வீதியிலே வலம் வரும் தென்றல்
இந்தப் பாண்டியனார் பைங்கிளியைத் தீண்டிடும் தென்றல்
பொதிகை மலை உச்சியிலே புறப்படும் தென்றல்
கார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி
கார்குழலை நீராட்டி கண்ணிரண்டைத் தாலாட்டி
தேனிதழில் முத்தமிட்டு சிரித்திடும் தென்றல்
வண்ண தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல்
தேகமெங்கும் நீரெடுத்துத் தெளித்திடும் தென்றல்
பொதிகை மலை ...
கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே
கட்டிலிலே சேர்ந்திருக்கும் காதலர்கள் மேனியிலே
வட்டமிட்டு பாதை தேடி மயங்கிடும் தென்றல்
போக வழியில்லாமல் வந்த வழி சுழன்றிடும் தென்றல்
வழியில்லாமல் வந்த வழி சுழன்றிடும் தென்றல்
பொதிகை மலை ...
வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே
வான் பறக்கும் கொடியினிலே மீன் பறக்கும் மதுரையிலே
தான் பறந்து ஆட்சி செய்​யும் தளிர்மணித் தென்றல்
அது வான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல்
வான் பிறந்த போது வந்த வாலிபத் தென்றல்
பொதிகைமலை உச்சியிலே புறப்படும் தென்றல் ...

சொர்க்கமே

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா...ஆஆ ஆஆ ஆஆஆஆ
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கவில்லையே
பாடும் குயில் சத்தம் ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலை இல்லையே
வெத்தலைய மடிச்சி மாமன் அதை கடிச்சி
துப்ப ஒரு வழி இல்லையே
ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கி குளிச்சு
ஆட ஒரு ஓடை இல்லையே
இவ்வூரு என்ன ஊரு நம்மூரு ரொம்ப மேலு
அட ஓடும் பல காரு வீண் ஆடம்பரம் பாரு
ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா...ஆஆ ஆஆ ஆஆஆஆ
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
மாடு கண்ணு மேய்க்க மேயுறதப் பார்க்க
மந்தைவெளி இங்கு இல்லையே
ஆடுபுலி ஆட்டம் போட்டு விளையாட
அரசமர மேடை இல்லையே
காளை ரெண்டு பூட்டி கட்டைவண்டி ஓட்டி
கானம் பாட வழி இல்லையே
தோழிகளை அழைச்சி சொல்லிச் சொல்லி ரசிச்சி
ஆட்டம் போட முடியலையே
ஒரு எந்திரத்தைப்போல அட இங்கே உள்ள வாழ்க்கை
இதை எங்கே போயி சொல்ல மனம் இஷ்டப்படவில்லை
நம்மூரப்போல ஊரும் இல்ல
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா
பல தேசம் முழுதும் பேசும் மொழிகள்
தமிழ் போல் இனித்திடுமா...ஆஆ ஆஆ ஆஆஆஆ
சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப்போல வருமா
அட எந்நாடு என்றாலும் அது நம் நாட்டுக்கீடாகுமா

இது சங்கீத திருநாளோ!

இது சங்கீத திருநாளோ!
புது சந்தோஷம் வரும் நாளோ
ரதி நம் வீட்டில் பிறந்தாளோ
சிறு பூவாக மலர்ந்தாளோ
சின்னச் சின்ன ஆசைகள் சித்திரங்கள் வரைந்தாள்..
முத்தமிட கன்னங்களும் நனைந்தாளே..
கொஞ்சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..
கைகளில் பொம்மைகள் கொண்டு ஆடுவாள்..
கண்களை பின்புறம் வந்து மூடுவாள்..
செல்லம் கொஞ்சித் தமிழ் பாடுவாள்..
தோள்களில் கண்களை மெல்ல மூடுவாள்..
உறங்கும் பொழுதும் என்னைத் தேடுவாள்..
அங்கும் இங்கும் துள்ளி ஓடுவாள்..
பூவெல்லாம் இவை போல அழகில்லை..
பூங்காற்றில் இவை போல சுகமில்லை..
இதுபோல சொந்தங்கள் இனியில்லை..
எப்போதும் அன்புக்கு அழிவில்லை..
இவள்தானே நம் தேவதை..
நடக்கும் நடையில் ஒரு தேர் வலம்..
சிரிக்கும் அழகு ஒரு கீர்த்தனம்;
கண்ணில் மின்னும் ஒரு காவியம்;
மனதில் வரைந்து வைத்த ஒரு ஓவியம்;
நினைவில் மலர்ந்து நிற்கும் ஒரு பூவனம்..
என்றும் எங்கும் இவள் ஞாபகம்..
இவள் போகும் வழியெங்கும் பூவாவேன்..
இருபக்கம் காக்கின்ற கரையாவேன்;..
இமையாடும் பொன்னூஞ்சல் நானாவேன்..
இதயத்தில் சுமக்கின்ற தாயாவேன்..
எப்போதும் தாலாட்டுவேன்..
சின்னச் சின்ன ஆசைகள் சித்திரங்கள் வரைந்தாள்..
முத்தமிட கன்னங்களும் நனைந்தாளே..
கொஞ்சிக் கொஞ்சிப் பிஞ்சு நடை நடந்தாளே..
இது சங்கீத திருநாளே!

காதல் உணர்வுகள்

ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
குயிலு கருங்குயிலு மாமன் மனக் குயிலு
கோலம் போடும் பாட்டாலே
மயிலு இள மயிலு ஆச இள மயிலு
ராகம் பாடும் கேட்டாலே சேதி சொல்லும் பாட்டாலே
நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான் இந்த நேரந்தான்
ஒத்தையிலே அத்த மக உன்ன எண்ணி ரசிச்ச மக
கண்ணு ரெண்டும் மூடலையே காலம் நேரம் கூடலையே
ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே
மாமன் உதடு பட்டு நாதம் தரும் குழலு
நானா மாறக் கூடாதா
நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
கூடும் காலம் வாராதா மாலை தோளில் ஏறாதா
உன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன்
கன்னிப் பொண்ணுதானே என் மாமனே என் மாமனே
ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன் ஓலப் பாய போட்டு வச்சேன்
இஷ்டப் பட்ட ஆச மச்சான் என்ன மேலும் ஏங்க வச்சேன்
ஊரு சனம் தூங்கிருச்சு ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
பாவி மனம் தூங்கலையே அதுவும் ஏனோ புரியல்லையே

வளையோசை

வளையோசை கலகலகலவென
கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலுசிலு என
சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
சின்னப் பெண் பெண்ணல்ல
வண்ணப் பூந்தோட்டம்
கொட்டட்டும் மேளம் தான்
அன்று காதல் தேரோட்டம்
வளையோசை கலகலகலவென
கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலுசிலு என
சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
ஒரு காதல் கடிதம் விழி போடும்
உன்னைக் காணும் சபலம் வரக்கூடும்
நீ பார்க்கும் பார்வைகள் பூவாகும்
நெஞ்சுக்குள் தைக்கின்ற முள்ளாகும்
கண்ணே என் கண் பட்ட காயம்
கை வைக்கத் தானாக ஆறும்
முன்னாலும் பின்னாலும் தள்ளாடும்
செம்மேனி என் மேனி உன் தோளில் ஆடும் நாள்
வளையோசை கலகலகலவென
கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலுசிலு என
சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது
உன்னைக் காணாது உருகும் நொடி நேரம்
பல மாதம் வருடம் என மாறும்
நீங்காத ரீங்காரம் நான்தானே
நெஞ்சோடு நெஞ்சாக நின்றேனே
ராகங்கள் தாளங்கள் நூறு
ராஜா உன் பேர் சொல்லும் பாரு
சிந்தாமல் நின்றாடும் செந்தேனே
சங்கீதம் உண்டாகும் நீ பேசும் பேச்சில்தான்
வளையோசை கலகலகலவென
கவிதைகள் படிக்குது
குளுகுளு தென்றல் காற்றும் வீசுது
சில நேரம் சிலுசிலுசிலு என
சிறகுகள் படபட துடிக்குது
எங்கும் தேகம் கூசுது

குயில் பாடும்

குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ
மழைக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா
மழை மேகம் கூடுறபோது வண்ன மயில் ஆடாதா
என் மேனி தேனெறும்பு என் பாட்டு பூங்கரும்பு
மச்சான் நான் மெட்டெடுப்பேன்
உன்னை தான் கட்டி வைப்பேன்
சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா
உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நானாச்சு கேளய்யா
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ
கண்னா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
கண்னா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான்
பூவான பொண்ணுக்குத்தான் மாமா நீ தேடி சொல்லு
மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா
விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சு பாடும் பாடு கேளையா
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ
மழைக்காத்து வீசுரபோது மல்லிகைப்பூ பாடாதா
மழை மேகம் கூடுறபோது வண்ன மயில் ஆடாதா
என் மேனி தேனெறும்பு என் பாட்டு பூங்கரும்பு
மச்சான் நான் மெட்டெடுப்பேன்
உன்னை தான் கட்டி வைப்பேன்
சுகமாக தாளம் தட்டி பாடட்டுமா
உனக்காச்சு எனக்காச்சு சரி ஜோடி நானாச்சு கேளய்யா
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ
கண்னா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
கண்னா உன் வாலிப நெஞ்சை என் பாட்டு உசுப்புறதா
கற்கண்டு சக்கரையெல்லாம் இப்பத்தான் கசக்குறதா
வந்தாச்சு சித்திரைதான் போயாச்சு நித்திரைதான்
பூவான பொண்ணுக்குத்தான் மாமா நீ தேடி சொல்லு
மெதுவாகத் தூது சொல்லி பாடட்டுமா
விளக்கேத்தும் பொழுதானா இளநெஞ்சு பாடும் பாடு கேளையா
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ
இலையோடு பூவும் தலையாட்டும் பாரு
இலையோடு பூவும் காயும் தலையாட்டும் பாரு பாரு
குழலூதும் கண்ணனுக்கு குயில் பாடும் பாட்டுக் கேட்குதா
குக்கூ குக்கூ குக்கூ
என் குரலோடு மச்சான் உங்க குழலோசை போட்டி போடுதா
குக்கூ குக்கூ குக்கூ

சொல்லாமலே

சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை கடுக்கின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ
நெஞ்சத்தை தொட்டு தொட்டு காதல் செல்லு பச்சைக்கிளி
முத்தங்கள் என்ன சத்தம் மெல்ல வந்து சொல்லடி
சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை கடுக்கின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ
மல்லிகைப்பூ வாசம் என்னை கிள்ளுகின்றது
அடி பஞ்சுமெத்தை முன்னே போல குத்துகின்றது
நெஞ்சுக்குள்ளே ராட்டினங்கள் சுற்றுகின்றது
கண்கள் சத்தம் கேட்டு மத்தளங்கள் கொட்டுகின்றது
கண்ணே உன் முந்தானை காதல் வலையா
உன் பார்வை குற்றால சாரல் மழையா
அன்பே உன் ராஜாங்கம் எந்தன் மடியா
நீ மட்டும் பொன்வீணை எந்தன் இடையா
இடையில் நழுவுதடி உயிரும் கரையுதடி உன்னோடுதான்
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள் கண்மணி
சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை கடுக்கின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ
கண்ணுக்குள்ளே உந்தன் முகம் ஒட்டிக்கொண்டது
சுப சொப்பனங்கள் என்னை வந்து சுற்றிக்கொண்டது
என்னை விட்டு தென்றல் கொஞ்சம் தள்ளிச்சென்றது
நான் உந்தன் பேரை சொன்னபோது அள்ளிக்கொண்டது
அன்பே நான் எந்நாளும் உன்னை நினைக்க
முள்மீது பூவானேன் தேகம் இழக்க
வில்லோடு அம்பாக என்னை இணைத்து
சொல்லாதம் சந்தோஷ யுத்தம் நடந்தது
உலக அதிசயத்தில் ஒன்று கூடியது நம் காதலா
நெஞ்சுக்குள் ஓடுதடி சின்ன சின்ன மின்னல் வெடி
பஞ்சுக்குள் தீயைப்போல பற்றிக்கொள் கண்மணி
சொல்லாமலே யார் பார்த்தது
நெஞ்சோடுதான் பூ பூத்தது
மழை கடுக்கின்றதே அடி அது காதலா
தீ குளிர்கின்றதே அடி இது காதலா
இந்த மாற்றங்கள் உன்னாலே உருவானதோ

கண்ணம்மா

கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி...!
நெடுங்காலமாய் புழங்காமலே
எனக்குள்ளே நேசம் கிடக்கின்றதே..
உனைப்பார்த்ததும் உயிர் தூண்டவே
உதடுகள் தாண்டி தெறிக்கின்றதே..
தரிசான என் நெஞ்சில் விழுந்தாயே விதையாக..
நீ அன்பாய் பார்க்கும் பார்வையிலே என் ஜீவன் வாழுதடி...
நீ ஆதரவாக தோள் சாய்ந்தால் என் ஆயுள் நீளுமடி...!
கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
மழை மேகமாய் உருமாறவா..
உன் வாசல் வந்து உயிர் தூவவா
மனம் வீசிடும் மலராகவா..
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா..
கண்ணாக கருத்தாக
உனை காப்பேன் உயிராக..
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே..
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே..!
கண்ணுக்குள்ளே உன்னை
வைத்தேன் கண்ணம்மா -நான்
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
கண்கள் மூட மாட்டேனடி செல்லம்மா
அடி நீதான் என் சந்தோசம் பூவெல்லாம் உன் வாசம்
நீ பேசும் பேச்சேல்லாம் நான் கேட்கும் சங்கீதம்..
உன் புன்னகை நான் சேமிக்கின்ற செல்வம்மடி..
நீ இல்லையென்றால் நானும் இங்கே ஏழையடி...!

தேடும் கண் பார்வை

தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
சொன்ன வார்த்தை காற்றில் போனதோ
வெறும் மாயமானதோ...
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
கொஞ்ச நேரம் நீயும் காத்திரு
வரும் பாதை பார்த்திரு...
தேடும் கண் பார்வை தவிக்க...துடிக்க...
காண வேண்டும் சீக்கிரம்... என் காதல் ஓவியம்
வாராமலே என்னாவதோ... என் ஆசை காவியம்
வாழும் காலம் ஆயிரம் நம் சொந்தம் அல்லவா
கண்ணாளனே நல் வாழ்த்துகள் என் பாட்டில் சொல்லவா...
கனிவாய்...மலரே... உயிர் வாடும் போது ஊடலென்ன
பாவம் அல்லவா...
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
தேடி தேடி பார்க்கிறேன் என் கால்கள் ஓய்ந்ததே
காணாமலே இவ்வேளையில் என் ஆவல் தீருமோ
காற்றில் ஆடும் தீபமோ உன் காதல் உள்ளமே...
நீ காணலாம் இந்நாளிலே என் மேனி வண்ணமே
பிரிந்தோம்... இணைவோம்...
இனி நீயும் நானும் வாழ வேண்டும்
வாசல் தேடி வா...
தேடும் கண் பார்வை தவிக்க துடிக்க
தேடும் பெண் பாவை வருவாள் தொடுவாள்
சொன்ன வார்த்தை காற்றில் போகுமோ
வெறும் மாயமாகுமோ...
தேடும் கண் பார்வை தவிக்க... துடிக்க !!!!

ஆசையக் காத்துல தூது

ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு குயில்
கேக்குது பாட்ட நின்னு
ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு குயில்
கேக்குது பாட்ட நின்னு
வாசம் பூவாசம் வாலிபக் காலத்து நேசம்
மாசம் தை மாசம் மல்லிக பூமணம் வீசும்
நேசத்துல, வந்த வாசத்துல,
நெஞ்சம் பாடுது சோடியத் தேடுது
பிஞ்சும் வாடுது வாடையில
கொஞ்சும் ஜாடையப் போடுது, பார்வையும்
சொந்தம் தேடுது மேடையில
தேனோ பூந்தேனு, தேன்துளி கேட்டது நானு
மானோ பொன்மானு தேயில தோட்டத்து மானு
ஓடிவர, உன்னத் தேடிவர,
தாழம்பூவுல தாவுற காத்துல
தாகம் ஏறுது ஆசையில
பார்க்கும்போதுல ஏக்கம் தீரல
தேகம் வாடுது பேசையில
ஆசையக் காத்துல தூது விட்டு
ஆடிய பூவுல வாடை பட்டு
சேதியக் கேட்டொரு ஜாடை தொட்டு
பாடுது பாட்டு ஒன்னு குயில்
கேக்குது பாட்ட நின்னு

விஜய்-சூரியா

எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடி சொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே
நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா
என் தூக்கத்தில் என் உதடுகள்
உன் பேர் சொல்லிப் புலம்பும் புலம்பும் ஊரே எழும்பும்
என் கால்களில் பொன் கொலுசுகள்
உன் பேர் சொல்லி ஒலிக்கும் ஒலிக்கும் உயிரை எடுக்கும்
பூப்போல இருந்த மனம் இன்று
மூங்கில்போல் வெடிக்குதடி சகியே சகியே சகியே
இதயம் துடிக்கும் உடலின் வெளியே
எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடிக் கொல்லாதே
என் வீதியில் உன் காலடி
என் ராவெல்லாம் ஒலிக்கும் ஒலிக்கும் இதயம் துடிக்கும்
உன் ஆடையின் பொன்னூலிலே
என் ஜீவனும் துடிக்கும் துடிக்கும் உயிரே வலிக்கும்
நான் உன்னை துரத்தியடிப்பதும்
நீ எந்தன் தூக்கம் பறிப்பதும் சரியா சரியா முறையா
காதல் பிறந்தால் இதுதான் கதியா
எங்கெங்கே எங்கெங்கே எங்கே
இன்பம் உள்ளதென்று தேடி சொல்லாதே
ஓ தள்ளிப்போ தள்ளிப்போ இந்தப்
பஞ்சு நெஞ்சம் பத்திக்கொள்ளும் வராதே
நான் ஒரு குமிழி நீ ஒரு காற்று
தொடாதே நீ தொடாதே
நீ ஒரு கிளிதான் நான் உந்தன் கிளைதான்
செல்லாதே தள்ளிச் செல்லாதே
என்னம்மா என்னம்மா உந்தன்
நெஞ்சில் உள்ள வலி என்ன என்னம்மா

கல்யாணமாலை

கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்!
சுதியோடு லயம் போலவே,
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!
கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்!
சுதியோடு லயம் போலவே,
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!

வாலிபங்கள் ஓடும், வயதாகக்கூடும்,
ஆனாலும் அன்பு மாறாதது!
மாலையிடும் சொந்தம், முடிபோட்ட பந்தம்,
பிரிவென்னும் சொல்லே அறியாதது!
அழகான மனைவி, அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே!
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே!
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி!
நெஞ்சம் எனும் வீணை பாடுமே தோடி!
சந்தோஷ சாம்ராஜ்யமே!
கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்!
சுதியோடு லயம் போலவே,
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!

கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து,
பாடென்று சொன்னால் பாடாதம்மா!
தோகை மயில் தன்னைச் சிறை வைத்துப் பூட்டி,
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா!
நாள்தோறும் ரசிகன், பாராட்டும் கலைஞன்,
காவல்கள் எனக்கில்லையே!
சோகங்கள் எனக்கும், நெஞ்சோடு இருக்கும்,
சிரிக்காத நாளில்லையே!
துக்கம் சில நேரம் பொங்கி வரும்போதும்
மக்கள் மனம் போலே பாடுவேன் கண்ணே!
என் சோகம் என்னோடுதான்!

கல்யாணமாலை கொண்டாடும் பெண்ணே!
என் பாட்டைக் கேளு உண்மைகள் சொன்னேன்!
சுதியோடு லயம் போலவே,
இணையாகும் துணையாகும் சம்சார சங்கீதமே!

ஞாபகம்

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
என் கண்களின் இமைகளிலே உன் ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே உன் ஞாபகம் கலந்திருக்கும்
ஞாபகங்கள் மழையாகும் ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும் ஞாபகங்கள் நீரூற்றும்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
கவிதை என்றாலே உன் பெயரின் ஞாபகமே
கேட்கும் இசையெல்லாம் நீ பேசும் ஞாபகமே
பூக்களின் மேலே பனித்துளி பார்த்தால் முகப்பரு ஞாபகமே
அதிர்ஷ்டம் என்றதும் உந்தன் மச்சம் ஞாபகம்
அழகு என்றதும் உந்தன் மொத்தம் ஞாபகம்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்
தென்றல் என்றாலே உன் வாசல் ஞாபகமே
வசந்தம் என்றாலே உன் வருகை ஞாபகமே
தொட்டால் சுருங்கி பார்த்தால் உந்தன் வெட்கம் ஞாபகமே
அலைகள் போலவே மோதும் உந்தன் ஞாபகம்
மறந்துபோனதே எனக்கு எந்தன் ஞாபகம்
ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்கும்
கேட்கும்போதெல்லாம் உன் ஞாபகம் தாலாட்டும்

மணியே மணிக்குயிலே

மணியே மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!
கொடியே கொடிமலரே, கொடியிடையின் நடையழகே !
மணியே, மணிக்குயிலே, மாலையிளங்கதிரழகே!
கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!
தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்;
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..
மணியே, மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
கொடியே, கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!
பொன்னில் வடித்த சிலையே!ப்ரம்மன் படைத்தான் உனையே!
வண்ணமயில் போல வந்த பாவையே..
எண்ண இனிக்கும் நிலையே!இன்பம் கொடுக்கும் கலையே!
உன்னை எண்ணி வாழும் எந்தன் ஆவியே..
கண்ணிமையில் தூண்டிலிட்டு,காதல்தனை தூண்டிவிட்டு,
எண்ணி எண்ணி ஏங்கவைக்கும், ஏந்திழையே!
பெண்ணிவளை ஆதரித்து,பேசித்தொட்டுக் காதலித்து,
இன்பம்கொண்ட காரணத்தால், தூங்கலையே!
சொல்லிச் சொல்லி ஆசை வைத்தேன்,
துடியிடையில் பாசம் வைத்தேன்,
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -
பாமரப் பாடல் கேளடி..
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
கொடியே கொடிமலரே, கொடியிடையின் நடையழகே!
தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -பாமரப் பாடல் கேளடி..
கண்ணிமைகளை வருத்தி,கனவுகளைத் துரத்தி,
மென்மனதினால் முடித்த மூக்குத்தி..
என்னுயிரிலே ஒருத்தி,கண்டபடி எனைத் துரத்தி,
அம்மனவள் வாங்கிக்கொண்ட மூக்குத்தி..
கோடிமணி ஓசைநெஞ்சில்,கூடிவந்துதான் ஒலிக்க,
ஓடிவந்து கேட்கவரும், தேவதைகள்
சூடமலர் மாலை கொண்டு,தூபமிட்டு தூண்டிவிட்டு,
கூடவிட்டு வாழ்த்தவரும், வானவர்கள்
அந்தி வரும் நேரமம்மா,ஆசைவிளக்கேற்றுதம்மா,
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் பாமரப் பாடல் கேளடி..
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
மணியே மணிக்குயிலே, மாலையிளம் கதிரழகே!
தொட்ட இடம் பூமணக்கும்;துளிர்க்கரமோ தொட இனிக்கும்;
பூமரப் பாவை நீயடி, இங்கு நான் பாடும் -பாமரப் பாடல் கேளடி..

அத்திரி பத்திரி

அத்திரி பத்திரி கத்திரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ?
என் படிப்ப நான் தொலைச்சேன்
என் மனச நான் தொலைச்சேன்
கணக்கு புக் தொறந்தா
உன் காதல் முகம் தோணும்
காம்பஸ் போல தானே
என் கண்ணு உன்ன சுத்தும்
என் மாமா மகன் நீங்க
என் அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ
அத்திரி பத்திரி கத்திரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ?
பரீட்சை எழுதும் நேரம்
உன் சிரிப்பு தானே - நெனச்சாலே
பிள்ளையார் சுழிய நெனச்சி
உன் பேரை தானே - வரைஞ்சாலே
ஸ்ரீ ராமஜெயம் எனக்கு எனக்கு உன்
பேர்தான் பேர்தான் இனிமேலே
கிளிபிள்ளையாய் தினமும் தினமும்
அதை சொல்வேன் சொல்வேன் தன்னாலே
திருக்குறளாய் திருக்குறளாய் உந்தன்
குரல்தான் உனக்கு உனக்கு
தலைநகரம் தலை நகரம் உந்தன்
தெருதான் உனக்கு உனக்கு
உயிரே உயிரே .....
என் மாமா மகன் நீங்க என்
அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ
ஒருநாள் ஒருநாள் ஒருநாள் ஓரு
காதல் பூதம் - புடிச்சிருச்சு
மறுநாள் மறுநாள் மறுநாள் அது
உன்பேர் சொல்லி - கடிச்சிருச்சு
உதடுகளை உணவாய் உணவாய்
அது கேட்கும் கேட்கும் தினம்தோறும்
ஊருசனம் உறங்கிய பின்னே அது
முழிச்சி மெதக்கும் கதவோரம்
குலசாமி திருநீறு வெச்சு பார்த்தேன்
அது நீ இல்ல
குத்தாலம் கோவிலில் தாலி கட்ட
சொல்லிச்சு நில்லு
உயிரே உயிரே ......
என் மாமா மகன் நீங்க என்
அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ
அத்திரி பத்திரி கத்திரிக்கா
என் அத்தான் நெஞ்சில் இடம் இருக்கா ?
என் படிப்ப நான் தொலைச்சேன்
என் மனச நான் தொலைச்சேன்
கணக்கு புக் தொறந்தா
உன் காதல் முகம் தோணும்
காம்பஸ் போல தானே
என் கண்ணு உன்ன சுத்தும்
என் மாமா மகன் நீங்க
என் அத்தான் முறை தாங்க
ஹே டும் டும் பீப்பீ
டும்டும் பீப்பீ எப்போ எப்போ எப்போ எப்போ !!!!

அம்மன்


கோல விழியம்மா ராஜா காளியம்மா
பளையதாயம்மா பங்காரு மாயம்மா
முத்து மாரியம்மா பத்ர காளியம்மா
முண்டக்கன்னியம்மா எங்க கண்ணியம்மா
குங்கும கோதையே அன்னை யசோதையே
செந்தூர தேவானை சிங்கார ரூபினி
அன்னை விசாலாட்சி சொவ்தாம்பா விருப்பாட்சி
சுந்தர நீலியே சௌந்தர வல்லியே
வல்லியம்மா எங்கள் அல்லியம்மா
தங்க செல்லியம்மா செல்ல கொள்ளியம்மா
அடி அங்களாம்மா எங்கள் செங்கலம்மா
அருள் முப்பதம்மா அனல் வெப்பதம்மா
சிங்காரி ஓங்காரி சங்கரி உமையத்தா
மண்மாரி பன்னாரி செல்லாயி சிலம்பாயி
மருவத்தூர் அம்மாவே ஓம் சக்தியே
ஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா , வேறு துணை யாரம்மா ?
குதமில்லா ஓரு உத்தம நெஞ்சுக்கு
சோதனைகள் எதுக்கு ? - அவர்
கட்டிய தாலிக்கும் போட்டுக்கும் பூவுக்கும்
காவல் கொடு எனக்கு ..
நீதிக்கு கண் தந்து சோதிக்கும் துன்பத்தை
நீ வந்து மற்றிடம்மா ...
மடியேந்தி பிச்சை கேட்கிறேன் - அம்மா
மறு வாழ்வு உன்னை கேட்கிறேன்
காணாத பொய் வழக்கு வீணாக வந்திருக்கு
வாதாட சாட்சி ஏதம்மா ?
ஊர் வழ ஆட்சி செய்யும் மீனாக்ஷி தேவியம்மா
நான் வாழ நீதி கூறம்மா
சோதனையை வேதனையை சேர்த்து விட்டேன் உன்னடியில்
சோகங்களை திரோகங்களை தீர்த்துவிடு என் வழியில்
வாழ்வரசி ஆவதற்கு தாலி தந்த கண்ணியம்மா
வாசல் வந்த பிள்ளை மனம் வாடலமா பொன்னியம்மா
அகிலாண்டேஸ்வரி சபை ஏறம்மா
அவர் மீது வீழ்ந்த பழி தீரம்மா
திருபதூர் கௌமாரி திருவானைக்கா அம்மா
மாங்காட்டு காமாக்ஷி மலையாள பகவதி
தஞ்சாவூர் மாரியே கண்யாகுமரியே
மலையனூர் செண்பகம் மயிலாப்பூர் கற்பகம்
கன்னிகா பரமேஸ்வரி அன்னையே ஜகதம்பா
துளுக்கனதம்மாவே துர்க்கை அம்மாவே
முக்குழி அம்மாவே வழங்கி அம்மாவே
எல்லை அம்மாவே கங்கை அம்மாவே
நாச்சியம்மா தங்க பேச்சியம்மா
அன்னை மூகாம்பிகா எங்கள் யோகம்பிகா
அடி அலமேலம்மா தாயே வரிக்கோலம்மா
துய தஞ்சையம்மா வீர படவேட்டம்மா
வைரவி பைரவி தேனாட்சி திருபட்சி
அம்மாயி ப்ரம்மாயி அழக்கம்மா கனகம்மா
அதி பராசக்தியே ......
ஓரு தாலி வரம் கேட்டு வந்தேன் தாயம்மா
கண் திறந்து பாரம்மா , வேறு துணை யாரம்மா ?
ஓயாத சத்தியமும் சாயாத சக்கரமும்
நீதானே பூமி மீதிலே ..
அத்தா நீ கண் திறந்து பத்தாலே வஞ்சனைகள்
வீழாதோ உந்தன் காலிலே ..
பெண்ணினங்கள் வேண்டுவது அன்னை உந்தன் குங்குமமே
குங்குமத்தில் நீ இருந்து காக்கணும் என் மங்கலமே
சத்தியத்தை காக்க உந்தன் சக்கரத்தை சுத்தி விடு
உக்கிரத்தில் நீ எழுந்து உண்மைக்கொரு வெற்றி கொடு
உன் நீதி பூமியில் தவறாகுமா ?
என் வாழ்வில் அது இன்னும் வெகு தூரமா ?
தாயே பெரியம்மா தாலி தரும் அம்மா
தெப்ப குலதம்மா தேரடி பூவம்மா
மங்களம் நீயம்மா மந்தவெளி அம்மா
அர்தனாரியம்மா அன்னை ஜோதியம்மா
வடிவுடையம்மாவே திரிப்புரசுந்தரி
வேற்காடு மாயம்மா கஸ்துரி தாயம்மா
உருமாறி உலகம்மா உருத்ரக்ஷா திலகம்மா
உண்ணாமுலை அம்மா பன்னாரி அம்மாவே
மகேஸ்வரி சர்ப்ப யாகெஸ்வரி
அடி லோகேஸ்வரி நல்ல யோகேஸ்வரி
சக்தி ஜெகதீச்வரி அன்னை பரமேஸ்வரி
எங்கள் புவனேஸ்வரி தாயே ராஜேஸ்வரி
அபிராமி சிவகாமி அருள்மாரி மகாமாயி
மமுண்டி சாமுண்டி பாஞ்சாலி அத்தாயீ
சோலையூர் மகாமாயி ஓம் சக்தி தாயே

அன்பே அன்பே

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே

பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன்
அடடா பிரம்மன் கஞ்சனடி
சற்றே நிமிர்ந்தேன் தலைசுற்றிப் போனேன்
ஆஹா அவனே வள்ளலடி
மின்னலைப் பிடித்துத் தூரிகை சமைத்து
ரவிவர்மன் எழுதிய வதனமடி
நூறடிப் பளிங்கை ஆறடியாக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி
இதுவரை மண்ணில் பிறந்த பெண்ணில்
நீதான் நீதான் அழகியடி
இத்தனை அழகும் மொத்தம் சேர்ந்து
என்னை வதைப்பது கொடுமையடி

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே

கொடுத்து வைத்தப் பூவே பூவே
அவள் கூந்தல் மணம் சொல்வாயா
கொடுத்து வைத்த நதியே நதியே
அவள் குளித்தச் சுகம் சொல்வாயா
கொடுத்து வைத்தக் கொலுசே
கால் அழகைச் சொல்வாயா
கொடுத்து வைத்த மணியே
மார் அழகைச் சொல்வாயா
அழகிய நிலவில் ஆக்ஸிஜன் நிரப்பி
அங்கே உனக்கொரு வீடு செய்வேன்
உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு
உயிருக்கு உயிரால் உறையிடுவேன்
மேகத்தைப் பிடித்து மெத்தைகள் அமைத்து
மெல்லிய பூ உன்னைத் தூங்க வைப்பேன்
தூக்கத்தில் மாது வேர்க்கின்ற போது
நட்சத்திரம் கொண்டு நான் துடைப்பேன்
பால் வண்ணப் பறவை குளிப்பதற்காக
பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்
தேவதை குளித்த துளிகளை அள்ளித்
தீர்த்தம் என்றே நான் குடிப்பேன்

அன்பே அன்பே கொல்லாதே
கண்ணே கண்ணைக் கிள்ளாதே
பெண்ணே புன்னகையில் இதயத்தை வெடிக்காதே
ஐயோ உன்னசைவில் உயிரைக் குடிக்காதே . 

வாழ்கை


ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு…
ஒன்றே சொல்வார் ஒன்றே செய்வார்
உள்ளத்தில் உள்ளது அமைதி
இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி…
வரும் துன்பத்தில் இன்பம் பத்தாகும்
இந்த இரண்டு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு…
உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால்
உலகம் உன்னிடம் மயங்கும்….
நிலை உயரும் போது பணிவு கொண்டால் உயிர்கள் உன்னை வணங்கும்
உண்மை என்பது அன்பாகும் – பெரும்
பணிவு என்பது பண்பாகும் – இந்த
நான்கு கட்டளை அறிந்த மனதில்
எல்லா நன்மையும் உண்டாகும்
எல்லா நன்மையும் உண்டாகும்
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு…
ஆசை கோபம் களவு கொள்பவன் பேசத்தெரிந்த மிருகம்..
அன்பு நன்றி கருணை கொண்டவன் மனித வடிவில் தெய்வம்..
இதில் மிருகம் என்பது கள்ள மனம்
உயர் தெய்வம் என்பது பிள்ளை மனம்
இந்த ஆறு கட்டளை அறிந்த மனது
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆண்டவன் வாழும் வெள்ளை மனம்
ஆறு மனமே ஆறு -அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
சேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
தெய்வத்தின் கட்டனை ஆறு….

அம்மா

ஆசைப் பட்ட எல்லாத்தையும்
காசு இருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும் அம்மாவ வாங்க முடியுமா
ஆசைப் பட்ட எல்லாத்தையும்
காசு இருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும் அம்மாவ வாங்க முடியுமா
ஆயிரம் உறவு உன்னை தேடி வந்து நின்றாலும்
தாய் போல தாங்க முடியுமா
ஆயிரம் உறவு உன்னை தேடி வந்து நின்றாலும்
தாய் போல தாங்க முடியுமா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாரடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதடா தாயடா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாரடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதடா தாயடா
ஆசைப் பட்ட எல்லாத்தையும்
காசு இருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா நீயும் லாலாலா.....லாலாலா.....லாலாலா.....லாலாலா.....
பட்டினியா கிடந்தாலும் பிள்ளைக்கு பால் கொடுப்பா
பால் குடிக்கும் பிள்ளை முகம் பார்த்தே பசி மறப்பா
இளவட்டம் ஆன பின்பும்
எண்ணை தேய்ச்சு குளிக்க வைப்பா
உச்சி முதல் பாதம் வரை
உச்சி கொட்டி மகிழ்ந்திடுவா
நெஞ்சிலே நடக்க வைப்பா
நிலாவ பிடிக்க வைப்பா
பிஞ்சு விரல் நகம் கடிப்பா
பிள்ளை எச்சில் சோறு தின்பா
பல்லு முளைக்க நெல்லுமுனைய
மெல்ல மெல்ல தான் கீறி விடுவா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாரடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதடா தாயடா
ஆசைப் பட்ட எல்லாத்தையும்
காசு இருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும் அம்மாவ வாங்க முடியுமா
மண்ணில் ஒரு செடி முளைச்சால்
மண்ணுக்கு அது பிரவசம் தான்
உன்னைப் பெற துடி துடிச்சால்
அன்னைக்கு அது பூகம்பம் தான்
சூரியனைச் சுற்றிக் கொண்டே
தன்னை சுற்றும் பூமியம்மா
பெற்றெடுத்த பிள்ளையச் சுத்தி
பித்துக் கொள்ளும் தாய்மையம்மா
கர்ப்பத்தில் நெழிந்த உன்னை
நுட்பமாய் தொட்டு ரசிப்பா
பேதை போல் அவள் இருப்பா
மேதையாய் உன்னை வளர்ப்பா
என்ன வேண்டும் இனி உனக்கு
அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு 
இனி உனக்கு அன்னை மடியில் சொர்க்கம் இருக்கு
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாரடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதடா தாயடா
ஆசைப் பட்ட எல்லாத்தையும்
காசு இருந்தா வாங்கலாம்
அம்மாவ வாங்க முடியுமா
நீயும் அம்மாவ வாங்க முடியுமா
ஆயிரம் உறவு உன்னை
தேடி வந்து நின்றாலும்
தாய் போல தாங்க முடியுமா
உன்னையும் என்னையும் படைச்சது இங்கே யாரடா
தெய்வம் ஒவ்வொரு வீட்டிலும் இருக்குதடா தாயடா



*********************************************************
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
வாழும் காலம் யாவுமே..
தாயின் பாதம் சொர்க்கமே
வேதம் நான்கு சொன்னது...
அதை நான் அறிவேனே!!
அம்மா என்னும் மந்திரமே ..
அகிலம் யாவும் ஆள்கிறதே
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
வேர் இல்லாத மரம்போல்
என்னை நீ பூமியில் நட்டாய்..
ஊரு கண் என் மேல் பட்டால்
உன் உயிர் நோக துடித்தாயே
உலகத்தின் பந்தங்கள் எல்லாம்
.. நீ சொல்லி தந்தாயே
பிறப்புக்கும் இறப்பபுக்கும் இடையில்
வழி நடத்தி சென்றாயே
உனக்கே ஓர் தொட்டில் கட்டி ..
நானே.... தாயாய் மாறிட வேண்டும்
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து
தாய் சொல்கின்ற வார்தைகள் எல்லாம்
.. நோய் தீர்க்கின்ற மருந்தல்லவா
மண் பொன் மேல் ஆசை துறந்த
கண் தூங்காத உயிர் அல்லவா
காலத்தின் கணக்குகளில் செலவாகும்
வரவும் நீ......
சுழலுகின்ற பூமியில் மேலே சுழறாத
பூமி நீ.........
இறைவா நீ ஆணையிடு
தாயே நீ எந்தன் மகளாய் மாற........
ஆராரிராரோ நான் இங்கு பாட
தாயே நீ கண் உறங்கு
என்னோட மடி சாய்ந்து.....!!!!!!!!!!!!!!!

என்னை தேடி காதல்

என்னை தேடி காதல்
என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்து விடும் முன்
செய்தி அனுப்பு …ஹோ
என்னிடத்தில் தேக்கி வைத்த காதல் முழுதும்
உன்னிடத்தில் கொண்டு வர தெரியவில்லை
காதல் அதை சொல்லுகின்ற வழி தெரிந்தால்
சொல்லிஅனுப்பு ..ஹோ
பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசி செல்கிறேன்
மரங்கள் கூட நடப்பதுபோலே
நினைத்து கொள்கிறேன்
கடிதம் ஒன்றில் கப்பல் செய்து
மழையில் விடுகிறேன்
கனவில் மட்டும் காதல் செய்து
இரவை கொல்கிறேன்
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன்
செய்திஅனுப்பு …ஹோ
யாரோ உண் காதலில் வாழ்வது யாரோ
உண் கனவினில் நிறைவது யாரோ
என் சலனங்கள் தீர்த்திட வாராயோ
ஏனோ என் இரவுகள் நீள்வதுஏனோ
ஒரு பகல் என சுடுவது ஏனோ
என் தனிமையின் அவஸ்தைகள் தீராதோ
காதல் தர நெஞ்சம் காத்து இருக்கு
காதலிக்க அங்கு நேரம் இல்லையா
கிளையை போல் என் இதயம் தவறிவிழுதே
என்னை தேடி காதல் என்ற வார்த்தை அனுப்பு
உன்னை தேடி வாழ்வில் மொத்த அர்த்தம் தருவேன்
செல்லரிக்கும் தனிமையில் செத்துவிடும் முன்
செய்திஅனுப்பு …ஹோ
பூக்கள் உதிரும் சாலை வழியே
பேசி செல்கிறேன்
மரங்கள்கூட நடப்பதுபோலே
நினைத்து கொள்கிறேன்

காதல்

காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்
தேவதை கதை கேட்ட போதெல்லாம்
நிஜமென்று நினைக்கவில்லை
நேரில் உன்னையே பார்த்த பின்பு நான்
நம்பி விட்டேன் மறுக்கவில்லை
அதிகாலை விடிவதெல்லாம்
உன்னை பார்க்கும் மயக்கத்தில் தான்
அந்தி மாலை மறைவதெல்லாம்
உன்னை பார்த்த துறக்கத்தில் தான்
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்
உன்னை கண்ட நாள் ஒலி வட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி
கடலோடு பேச வைத்தாய்
கடிகாரம் வீச வைத்தாய்
மழையோடு குளிக்க வைத்தாய்
வெயில் கூட ரசிக்க வைத்தாய்
காதல் வைத்து காதல் வைத்து காத்திருந்தேன்
காற்றில் உந்தன் குரல் மட்டும் கேட்டுருந்தேன்
சிரித்தாய் இசை அறிந்தேன்
நடந்தாய் திசை அறிந்தேன்
காதலெனும் கடலுக்குள் நான் விழுந்தேன்
கரையினில் வந்த பின்னும் நான் மிதந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்
அசைந்தாய் அன்பே அசைந்தேன்
அழகாய் அய்யோ தொலைந்தேன்