Apr 5, 2012

கதிரவனை பார்த்து

கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது

இறைவனின் கலைநயம்
இயற்கையின் அதிசயம்
உலகோரு ஓவியம் என்பேன்
அதில் ஒரு அபிநயம் கண்டேன்
ஆ அஹ்ஹா

கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது

பூபாள ராகம் ஆ.ஆ.ஆ
பூ பாடும் நேரம் ஆ.ஆ.ஆ
தாகம் கொண்ட ஓடை
தாளம் போடும் வேளை
தாகம் கொண்ட ஓடை
தாளம் போடும் வேளை
தடாகம் குதித்திட
தாமரை குளித்ததமா
வெள்ளி நிற மீன்களும்
வெளி வந்து ரசித்ததமா

கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது

பச்சி வண்ண சேலை ஆ.ஆ.ஆ
கட்டிகொண்ட பூமி ஆ.ஆ.ஆ
வானமெங்கும் கவிதை
எழுதி பார்க்கும் பறவை
வானமெங்கும் கவிதை
எழுதி பார்க்கும் பறவை
வண்ண வண்ண கோலங்கள்
போட்டிடும் மேகங்களே
சின்ன குயில் ராகங்கள்
கேட்டிடும் காடுகளே

கதிரவனை பார்த்து காலை விடும் தூது
வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது