Jan 23, 2012

மழை


மழை என்பது நீரானது வானில் இருந்து நிலத்தில் வீழ்வதைக் குறிக்கும். மழை எவ்வாறு ஏற்படுகின்றது எனில், முதலில் கடலில்  இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது கதிரவனின் வெப்பத்தால் நீரவியக்கி  மேலெழுந்து சென்று மேகங்களை  அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடியும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக, திவலைகளாக பூமியின்  மேற்பரப்பில் விழும் போது மழையானது ஏற்படுகிறது. மழை வீழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியகிவிடுகிறது விடுகிறது. பாலைவனம்  போன்ற பகுதிகளில் மொத்த நீரும்  ஆவியாகிவிடுவது உண்டு. ஒரு இடத்தில் மழை அதிகமாகப் பெய்யும் காலம், அவ்விடத்திற்குரிய மழைக்காலம் என அழைக்கப்படுகின்றது.

மழை பெய்யச் செய்யும் பாக்டீரியா
"அமெரிக்காவின் மொன்டானா மாநில பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மழை பெய்விக்கும் பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் வறண்ட பகுதிகளிலும் மழை பெய்விக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. தாவரங்கள் மேல் படரும் பாக்டீரியா காற்று மூலம் விண்ணுக்குச் செல்கிறது. இந்தப் பாக் டீரியா மீது உருவாகும் ஐஸ் பல்கிப் பெருகு கிறது. இந்த ஐஸ்கட்டிகள் மழை மேகங்களாக மாறுகின்றன. சில குறிப்பிட்ட வெப்பநிலையில் மழையாக பொழிகின்றன. இந்த பாக்டீரியாக்கள் உலகம் முழுவதும் எல்லா பகுதிகளிலும் காணப்படுகின்றன. மழை பெய்யும் காலங்களில் தான் இந்த பாக்டீரியாக்கள் பெருகி வளர் கின்றன. இவை 83 டிகிரி சென்டிகிரேட் வெப்பநிலைக்கு உட்பட்ட இடத்தில் மட்டுமே வளர முடியும். தற்போது உலகம் வெப்பமயமாகி வருவதால் இந்த பாக்டீரியாக்கள் அழியும் நிலை கூட ஏற்படலாம். எனவே இந்த பாக்டீரியாக்களை செயற்கை முறையில் உருவாக்குவது குறித்தும் விஞ்ஞானிகள் ஆய்வு செய்து வருகின்றனர்."

மழையின் வகைகள்
  • ஆலி - மழை துளி
  • சோனை - விடா மழை
  • தூறல் - சிறிய மழை,
  • சாரல் - மலையில் பட்டு விழும் மழை.
  • அடைமழை ஐப்பசி மாதம் அடை மழை பெய்யும்; அடைச்ச கதவு திறக்காதபடி அடை மழை பெய்யும் கார்த்திகை மாதம் கன மழை பெய்யும் என்று பழமொழிகள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்திருக்கிறது. இப்படிப் பெய்யும் மழையைத்தான் அடை மழை அல்லது அடைத்த கதவு திறக்காத மழை என்று கூறுகின்றார்கள்.
  • கனமழை - அளவில் பெரிய துளிகள் உள்ள மழை.
  • மாரி - மாரி அல்லது காரியம் இல்லை என்று கூறுகின்றார்கள். மாரி என்ற சொல் மழையைக் குறிக்கிறது. மாரி என்ற சொல்லை காளி என்ற தெய்வத்தைக் குறிக்கவும் பயன்படுத்துகின்றார்கள். மழையையே தெய்வமாகப் பாவித்த ஆதி மனிதனின் அடையாளமாகத்தான் மாரி என்ற சொல் மழையையும், கடவுளையும் குறிக்கிறது.
  • ஆலங்கட்டி மழை - பனி கட்டி கட்டியாக மழையுடனோ அல்லது தனியாகவோ விழும் மழை.
  • பனிமழை - பனி மழையாக பொழிவது. இது பொதுவாக இமயமலை போன்ற சிகரங்களில் காணப்படும்.
  • ஆழிமழை - ஆழி என்றல் கடல் இது கடலில் பொழியும் இடைவிடாத மா மழையை குறிக்கும்.
  • துளி - மழையில்லாவிடில் துன்பமுறும் உலகத்தைப் போல் அருள் இல்லாத அரசினால் குடிமக்கள் தொல்லைப்படுவார்கள். இதில் மழையை துளி என்று கூறப்பட்டுள்ளது. துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன், அளியின்மை வாழும் உயிர்க்கு (திருக்குறள்).
  • பெய் - நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, காலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும். இதில் மழையை பெய் என்று கூறப்பட்டுள்ளது. இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட, பெயலும் விளையுளும் தொக்கு (குறள்).
  • புயல் - புயல் என்பது காற்றுடன் வரும் மழையை குறிக்கும். இதை குறைவில்லாத மழை என்று வள்ளுவர் தருகின்றார். ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும், வாரி வளங்குன்றிக் கால் (குறள்). மழை என்னும் வருவாய் வளம் குன்றிவிட்டால், உழவுத் தொழில் குன்றி விடும்.
  • வருணன் - மழையின் கடவுள் இதுவும் மழையே.

மழை

 மழை
மழைதான் வாழ்வின் ஆதாரம். மனித வாழ்வில், இந்தக் காலத்தில் தண்ணீர், ஆகாரத்தை அடுத்த இடத்தை வகிக்கிறது. மழையின் தேவையை, மழையின் சிறப்பை மக்கள் காலங்காலமாக உணர்ந்துதான் இருக்கின்றனர்.

தெய்வப்புலவர் திருவள்ளுவர், கடவுள் வாழ்த்துப் பாடிய பிறகு, வான் சிறப்பைத்தான் பாடினார். கடவுள் வாழ்த்தையும், வான் சிறப்பையும் சேர்த்து அதைத் திருக்குறளுக்கான பாயிரம் என்றும் அறிஞர் பெருமக்கள் கூறுகின்றார்கள்.

இளங்கோ அடிகள், தன் சிலப்பதிகார காவியத்தில், கடவுள் வாழ்த்துப் பாடாமல் மாமழை போற்றதும்! மாமழை போற்றுதும் என்று இயற்கையைப் போற்றித்தான் பாடியுள்ளார்.

செவ்வியல் இலக்கியங்கள் இப்படிச் சிறப்புற பதிவு செய்த மழையைப் பற்றிக் கிராமத்து மக்கள் தங்கள் பேச்சு மொழிகளில், பழமொழிகளில், வாழ்வியல் அனுபவத்தில் எப்படி எல்லாம் பதிவு செய்துள்ளனர் என்பதைப் பற்றி இக்கட்டுரையில் கூற விரும்புகிறேன்.

மழையின் முக்கியத்துவத்தை உணர்ந்த கிராமத்து மக்கள், மாரி அல்லது காரியம் இல்லை என்று கூறுகின்றார்கள். மாரி என்ற சொல் மழையைக் குறிக்கிறது. மாரி என்ற சொல்லை காளி என்ற தெய்வத்தைக் குறிக்கவும் பயன்படுத்துகின்றார்கள். மழையையே தெய்வமாகப் பாவித்த ஆதி மனிதனின் அடையாளமாகத்தான் மாரி என்ற சொல் மழையையும், கடவுளையும் குறிக்கிறது. முதலில் மனிதன் இயற்கையின் ஒரு கூரான மழையை வணங்கியுள்ளான் என்பதை நாம் எண்ணிப் பார்க்க இடமுள்ளது.

மழையை நம்பி வாழ்கின்ற சம்சாரிகளுக்குத்தான் மழையின் அருமையும் பெருமையும் தெரியும். மழையை மட்டும் நம்பி பயிர் செய்து வாழும் மக்களுக்கு மாதம் மும்மாரி மழை பெய்தால் யோகம்தான்.

சாதாரணத் தாவரங்களுக்கு பத்து நாட்களுக்கு ஒருமுறை ஒரு பத மழை பெய்தால் போதும் எந்த நீர் நிலைகளில் இருந்தும் நீர் பாய்ச்ச வேண்டிய தேவை இருக்காது. இந்த உண்மையைத் தான் மாதம் மும்மாரி என்ற தொடர் விளக்குகிறது.

அந்தக் காலத்தில் ராஜாக்கள் நம் நாட்டில் மாதம் மும்மாரி மழை பெய்கிறதா..? என்றுதான் முதலில் மந்திரிகளிடம் கேட்பார்களாம். மாதம் மும்மாரிப் பொழிகிறது ராஜா என்று பதில் கூறிவிட்டால் ராஜாவுக்கு நிம்மதி வந்து விடுமாம். மழை பெய்து செழித்து வெள்ளாமை விளைச்சல் வந்து விட்டால் போதும் மக்கள் சந்தோசமாக வாழ்வார்கள் என்ற உண்மையைத்தான் இச்செய்திகள் பதிவு செய்துள்ளன.

மழையைப் பற்றியே நிறைய பழமொழிகளை மக்கள் கூறுகின்றார்கள். மழைக்கும் சூலுக்கும் காலம் ஏது? என்று கேட்கிறது ஒரு பழமொழி. கருக்கொண்ட மேகம் எப்போது எங்கு இறங்கிப் பெய்யும்? என்று தீவிரமாக ஆராய்ச்சி செய்த கிராமத்து மக்கள், மழை எப்போது, எந்த அளவு பெய்யும் என்பதைக் கணிக்க முற்பட்டுத் தோற்றுப் போனபின் இந்தப் பழமொழியை உருவாக்கி இருக்கின்றார்கள். மழையைப் போலவே கருவுற்ற பெண்ணும் எப்போது பிரசவிப்பாள் என்பதைக் கணித்துக் கூற முடியாது என்பதை உணர்ந்த கிராமத்து மக்கள் உண்டாக்கிய பழமொழிதான் மழைக்கும் சூலுக்கும் காலம் ஏது? என்பதாகும்.

கோடை காலத்தில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யும். அப்போது கடுமையான மின்னலும் மின்னும். ஐப்பசி மாதம் அடை மழை பெய்யும்; அடைச்ச கதவு திறக்காதபடி அடை மழை பெய்யும்.; கார்த்திகை மாதம் கன மழை பெய்யும் என்று பழமொழிகள் கூறுகின்றன. அந்தக் காலத்தில் நாள் முழுவதும் தொடர்ந்து மழை பெய்து கொண்டே இருந்திருக்கிறது. இப்படிப் பெய்யும் மழையைத்தான் அடை மழை அல்லது அடைத்த கதவு திறக்காத மழை என்று கூறுகின்றார்கள்.

கோடைகாலத்தில் அந்தி நேரத்தில் மழை பெய்யத் தொடங்கினால் அந்தக் காலத்தில் இரவு முழுவதும் மழை பெய்து கொண்டே இருந்திருக்கின்றது. அந்தி மழை அழுதாலும் விடாது! என்ற தொடர், கோடை காலத்தின் இரவு நேரத் தொடர் மழையைக் குறிக்கிறது.

நேற்றும் இன்றும் கொம்பு சுற்றிக் காற்றடிக்குதே,

சேற்று நன்கு சேற்றில் ........

ஏற்றடிக்குதே..

கேணி நீர் படுசொறித் தவளை

கூப்பிடுகுதே! என்ற நாட்டுப் புறப்பாடல் மழை வருவதற்கான அறிகுறிகளைப் பற்றிப் பேசுகிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து மேகம் திரண்டு வருவதை எங்கள் பகுதி மக்கள் மேகம் கொம்பில் முறுக்குகிறது என்று கூறுவார்கள். குளிர்ந்த தென்றல் காற்று சுற்றிச் சுற்றி வீசினால் மழை வரும் என்று நாட்டுப்புறத்து மக்கள் கணித்திருக்கிறார்கள்.

எறும்புகள், பள்ளமாக உள்ள இடத்தில் இருந்து தன் உணவுகளைத் தூக்கிக் கொண்டு மேடான இடத்திற்குச் சாரை சாரையாகச் சென்றால், விரைவில் மழை வரும் என்று கூறுகிறார்கள். எறும்புகளுக்கு மழையின் வருகையைப் பற்றிய முன் அறிவிப்புகள் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது என்று இன்றைய அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

நிலநடுக்கம் ஏற்பட இருப்பதைச் சில பறவைகளும் , நாய் போன்ற விலங்குகளும் முன்கூட்டியே உணர்ந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருக்கின்றன என்றும் அறிவியல் அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

நண்டு மேடான இடத்திற்கு இடம் பெயர்வது தவளை சத்தம் போடுவது போன்றவை. மழை வரும் என்பதற்கான முன் அறிவிப்பாக கிராமத்து மக்கள் கருதி இருக்கிறார்கள். தவளைகள் போடும் சத்தத்தை கிராமத்து மக்கள் தவளை, உடைக்கட்டா... தவக்கட்டா... என்று மழை கூறுவதாகக் கற்பனை செய்து கூறுகின்றார்கள். அதாவது வயல் வரப்புகள் எல்லாம் உடைத்துவிடும் அளவோடு மழை பெய்யப் போகிறது என்று தவளை ஆளுடம் சொல்வதாகக் கூறுகிறார்கள்.

கோடை காலத்தில் ஈசான மூலையில் மின்னல் மின்னினால், விரைவில் நல்ல மழை பெய்யும் என்று கிராமத்துப் பெரியவர்கள் கூறுகின்றார்கள். ஈசானத்துல மழை கால் ஊன்றி இறங்கிப் பெய்ய ஆரம்பித்தால் ஈசானத்தில் இறங்குன மழை இருந்து பெய்யும் என்று கூறுகின்றார்கள்.

கார்த்திகை மாதம் பெய்யும் கனமழை கார்த்...... திருநாளுடன் நின்றுவிடும் என்று கூறுகின்றார்கள். கார்த்திகைத் திருநாள் அன்று கார்த்திகை தீபம் ஏற்றினால், மழை வெறித்துவிடும் என்று கிராமத்து மக்கள் நம்புகிறார்கள். விளக்கிட்டபின் மழை கிழக்கிட்டுப் போகும் என்று ஒரு பழமொழி கூறுகின்றார்கள். விளக்கு என்பது கார்த்திகை விளக்கு அதாவது கார்த்திகை தீபம் என்று பொருள் கொள்ளலாம். கிழக்கிட்டு என்றால் மெலிந்து அதாவது குறைந்து போகும் என்று பொருள் கொள்ளலாம். கார்த்திகையின் பின் பகுதியில் மழை வெறித்துப் பொசுங்கலிகத்தூவும். அதைக் கெப்பேரி என்ற வட்டார வழக்குன சொல்லில் எங்கள் பகுதியில் கூறுகிறார்கள். கெப்பேரி முடிந்ததும் மார்கழி மாதம் பனி பெய்ய ஆரம்பித்துவிடும்.

புரட்டாசியில் நாற்றுப் பரவினால் ஐப்பசி, கார்த்திகை மாத மழையால் யார் நன்றாக நீர் பாய்ந்து செழிந்து வளரும். மார்கழி மாதப் பனியில் கதிர் தலை காய்ந்து விளையும். தை மாதம் கதிர் அறுத்துப் பொங்கலிடுவார்கள்.

எவ்வளவு வெயில் என்றாலும் அலைந்து திரிகிற மக்கள் மழையில நனைய மாட்டார்கள். ஆயிரம் வரவைத் தாங்களிடம் ஒரு பாராட்டைத் தாங்க முடியுமா? ஆயிரம் வெயிலைத் தாங்கலாம். தலை ஒரு மழையைத் தாங்குமா..? என்று கேட்கிறார்கள் கிராமத்து மக்கள் பாராட்டைத் தாங்க முடியாது என்று கூறுகிறார்கள். அதற்குச் சான்றாக மழையையும், வெயிலையும் கூறியுள்ளார்கள்.

இன்றைக்கு நாகரிக மனிதனால் ஒரு வசவைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால், அவனால் ஆயிரம் புகழைத் தாங்கிக் கொள்ள முடிகிறது. இதுதான் கிராமத்தானும், நகரத்தானுக்கும் உள்ள வித்தியாசமாகும்.

மழை முகம் பாராத பயிரும்; தாய் முகம் பாராத பிள்ளையும் ஒன்று என்று கூறுகிறது ஒரு பழமொழி. மழைக்கு முகம் உண்டு என்று கூறும் கிராமத்து மக்களின் ரசனை அனுபவிக்கத் தகுந்ததாகும். மழை கால் ஊன்றி விட்டது என்ற வாக்கியத்தில் மழைக்கு கால் இருப்பதாகக் கூறி இருக்கும் கற்பனையும் ரசனையானதாகும். பனிக் கண் திறந்தால் மழைக் கண் அடைக்கும் என்று கூறுகிறது ஒரு பழமொழி. மழைக்கு கண் இருக்கிறது என்றும் கூறுகிறார்கள். மழையை ஒரு உயிருள்ள உருவமாகப் பார்த்துப் போற்றிய கிராமத்து மக்களின் அன்பை என்ன சொல்ல...

ரொம்பக் காலமாக மழையே பெய்யவில்லை என்றால் கழுதைகளுக்கு கல்யாணம் செய்து வைத்தால் மழை பெய்யும் என்ற நம்பிக்கையும் கிராமத்து மக்களிடம் உள்ளது.

தொடர்ந்து தேவைக்கு அதிகமாக மழை பெய்து கொண்டே இருந்தால் தீப்பந்தங்களில் தீப்பற்ற வைத்துக் காட்டி...... மழை நின்று விடும் என்ற நம்பிக்கையும் கிராமத்து மக்களிடம் உள்ளது.

Jan 20, 2012

திருநெல்வேலி

திருநெல்வேலி 
திருநெல்வேலி (ஆங்கிலம்:Tirunelveli), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டத்தில்  இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். இந்நகரம் அதே பெயருடைய மாவட்டத்தின் தலைநகருமாகும். "திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி' என சம்பந்தரும், "தண் பொருநைப் புனல்நாடு' என சேக்கிழாரும், "பொன்திணிந்த புனல் பெருகும் பொருநைத் திருநதி' என்று கம்பரும் பாடிய பூமி,திருநெல்வேலி ஆகும்

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 411,298 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். திருநெல்வேலி மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 83%, பெண்களின் கல்வியறிவு 73% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருநெல்வேலி மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
திருநெல்வேலி (அ) நெல்லை நகரம், பொருநை எனப்படும் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 2000 ஆண்டு பழமை வாய்ந்த இந்த நகரம் பாண்டிய மன்னர்களின் தலைநகரமாக சிலகாலம் செயல்பட்டது. இங்குள்ள நெல்லையப்பர் - காந்திமதி கோவில்  மிகவும் பிரசித்தி பெற்றது


பெயர்க் காரணம்

இந்து பழங்கதைகளின் படி சிவ பெருமான் நெல்லுக்கு வேலியிட்டுக் காத்ததால் இது திருநெல்வேலி எனப்படுகிறது என்ற கருத்து உள்ளது.ஒரு ஏழை விவசாயி இறைவனுக்கு படைக்க நெல்லை காய வைத்திருந்ததாகவும், அவன் பார்க்காத சமயம், மழை திடீரென பெய்ய, சிவன்(நெல்லையப்பர்), நெல் மேல் நீர் படாமல் காத்தார் எனவும், அதனால், அவருக்கு நெல்லையப்பர், என்றும், அந்த இடத்துக்கு திரு + நெல் + வேலி என்றும் பெயர்.

இரட்டை நகரங்கள்

திருநெல்வேலியும் பாளையங்கோட்டையும் இரட்டை நகரங்கள் எனப்படுகின்றன. பாளையங்கோட்டை கல்விநிலையங்களுக்குப் பெயர்பெற்றது. இது தென்னிந்தியாவின் ஆக்ஸ்ஃபோர்டு என்றழைக்கப்படுகிறது. பாளையம்கோட்டைச் சிறையும் மிகவும் புகழ்பெற்றது. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது பல சுதந்திரப்போராட்ட வீரர்கள் இங்குதான் அடைக்கப்பட்டிருந்தனர்.

தமிழின் தோற்றம்

தமிழ் மொழியானது பொதிகை மலையில் தோன்றியதாகக் கருதப்படுகிறது. இது திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் என்ற சிற்றூரில் உள்ளது. இந்து பழங்கதைகளின் படி சிவன் வியாசரையும் அகத்தியரையும் சமஸ்கிருதத்தையும் தமிழையும் உருவாக்க அனுப்பினார். அகத்தியர் பாபநாசம் வந்து தமிழை உருவாக்கினார்.திருநெல்வேலி ம்ற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் பேசப்படும் தமிழ் நெல்லை தமிழ் என்று வழங்கப்படுகிறது.

ஆறுகள்
தாமிரபரணி ·கொறையாறு ·வேளாறு ·கடநாநதி ·எலுமிச்சையாறு ·
பச்சையாறு ·நம்பியாறு ·வேனாறு ·வெட்டாறு.....

தாமிரபரணி ஆறு
நெல்லையில் பாயும் புகழ்பெற்ற தாமிரபரணி ஆறு அகத்திய மலையில் உற்பத்தியாகிறது. இந்த ஆற்றின் குறுக்கே பாபநாசத்தில் அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. இந்த அணைக்கட்டில் பல்வேறு திரைப்படப் படப்பிடிப்புகள் நடந்துள்ளன. நெல்லையில் பாயும் இந்தத் தாமிரபரணி ஆறு சுற்றியுள்ள பல பகுதிகளையும் செழிக்க வைக்கிறது.

திருநெல்வேலி தமிழ்.
தென்பாண்டி சீமை என்றும் அழைக்கப்படும் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலும் பிற தென்தமிழக மாவட்டங்களிலும் பேசப்படும் வட்டார வழக்கு மொழி திருநெல்வேலித் தமிழ் ஆகும். இவ்வழக்கை நெல்லை தமிழ் என்றும் அழைப்பர்.

தமிழ் மொழி பொதிகை மலையில் பிறந்தது என்பது ஒரு நம்பிக்கை. அந்தப் பொதிகை மலைத் தமிழே நெல்லைத் தமிழாகும். எனவே நெல்லை தமிழ் தமிழின் துவக்கநிலை மற்றும் தூய வடிவம் என்று சிலரால் கருதப்படுகிறது. பெரியோரை 'அண்ணாச்சி' என்று அழைக்கும் நெல்லைத் தமிழ் வேறு எந்தத் தமிழ் வட்டார வழக்கிலும் இல்லை.
இது தற்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் மாவட்டத்தில் இராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் திருநெல்வேலி வட்டார வழக்குத் தமிழ் பயன்பாட்டிலுள்ளது. திருநெல்வேலி நாட்டார் வழக்கு தனித்தன்மை வாய்ந்தது. 'கிறு', 'கின்று' போன்ற துணை வினைச் சொற்களைப் பழந்தமிழில் காண்பதரிது. திருநெல்வேலி வழக்கிலும் அவ்வாறே.எடுத்துக்காட்டாக,
  • நான் சொல்லுதேன் - நான் சொல்லுகிறேன்
  • அவன் நிக்கான் - அவன் நிற்கிறான்
  • நீங்க வருதியளோ? - நீங்கள் வருகிறீர்களோ?
  • ஏளா! நீ எப்ப வருத? - ஏ பிள்ளை ! நீ எப்பொழுது வருகிறாய்?
  • முடுக்குது - நெருக்குகிறது
  • சொல்லுதான் - சொல்கிறான்.




தமிழகம்

தமிழ் மொழி.
தமிழ் மொழி (Tamil language) தமிழர்களின் தாய்மொழி. தமிழ் திராவிட மொழிக் குடும்பத்தின் முதன்மையான மொழிகளில் ஒன்றும் செம்மொழியும் ஆகும். இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அதிக அளவிலும், ஐக்கிய அரபு அமீரகம், தென்னாப்பிரிக்கா, மொரீசியஸ், பிஜி, ரீயுனியன், டிரினிடாட் போன்ற நாடுகளில் சிறிய அளவிலும் தமிழ் பேசப்படுகிறது. 1997-ம் ஆண்டு புள்ளி விவரப்படி உலகம் முழுவதிலும் 8 கோடி (80 மில்லியன்) மக்களால் பேசப்படும் தமிழ்[3], ஒரு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டு பேசும் மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் பதினெட்டாவது இடத்தில் உள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒருசில செம்மொழிகளில் ஒன்றாகும். திராவிடமொழிக்குடும்பத்தின் பொதுக்குணத்தினால் ஒலி மற்றும் சொல்லமைப்புகளில் சிறிய மாற்றங்களே ஏற்பட்டுள்ளதாலும் மேலும் கவனமாகப் பழைய அமைப்புகளைக் காக்கும் மரபினாலும் பழங்கால இலக்கிய நடைகூட மக்களால் புரிந்து கொள்ளும் நிலை உள்ளது. எடுத்துக்காட்டாக, பள்ளிக் குழந்தைகள் சிறுவயதில் கற்கும் அகர வரிசை ஆத்திசூடி 1,000 ஆண்டுகளுக்கு முன்னர் இயற்றப்பட்டது. திருக்குறள் ஏறத்தாழ 2,000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டது.



வரலாறு
தமிழ் இந்திய மொழிகளில் மிக நீண்ட இலக்கிய, இலக்கண மரபுகளைக் கொண்டது. தமிழ் இலக்கியங்களில் சில இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை. கண்டெடுக்கப்பட்டுள்ள தமிழ் ஆக்கங்கள் கி.மு 300-ம் ஆண்டைச் சேர்ந்த பிராமி எழுத்துக்களில் எழுதப்பெற்றவைகளாகும் (மகாதேவன், 2003). இந்தியாவில் கிடைத்துள்ள ஏறத்தாழ 1,00,000 கல்வெட்டு, தொல்லெழுத்துப் பதிவுகளில் 55,000 க்கும் அதிகமானவை தமிழில் உள்ளன.[ஆதாரம் தேவை] பனையோலைகளில் எழுதப்பட்டு (திரும்பத் திரும்பப் படியெடுப்பதன் (பிரதிபண்ணுவது) மூலம்) அல்லது வாய்மொழி மூலம் வழிவழியாக பாதுகாக்கப்பட்டு வந்ததால், மிகப் பழைய ஆக்கங்களின் காலங்களைக் கணிப்பது மிகவும் கடினமாக உள்ளது. எனினும் மொழியியல் உட் சான்றுகள், மிகப் பழைய ஆக்கங்கள் கிமு 2 ஆம் நூற்றாண்டுக்கும் கிபி 3 ஆம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இயற்றப்பட்டிருக்கலாம் எனக் காட்டுகின்றன. இன்று கிடைக்கக்கூடிய மிகப் பழைய ஆக்கம் தொல்காப்பியம் ஆகும். இது பண்டைக்காலத் தமிழின் இலக்கணத்தை விளக்கும் ஒரு நூலாகும். இதன் சில பகுதிகள் கிமு 200 ஆம் ஆண்டு காலத்தில் எழுதப்பட்டதாகக் கருதப்படுகின்றது. 2005-ல் அகழ்ந்தெடுக்கப்பட்ட சான்றுகள், தமிழ் எழுத்து மொழியை கிமு 500 ஆம் ஆண்டிற்கும் முன் தள்ளியுள்ளன.பண்டைத் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க காப்பியம், கி.பி 200 - 300 காலப்பகுதியைச் சேர்ந்த சிலப்பதிகாரம் ஆகும்.


தமிழறிஞர்களும் மொழியலாளர்களும் தமிழ் இலக்கியத்தினதும் தமிழ் மொழியினதும் வரலாற்றை ஐந்து காலப்பகுதிகளாக வகைப்படுத்தியுள்ளனர். இவை:
சங்க காலம் (கிமு 300 - கிபி 300)
சங்கம் மருவிய காலம் (கிபி 300 - கிபி 700)
பக்தி இலக்கிய காலம் (கிபி 700 - கிபி 1200)
மையக் காலம் (கிபி 1200 - கிபி 1800)
தற்காலம் (கிபி 1800 - இன்று வரை).

பக்தி இலக்கிய காலத்திலும், மையக் காலத்திலும் பெருமளவு வடமொழிச் சொற்கள் தமிழில் கலந்துவிட்டன. பிற்காலத்தில் பரிதிமாற் கலைஞர், மறைமலை அடிகள் முதலான தூய்மைவாதிகள் இவை தமிழிலிருந்து நீக்கப்பட உழைத்தனர். இவ்வியக்கம் தனித்தமிழ் இயக்கம் என அழைக்கப்பட்டது. இதன் விளைவாக முறையான ஆவணங்களிலும், மேடைப் பேச்சுகளிலும், அறிவியல் எழுத்துக்களிலும் வடமொழிக் கலப்பில்லாத தமிழ் பயன்பட வழியேற்பட்டது. கி.பி 800 க்கும் 1000 க்கும் இடைப்பட காலப்பகுதியில், மலையாளம் ஒரு தனி மொழியாக உருவானதாக நம்பப்படுகின்றது.


தமிழ் பேசப்படும் இடங்கள்

தமிழியல்
தமிழ்
மலையாளத் தமிழியல்
ஆங்கிலத் தமிழியல்
சிங்களத் தமிழியல்
சமசுகிருத தமிழியல்
கன்னடத் தமிழியல்
தெலுங்குத் தமிழியல்
துளு தமிழியல்
வங்காளத் தமிழியல்
மராத்திய தமிழியல்
இந்தித் தமிழியல்
பர்மியத் தமிழியல்
சீனத் தமிழியல்
அரபுத் தமிழியல்
மலாய் தமிழியல்
தாய் தமிழியல்
உருசியத் தமிழியல்
சப்பானியத் தமிழியல்
கொரியத் தமிழியல்
செர்மானியத் தமிழியல்
பிரெஞ்சுத் தமிழியல்
டச்சுத் தமிழியல்
போத்துக்கீசத் தமிழியல்
சுவீடிசு தமிழியல்
பாளித் தமிழியல்
பிராகிருதத் தமிழியல்
பிராமித் தமிழியல்
பாரசீகத் தமிழியல்
உருதுத் தமிழியல்
எபிரேயத் தமிழியல்


தமிழ், தென் இந்திய மாநிலமான தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராட்டிரத்திலும், இலங்கையில் கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.

தமிழ் மக்கள், 19 ஆம் நூற்றாண்டிலும், 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும், ஒப்பந்தக் கூலிகளாகவும், கீழ்நிலை அரசப் பணியாளர்களாகவும், இந்தியா, இலங்கை போன்ற நாடுகளிலிருந்து பிரித்தானியப் பேரரசின் பல பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டனர். அவ்வாறு அவர்கள் சென்ற இடங்களில் தமிழ் பேசும் சமுதாயங்கள் உருவாகின. இவர்களின் வழிவந்தவர்கள் இன்று சிங்கப்பூர், மலேசியா, மொரீசியஸ் போன்ற நாடுகளில் குறிப்பிடத்தக்க குடித்தொகை கொண்டவர்களாக வாழ்ந்து வருகின்றார்கள். தென்னாப்பிரிக்கா, கயானா, பிஜி, சுரினாம் மற்றும் ட்ரினிடாட்டும் டொபாகோவும் போன்ற நாடுகளிலும் பலர் பூர்வீகத் தமிழராக இருந்தும், அந் நாடுகளில் தமிழ் மொழியை அவர்கள் பேசுவதில்லை.

மிக அண்மைக்காலங்களில், பெரும்பாலும் இலங்கையின் இன முரண்பாடுகள் காரணமாக அகதிகளாக அங்கிருந்து இடம் பெயர்ந்தவர்களும், ஓரளவு பொருளாதாரக் காரணங்களுக்காக இடம் பெயர்ந்தவர்களுமாக, பல தமிழர்கள் ஆஸ்திரேலியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றார்கள். தற்போது இவர்களில் பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் தமிழ் மொழியை ஒரு உயிர்ப்புள்ள மொழியாக வழங்கி வந்த போதிலும், இளைய தலைமுறையினர் பலர் தமிழ் மொழியைப் பயன்படுத்த இயலாதவர்களாகவும், ஆர்வமற்றவர்களாகவும் வளர்ந்து வருவதை கவனிக்க முடிகின்றது.

ஆட்சி மொழி அங்கீகாரம்
தமிழ் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் ஆட்சி மொழியாகும். அத்துடன் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 22 மொழிகளுள் ஒன்றாகவும் உள்ளது. இலங்கையில் மூன்று ஆட்சி மொழிகளுள் தமிழும் ஒன்று. இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்திலும் புதுச்சேரி ஒன்றியப் பகுதியிலும் தமிழ் அரச அலுவல் மொழியாக இருக்கிறது. சிங்கப்பூர் நாட்டிலும் நாடளாவிய மொழிகளுள் ஒன்றாகத் தமிழ் இடம் பெற்றுள்ளது. தென்னாபிரிக்காவிலும் தமிழுக்கு அரசியலமைப்பு அங்கீகாரம் உள்ளது. மலேசியாவிலும் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் இடம்பெற்றுள்ளது. மலேசியாவில் தொடக்க இடைநிலைப்பள்ளிகளில் தமிழ் கற்பிக்கப்படுகிறது. நாடு முழுவதும் 523 தமிழ்த் தொடக்கப்பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக இயங்குகின்றன.

 இந்தியாவில் செம்மொழி அங்கீகாரம்
இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் உள்ள பல தமிழ் அமைப்புக்களினதும், அறிஞர்களினதும் நீண்ட கால முயற்சிகளைத் தொடர்ந்து. இந்திய அரசினால் தமிழ் ஒரு செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அங்கீகாரம் பெற்றுள்ள முதல் இந்திய மொழி தமிழாகும். இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளினதும் கூட்டுக் கூட்டமொன்றின்போது, 2004 ஆம் ஆண்டு சூன் 6 ஆம் நாள் அப்போதைய இந்திய குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமால் இவ்வறிவிப்பு வெளியிடப்பட்டது.




இந்தியா ஒரு பார்வை.

இந்தியா 

இந்தியாவின் சிறப்புகள் :

*முதன் முதலில் என் முறையை கண்டு பிடித்தது. ஆரியப்பட்டாதான் பூஜியத்தை கண்டு பிடித்தார்.

*உலகின் மதல் பல்கலைக்கழகமான தக்க்ஷிமுகி கி.மு.700 ம் ஆண்டில் நிறுவப்பட்டது.10,500க்கும் அதிகமான் மாணவர்கள் உலகெங்கிலுமிருந்து வந்து 60க்கும் மேற்ப்பட்ட கலைகளை கற்றனர். நாலந்தா பல்கலைக்கழகம் கி.மு 4 ம் நூற்றாண்டில் தொடங்கப்பெற்றது.சமஸ்கிருதம் எல்லா ஐரோப்பிய மொழிகளுக்கும் தாய் மொழியாக விளங்கியது.

*17 ம் நூற்றாண்டில் வெள்ளைக்கார காலனியாதிக்கம் ஏற்ப்படும் வரை இந்தியா செல்வம் கொழிக்கும் நாடாகவே இருந்துள்ளது.

*சிந்து நதியில் 6,000 ஆண்டுகளுக்கு முன்பே நீர்வழிப்போக்குவரத்து தொடங்கியுள்ளது.

*பாஸ்கராச்சார்யா பூமி சூரியனச் சுற்றிவர எடுத்துக்கொள்ளும் நேரத்தை கண்டுபிடித்தார்.5 ம் நூற்றாண்டிலேயே பூமி சூரியனை சுற்றிவர 365 நாட்கள் ஆகும் என கண்டுபிடிக்கப்பட்டது.

*கணிதத்தில் "பையின்" மதிப்பை கண்டறிந்தவர் "புத்தயனார்" என்பவர் ஆவார்.மேலும் அல்ஜீப்ரா,ஜியோமேதி,கால்குலஸ் ஆகியவை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டவை ஆகும்.

*அமெரிக்காவின் இயற்கைத் தாக்கங்கள் பற்றி ஆராயும் நிறுவணன் 1896 ஆம் ஆண்டு வரை இந்தியாதான் வைரத்திற்கு ஆதாரமாக விளங்கியுள்ளது என்று கூறியுள்ளது.(ஆனால் அவையெல்லாம் எங்கே போனது என்று தெரியவில்லை).மேலும் அந்நிறுவனம் கம்பியில்லாத போக்குவரத்தை மார்கொனிக்கு முன்னரே "ஜகதீச்போஸ்" தான் கண்டுபிடித்தார் என நிரூபித்துள்ளது.

*சதுரங்க விளையாட்டு இந்தியாவில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


சில கசப்பான உண்மைகள் :

1. 2050-இல் மக்கள்தொகையில் உலகின் #1 நாடு - இந்தியா (161.38 கோடி, அப்போது சீனா வெறும் 141.7 கோடி)

2. உத்திரப்ரதேசத்தின் மக்கள் தொகை = பிரேசில் நாட்டின் மொத்த மக்கள் தொகைக்கு சமம் - 18.5 கோடி. (பிரேசில் இந்தியாவைவிட நிலப்பரப்பில் மிகப்பெரிய நாடு)

3. மகாராஷ்டிராவின் மக்கள் தொகை = மேக்சிகோ நாட்டின் மொத்த மக்கள் தொகைக்கு சமம் (10.4 கோடி)

4. பீகாரின் மக்கள் தொகை = ஜெர்மனி நாட்டின் மொத்த மக்கள் தொகையை விட அதிகம் (8.3 கோடி)

5. மனிதவள மேம்பாட்டில் இந்தியாவின் இடம் = 134

6. Indian's ranking in Global Hunger Index = 65

7. சுகாதாரம் - இந்தியாவின் இடம் = 114

8. Indian's rank on Gender equality = 113

9. மாசுக்கட்டுபாட்டில் இந்தியாவுக்கான இடம் = 123

10. ஊழல் - இந்தியாவின் இடம் = 8



இளைய இந்தியா...

இந்தியா மனிதவளம் மிகுந்த தேசம்; அதிலும் இளைஞர்கள் நிறைந்த நாடு என்று பெருமையாகக் கூறலாம். நாட்டின் மக்கள்தொகையில் 54 கோடிப்பேர் இளைஞர்கள் என்றும், அதாவது 51 விழுக்காட்டினர் என்றும் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.


ஆனால் இந்த இளைஞர்களின் ஆற்றலை நாடு முறையாகப் பயன்படுத்திக் கொண்டதா என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருக்கிறது.


அன்று நடந்த இந்திய விடுதலைப் போராட்டமா? இந்தி எதிர்ப்புப் போராட்டமா? இன்று நடக்கும் தெலங்கானா பிரிவினைக் கிளர்ச்சியா? ஒன்றுபட்ட ஆந்திரம் ஆர்ப்பாட்டமா? எல்லாமே இளைஞர்களின் எழுச்சியில்தான் நடந்தது; நடக்கிறது; நடக்கும்; போராட்ட வரலாறுகள் இப்படித்தான் கூறுகின்றன.


காந்தியடிகள் முதல் காமராஜர், அண்ணா, கருணாநிதி வரை எல்லோருமே இளமையிலேயே பொதுப்பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டவர்கள்தாம்.சாதனையாளர்களின் சரித்திரமெல்லாம் இப்படித்தான் இருக்கிறது.


இக்கால இலக்கியத்தின் தலைமகன் பாரதி 39 வயதுக்குள் அவன் செய்தது நூறாண்டு சாதனை; கணிதமேதை இராமானுஜம் 33 ஆண்டுகள்; புரட்சியாளர் பகத்சிங் 24 ஆண்டுகள்; 29 ஆண்டுகளே வாழ்ந்த பட்டுக்கோட்டையார் திரையுலகில் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இந்தியாவின் புகழை உலக அரங்குக்குக் கொண்டு சென்ற இளைஞர் விவேகானந்தருக்கு அப்போது 30 வயது. 39 ஆண்டுகளே வாழ்ந்த அந்த மாமனிதரின் பிறந்த நாளே இளைஞர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.


பொருளாதார நிலையிலும், அறிவியல் தொழில்நுட்பத்திலும் ஒரு நாடு முன்னேற்றம் அடைவதன் மூலம்தான் அந்த நாட்டை வளர்ந்த நாடு என்று கூறுகிறோம். இந்தியாவை வளர்ந்த நாடாக உயர்த்துவது இளைஞர்களாகிய உங்கள் கைகளில்தான் உள்ளது...'' என்று அறிவியல் மேதை அப்துல் கலாம் சிறார் அறிவியல் மாநாட்டில் பேசியுள்ளார்.
ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கில் படிப்பை முடித்து வெளியேறும் இளைஞர்களில் வேலைவாய்ப்பைப் பெறுபவர் மிகக் குறைவே; இந்தப் பத்து விழுக்காட்டினரும் ஆள்பலம், பணபலம், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தியே இந்த இடங்களைக் கைப்பற்றுகின்றனர். மற்றவர்கள் 90 விழுக்காட்டினர் தங்கள் காலத்தை வேலை தேடியே கழித்து விடுகின்றனர்.


தமிழ்நாட்டில் ஏறத்தாழ 60 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பெயர்களைப் பதிவு செய்துவிட்டுக் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களும் ஒருநாள் நம்பிக்கையிழந்து, சோர்வடைந்து வேலை தேடும் வேலையையும் விட்டு விடுகின்றனர்.


அரசுத் துறைகளில் இப்போது காலியாக உள்ள 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பணியிடங்களை வேலை தேடிக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு அளிக்காமல் காலதாமதம் செய்யப்படுகிறது. அத்துடன் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களை ஒப்பந்த முறையில் நியமிக்கும் அரசாணை ஏன் என்று இளைஞர்கள் கேட்பது நியாயம்தானே!


இன்றைய இளைஞர்கள் மக்கள் பிரச்னைகளில் ஆர்வம் காட்டவில்லை. முதியவர்கள் மட்டுமே பங்கு பெறுகின்றனர் என்பது ஆரோக்கியமான சமுதாயத்துக்கு அழகல்ல. இலக்கியம், சமுதாயம், அரசியல் மேடைகளில் அவர்கள் பார்வையாளர்களாகவும் இல்லாமல், பங்கேற்பாளர்களாகவும் இல்லாமல் போனதற்கு என்ன காரணம் என்பதைக் கண்டறிய வேண்டும்.
இன்று நாட்டை ஆளுவது அரசியல். இந்த மக்களாட்சி நல்லவர்களாலும், வல்லவர்களாலும் நடத்தப்பட வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதுமா? காலம் கனியட்டும் என்று எத்தனை நாள் தான் காத்திருப்பது...? செயலில் இறங்க வேண்டாமா...?


காலை எட்டு மணிக்கு எழுந்து, அவசர அவசர மாக அலுவலகம் சென்று பத்து மணி நேரம் கணினி முன்னாலே அமர்ந்து, பின் இரவு ஏழு மணிக்கு வழக்கம் போல் வீடு வந்து உண்டு உறங்கப்போகும் வாழ்கை...? யோசித்து பாருங்கள்..


இந்த நிலை மாற வேண்டும் எனில் இளைஞர்கள் மாற வேண்டும் . மக்கள் பிரச்சனையில் அவர்கள் ஆர்வம் காட்ட வேண்டும் . இளைஞர்கள்; சக்தி மாபெரும் சக்தி அதை நல்வழியில் பயன்படுத்தினால் இந்த நாட்டின் நிலை மாறும். எடுத்துகாட்டாக இன்று லிபியா என்றொரு நாட்டின் சரித்திரத்தை மாற்றியவர்கள் 21  இளைஞர்கள்.
  நாமும் மாறுவோம் நாடும் மாறும்.

நன்றி V.சுரேஷ் & ஸ்ரீ.ராம்

நீங்கள்  இது போன்ற கருத்துகளை தெரிந்து கொள்ள விரும்பினால்

இதை கிளிக் செய்யவும்.   

Jan 19, 2012

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்

வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
நம்முடைய வாழ்க்கை எத்தனை நீண்டதாகவும் இருக்கலாம். ஆனால் நம் கட்டுப்பாட்டில் இருக்கும் காலம் நிகழ்காலம் மட்டுமே.
கடந்து போன காலத்தை இனி மாற்ற முடியாது. நல்லதோ, கெட்டதோ முடிந்ததெல்லாம் வாழ்க்கையின் வரலாறு ஆகி விட்டது. கடந்த காலத்தில் பயணித்து நடந்து முடிந்த நிகழ்ச்சிகளை நம் விருப்பப்படி மாற்றி விட முடியாது.
எதிர்காலம் என்றுமே ஒரு கேள்விக்குறி தான். இனி மிஞ்சி இருக்கும் காலம் எத்தனை, அதில் நடக்க இருப்பதெல்லாம் என்னென்ன என்பதை நாம் அறிய மாட்டோம். எதிர்கால நிகழ்ச்சிகளை நாம் எட்டிப்பார்க்க முடியாது.
இப்படி இருக்கையில் நம் கட்டுப்பாட்டில் இல்லாத கடந்த கால நினைவுகளிலும், எதிர்காலக் கனவுகளிலும், நம் கட்டுப்பாட்டில் இருக்கக் கூடிய நிகழ்காலத்தை நாம் வீணடிப்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.
இந்தக் கணம் மட்டுமே நம்முடையது. நாம் நினைத்தபடி நடந்து கொள்ள இந்தக் கணத்தில் மட்டுமே முடியும். நம்மால் செயலாற்ற முடிந்த இந்த ஒரு கணத்தை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதை வைத்தே நாம் நம் வாழ்க்கையை நிர்ணயம் செய்து கொள்கிறோம்.
நவீன மருத்துவத்தின் தந்தை என்றழைக்கப்படும் சர் வில்லியம் ஓஸ்லர் (Sir William Osler) தன் மேசையில் நம் மகாகவி காளிதாசரின் ஒரு கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பை எப்போதும் வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது.
“நேற்று என்பது வெறும் கனவு
நாளை என்பதோ கற்பனை மட்டுமே
இன்று சிறப்பாக வாழ்ந்தால்
அது நேற்றைய கனவையும் இனிமையாக்கும்
நாளைய தினத்தையும் நம்பிக்கைக்குரியதாக்கும்
அதனால் இன்றைய தினத்தைக் கவனி
அதில் தான் விடியலுக்கான தீர்வே உள்ளது”
நாம் அதிகமாகக் கோட்டை விடுவது நிகழ்காலத்தைத் தான். நேற்றைய வருத்தங்களும், நாளைய கவலைகளும் தான் அதிகமாக நம் நிகழ்காலத்தைத் திருடிக் கொள்கின்றன. கடந்த காலத்தில் அப்படியாகி விட்டதே, இப்படியாகி விட்டதே என்று வருத்தப்பட்டும், நாளை என்ன ஆகுமோ என்று கவலைப்பட்டும் என்ன பயன்? வருத்தப்படுவதால் கடந்தகாலம் மாறி விடுமா? கவலைப்படுவதால் எதிர்காலம் தானாக சிறந்து விடுமா?
காளிதாசரின் இன்றைய தினம் கூட சற்று அகலமான காலம் என்று சொல்லலாம். இன்றில் கூட இன்றைக்குட்பட்ட கடந்த காலம், எதிர்காலம் என்பதும் அடங்கி விடுகிறது. உண்மையில் வாழ்க்கையில் எல்லா வெற்றிகளுக்கும், மேன்மைகளுக்கும் சூட்சுமம் இந்தக் கணத்தில் தான் உள்ளது. இந்தக் கணத்தில் தான் நாம் ஏதாவது செய்ய முடியும். நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான கணம் இந்தக் கணம் தான்.
இருட்டில் ஒரு நெடும்பயணம் காரில் போக வேண்டி இருப்பதாக வைத்துக் கொள்வோம். அத்தனை தூரமும் தெருவிளக்குகள் இருந்தாக வேண்டும் என்பதில்லை. காரின் முன் விளக்குகள் சரியாக எரிந்தால் போதும். அத்தனை தூரத்தையும் சிரமம் இல்லாமல் கடந்து விடலாம். காரின் முன் விளக்குகளால் சில அடி தூரம் தான் வெளிச்சம் தர முடியும் என்பதால் பயணக்கடைசி வரை தெருவிளக்கு எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்ற கோரிக்கை எப்படி நகைப்பிற்கிடமாகுமோ, அப்படித்தான் எதிர்காலம் முழுவதற்கும் தயார்படுத்திக் கொள்வதும்.
தாமஸ் கார்லைல் மிக அழகாகக் கூறுவார். “நம்முடைய முக்கிய வேலை தூரத்தில் மங்கலாகத் தெரிவது என்ன என்பதைத் தெரிந்து கொள்வதல்ல, நம் முன்னால் இருப்பது என்ன என்று தெரிந்து அதை சிறப்பாகச் செய்வது தான்”. அப்படித்தான் இந்தக் கணத்தை நாம் சிறப்பாக உபயோகித்தால், அப்படியே ஒவ்வொரு கணம் நம் வாழ்க்கையில் வரும் போதும் சிறப்பாக பயன்படுத்தினால், எதிர்காலம் தானாக சிறப்பாய் உருவாகி விடும் என்பதில் சந்தேகமில்லை.
நேற்றைய நிகழ்வுகளில் இந்தக் கணத்தில் ஏதாவது பாடம் உணர்வோமானால் அது நம்மை பக்குவப்படுத்தும். நாளைய நாளின் சிறப்புக்காக திட்டமிட்டு இந்தக் கணத்தில் ஏதாவது செய்வோமானால் அது நம்மை முன்னேற்றும். ஆக இந்த நாளில் இந்தக் கணத்தில் நாம் செய்வதை வைத்துத் தான் நேற்றைய அனுபவத்திற்கும், நாளைய நடப்பிற்கும் நாம் சிறப்பை ஏற்படுத்த முடியுமே தவிர அவற்றைக் குறித்த வருத்தங்களாலும் கவலைகளாலும் அல்ல.  அப்படி செயல்படுவதை விட்டு விட்டு வருத்தங்களாலும், கவலைகளாலும் கழிக்கப்படும் காலங்கள் வீணடிக்கப்படுபவையே.
கடைசி வரை உங்களால் செயல்பட முடிந்த காலம் நிகழ்காலம் மட்டுமே.
எனவே நிகழ்காலத்தில் மிகுந்த கவனம் வையுங்கள். நிகழ்காலத்தில் சூழ்நிலைகள் எவ்வளவு மோசமாக இருந்தாலும் புலம்பலிலேயே கழித்து விடாதீர்கள். புலம்பலிலும், வருத்தங்களிலும் நிலைமை மேலும் மோசமாகுமே தவிர எதுவும் மாறி விடாது, தீர்வும் கிடைக்காது.  தரப்பட்டிருக்கும் சூழ்நிலைகளில் எப்படி முடிந்த அளவு சிறப்பாக செயல்படலாம் என்று யோசித்து அதன்படி செயல்படுங்கள். மோசமான சூழ்நிலைகளும் சிறிது சிறிதாக மாறி உங்களை மேலான சூழ்நிலைகளுக்குப் போக வழிவிடுவதைக் காண்பீர்கள்.
நமக்கு முழுக்கட்டுப்பாடு இருப்பது இந்தக் கணத்தில் தான் என்பதால் வாழ்க்கையின் வெற்றியின் சூட்சுமம் முழுவதும் இந்தக் கணத்தில் தான் இருக்கிறது. நதி நீரோட்டத்தில் ஒரு முறை காலை நனைத்த நீரில் இன்னொரு முறை காலை நனைக்க முடியாது என்று சொல்வார்கள். ஒவ்வொரு முறையும் நீர் புதிதாகவே இருக்கிறது. கால ஓட்டத்திலும் ஒவ்வொரு கணங்களும் புதியவையே. நாம் இந்தக் கணத்தில் வாழும் முறையைப் பொருத்தே இது நமக்கு அனுகூலமாவதும், பயனற்றுப் போவதும் தீர்மானமாகிறது.
காளிதாசர் சொன்னது போல நம் விடியலுக்கான தீர்வு இந்தக் கணத்தில் தான் உள்ளது. மாற ஆசைப்படுகிறீர்களா? அதற்கான முதல் அடியை இந்தக் கணத்தில் வையுங்கள். ஏதாவது சாதிக்க ஆசைப்படுகிறீர்களா? அதற்கான பிள்ளையார் சுழியை இந்தக் கணத்தில் போடுங்கள். நாளை செய்யலாம் என்று விட்டு வைப்பவைகளை நாம் என்றுமே செய்வதில்லை. ஏனென்றால் நாளை என்பது நம்மிடம் வருவதேயில்லை. நம்மிடம் இருப்பதெல்லாம் இந்தக் கணம் மட்டுமே. இருப்பதை சரியாகப் பயன்படுத்தினால் மட்டுமே வருவதெல்லாம் சரியாகும்.

இயற்கையும் ஒலியும்.

ஒலியை வெளியிடும் தாவரங்கள், பூச்சிகள் மீன்களின் ஆங்கிலப் பெயர்கள்:
1. PHYROPHORUS NOCTILUCAS மத்திய அமெரிக்க வண்டு
2. PLATYURA சிலந்திவலை போல மின்னி ஒளி வீசும் பூச்சி
3. ARACHNO CAMPA நியூசிலாந்தில் ஒட்டடை போலத் தொங்கி ஒளி வீசும் பூச்சி
4. PHYROPHORUS LAGIOPTHALMUS/ AUTOMOBILE BEETLE/ CLICK BEETLE தலையில் 2 பச்சை விளக்கு, வாலில் ஆரஞ்சு விளக்கு
5. PLEUROTUS NIDIFORMIS ஆஸ்திரேலியக் காளான் வகை
6. POROMYCENA MANIPULARIS
7. JELLY FISH
8. BACTERIA
9. LANTERN EYE FISH
10. VIPER FISH
11. ANGLER FISH
12. HATCHET FISH
13. LUMINO DESMUS
14. DYAKIA STRIATA மலேசிய நத்தை

நம்பிக்கை

நம்பிக்கை

அழகிய தோற்றம், அபாரத் திறமை, நண்பர்களிடமும் எதிரிகளிடமும் காட்டிய பரிவு, வீரம் ஆகியவற்றில் அலெக்சாண்டருக்கு இணையாக உலகில் இன்னொருவர் பிறக்கவில்லை என்றே சரித்திரம் சத்தமாக கூறுகிறது.
இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதன் தெரிந்து வைத்திருந்த உலக நிலத்தின் பெரும் பகுதியை 9 ஆண்டுகளிலேயே வெற்றி கொண்டவர் அலெக்சாண்டர்.
கிரீசில் இருந்து இந்தியா வரை அவரது பேரரசு பரவி இருந்தது. அவர் தோற்றுவித்த பேரரசு அவருடனேயே முடிந்து போனது. ஆனால், அவர் உருவாக்கிய சுமார் 70 நகரங்கள் இன்றும் உள்ளன.
கி.மு., 359ல் அலெக்சாண்டருடைய தந்தை பிலிப், மாசிட்டோனியாவின் மன்னரானார். கிரீசின் வடபகுதியில் இருந்த சிறிய நாடுதான் மாசிட்டோனியா ஆகும். பிலிப் மிக சிறந்த போர் வீரர்களை உருவாக்கினார். ஏதென்சையும், ஸ்பார்டாவையும் தன் ஆதிக்கத்தின் கீழ் அவர் கொண்டு வந்தார்.
கி.மு., 336ல் சதிகாரர்களின் சதியால் பிலிப் கொல்லப்பட்டார். தனது 20வது வயதில் அலெக்சாண்டர் அரசர் ஆனார். அலெக்ஸ் தனது தந்தையிடம் போர் முறையின் நுணுக்கங்களை கற்று தேர்ந்திருந்தார். சிறந்த அறிஞரான அரிஸ்டாட்டிலிடம் அவர் கல்வி கற்றார்.
பாரசீகருடைய பேரரசை வெற்றி கொள்ள வேண்டும் என்ற தந்தையின் ஆசையை நிறைவேற்ற கி.மு., 334ல் பாரசீகம் மீது அவர் படையெடுத்தார். பாரசீகத்தின் படை பெரியது, தேவைப்பட்டால் பாரசீகர்களால் 10 லட்சம் படை வீரர்களை கூட திரட்ட முடியும். அலெக்சாண்டரின் படையோ மிக சிறியது. படை சிறியதாக இருந்தாலும், அலெக்சாண்டரின் படையோ நம்பிக்கையினை பெரிய அளவில் கொண்டு இருந்தது. படை வீரர்கள் திறமை மிக்கவர்கள். இந்த படையுடன் “கிரானிக்ஸ்’ நதிக்கரையில் பாரசீகத்தோடு மோதி அலெக்சாண்டர் வெற்றி பெற்றார்.
அடுத்து அவர் எகிப்தை வெற்றி கொண்டார். நைல் நதி கரையில் “அலெக்சாண்டரியா’ என்ற நகரத்தை அவர் ஏற்படுத்தினார். பாரசீகர்கள் மீண்டும் படை திரட்டி வந்து அலெக்சாண்டரை எதிர்த்தனர். அலெக்சாண்டரிடம் 7 ஆயிரம் குதிரை படை வீரர்களும், 40 ஆயிரம் காலாட் படையினரும் இருந்தனர்.
எதிரிகளிடம் 10 லட்சம் பேர் கொண்ட படையிருந்தது. ஆயினும் அலெக்சாண்டரே வெற்றி பெற்றார். நம்பிக்கையோடு ஒரு செயலை செய்தால் வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையை மிக அதிகமாக கொண்டிருந்தவர் அலெக்சாண்டர்.
தொடர்ந்து ஆசியாவின் ஆப்கானிஸ்தான், சாமர்கண்ட், தாஷ்கண்ட், பஞ்சாப் போன்ற பகுதிகளை வென்றார். வெற்றி தந்த மகிழ்வினாலோ என்னவோ, அவரது போக்கில் மாற்றம் தெரிந்தது. பாரசீகத்தின் உடைகளை அணியவும், ஆடரம்பரமாக வாழவும் தொடங்கினார். தனது வீரர்கள் ஆசிய பெண்களை மணப்பதை ஊக்குவித்தார். கிழக்கையும் மேற்கையும் இணைக்க முயன்றார். இந்தியாவில் பஞ்சாப் மன்னரை எதிர்த்து நடந்த போர்தான் அலெக்சாண்டரின் கடைசி போர். 8 வருடம் தொடர்ந்து போரிட்டது… தாய் நாட்டை விட்டு 11 ஆயிரம் மைல் கடந்து வந்திருந்தது… ஆகியவற்றால் வீரர்கள் உற்சாகம் இழந்தனர். எனவே, தாய்நாடு செல்வதையே அனைவரும் விரும்பினர்.
திட மனது கொண்ட அலெக்சாண்டரால் கூட அவர்களது மனநிலையை மாற்ற முடியவில்லை. எந்த போரிலும் தோல்வி கண்டிராத வீரர்களில் பலர் களைப்பினால் வழியில் உயிர் துறந்தனர். அலெக்சாண்டரையும் நோய் பற்றியது. கி.மு., 323 ஜூன் 19ல் அலெக்சாண்டரின் உயிர் பிரிந்தது. உலகின் மாபெரும் வீரரின் சகாப்தம் அதோடு முடிவுக்கு வந்தது.


நன்றி தினமலர்! 

தமிழ் நாடு

 
தமிழ் நாடு
 
56 ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டத்தில் நாகரீகமே எட்டிப்பார்க்காத ஒரு குக்கிரமத்தில் நடத்த உண்மை சம்பவம்.
சாலை வசதியே இல்லாத ஊர்ஃ அந்த கிராமத்தில் இருந்த ஒரு பண்ணையார் வீட்ல் அவர்கள் குடும்பத்தினர் எங்காவது போய் வர கூண்டு வண்டி வைத்து இருந்தனர்.  அந்த ஊரில் காரை பார்க்காதவர்களே பலர் உண்டு.ஒரு நாள் அந்த பெரியவரின் ஒரு மகன் அந்த காலங்களில் 1944 மாடல் என்று கூறப்பட்ட ஒரு பழையகாரைக் கொண்டு வந்து, அதற்கு மாலை போட்டு பெருமையாக தன்ன தகப்பனார் முன்பு கொண்டு வந்து நிறுத்தினார் ஊரே திரண்டு வந்து காரை வேடிக்கை பார்த்தது.ஆனால் பெரியவர் பெருமைப்படவில்லை  வருந்தத்தோடு சொன்னார் நீ வெளியே வட்டிக்கு கடன் வாங்கி இந்த காரை வாங்கிக் கொண்டு வந்து இருக்கிறாய் இதில் எனக்கு பெருமை இல்லை வருத்தம் தான். நீ உன் கையில் உள்ள வருமானமத்தில் ஒரு சைக்கிள் வாங்கிக் கொண்டு வா உன்னை பெருமையோடு பாராட்டுவேனன் என்றார். கிராம முன்சீப்பாக இருக்கும் உன் அண்ணன் சைக்கிளில் போவதைப் பார்த்து மகிழ்ச்சி அடையும் என் மனதுக்கு உன் காரைப் பார்த்தால் மகிழ்ச்சி வரவில்லையே என்றார் இது தான் ஒவ்வொரு வீடும் நாடும் பின்பற்ற வேண்டிய பொருளாதார தத்துவமாகும்.
வரவுக்கேற்ற வகையில் அரசுகள் செலவுகளை நிர்ணயித்து கொள்ள வேண்டும்இந்த நிலையில் தமிழக அரசுக்கு இருக்கும் மொத்த கடன் தொகையை கேட்டால் கடன் பட்டார் நெஞ்சம் கோல கலங்கினான்  என்பார்களே அதே உணர்வு தமிழ்நாட்டில் உள்ள 7 கோடியே 21லட்சம் மக்களுக்கும் ஏற்படுகிறது தமிழ்நாட்டின் மொத்த ஒரு லட்சத்தது 1349 கோடி ரூபாய்  ஆகும். கேட்பதற்கு தலை சுற்றுகிறது அல்லவா? இது நம் ஒவ்வொருவர் தலையிலும் சுமத்தப்பட்டுள்ள கடனாகும்.
மற்ற மாநிலங்களின் கடன் எவ்வளவு? என்று பார்த்தால் தான் நாம் எந்த அறவு கடனில் தத்தளித்துக் கொண்டு இருக்கிறோம் என்று புரியும். தமிழக அரசு ஆண்டுக்கு வட்டியாக மட்டும் ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ. 10 ஆயிரம் கோடி கட்ட வேண்யிருக்கிறது (ஏமாளியான மக்களின் வரிசுமைகள் ஏற்றிக்கொண்டு இருக்கிறர்கள் இந்த ஆடம்பர அரசியல்வாதிகள்)
தமிழ் நாட்டின் இவ்வளவு பெரிய சுமை இப்போது திடீரென்று ஏற்பட்டதில்லை. காலங்கலமாக கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றி வைக்கப்பட்ட பெரிய சுமையாகும்.
மறைந்த நாஞ்சில்  மனோகரன் தான் பேசும் எல்லா கூட்டங்களில் எல்லாம் ஏதாவது ஒரு ஆங்கில பழமொழி கடுமையாக உழை, நிறைய சம்பாதி வீட்டைக்கட்டு, ஒரு கார் வாங்கு, திருமணம் செய்துகொள் இன்பமாக வாழ்க்கையை கழி என்பது தான் நமது மக்களுக்கு உழைக்க வேண்டும் தங்கள் உழைப்பில் ஈட்டிய பணத்தில் பொருட்களை வாங்க வேண்டும் கஷ்டமில்லாத வாழ்க்கை வாழ வேண்டும் என்ற உணர்வு மங்கி ஓசியில் அரசு ஏதாவது கொடுத்தால் போதும் என்ற உணர்வு தளிர்த்துவிட்டது.
அரசியல் கட்சிகளும் இந்த இலவசங்களை அள்ளி அள்ளிக் கொடுத்தால் தான் ஓட்டு கிடைக்கும் என்ற உணர்வில் வாரி வாரி வழங்கியது. அரசின் வருமானங்கள் எல்லாம் இலவசங்களுக்கு போய்விட்டது. மற்றும் அரசின் ஆடம்பர விழாங்களும், குளறுபடியான நிர்வாகங்களும். அரசு கட்டிடங்களை
இடிப்பதும் மாற்றுவதும். என பல விளையாட்டுகளை அரசியல்வாதிகள் செய்துவிட்டு ஆட்சி முடிந்ததும் அயல் நாடுகளில் சுற்றுலா என சொகுசு வாழ்கை வாழ்வதும் விலை ஏற்றும் தவிர்கக முடியாது என்ற வார்த்தைகள் ஓட்டு போட்ட மக்களுக்கான பதில். கடன்காரராகும் மக்கள் வேறு என்னதான் செய்ய முடியும்
 
 
நன்றி:
 
கிராமத்து காக்கை & தமிழ் இணையத்தளம்.

ரோஜா மலர்.5

ரோஜா மலர்


இந்த மலர் அன்பை சொல்லவும், அழகுக்காகவும் மட்டுமல்ல மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
35 மில்லியன் ஆண்டு காலமாக பூமியில் ரோஜா இருப்பதாக சான்றுகள் தெரிவிக்கின்றன. தோட்டப்பயிராக ரோஜாவை பயிரடத் தொடங்கி 5000 ஆண்டுகள் ஆகின்றன. முதன் முதலில் சீனாவில் தான் ரோஜா மலர் தோட்டப்பயிராக விளைவிக்கப்பட்டுள்ளது.
அரேபிய நாடுகளில் வாசனை திரவியங்களுக்காகவும், மருத்துவ பயனுக்காகவும் மிகவும் பயன்படுத்துகிறார்கள். ரோமானிய பேரரசில் பல்வேறு மிகப் பெரிய ரோஜாத் தோட்டங்கள் நகரை அலங்கரித்துள்ளது.
இத்தகைய ரோஜா மலர்கள் மருத்துவ பயன் உடையவை. ரோஜாப்பூவின் அழகும், மணமும் மக்களை அதுவும் பெண்களை பெரிதும் கவரும். பொதுவாக ரோஜாப்பூவால் சரும நோய்கள் நீங்கும்.
ரத்த விருத்தி உண்டாகும். ரோஜா மலரின் இதழ்களை வேளைக்கு ஒரு கைப்பிடி வீதம் வெறுமனே மென்று சாப்பிட்டால் சீதபேதி குணமாகும்.
செயல்திறன் மிக்க வேதிப்பொருள்கள் மலர்கள் நறுமண எண்ணெய் உடையவை. பினைல்எத்தானல், க்ளோ ரோஜினிக் அமிலம், டான்னின், சையானின், கரோட்டின், சர்க்கரைகள் போன்ற வேதிப்பொருட்கள் ரோஜாமலரில் அடங்கியுள்ளன.
ரோஜாப்பூ மொக்கு மற்றும் சதகுப்பை(தமிழ் மருந்து கடைகளில் கிடைக்கும்) ஆகியவற்றை உரலில் போட்டு இடித்து சுடு நீரில் போட்டு மூடி வைத்து விட வேண்டும். மூன்று மணி நேரம் குறையாமல் வைத்திருந்து பிறகு வடிகட்டி கொள்ள வேண்டும்.
குழந்தைகளாக இருந்தால் கால் டீஸ்பூனும், பெரியவர்களாக இருந்தால் ஒரு டீஸ்பூனும் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை கொடுத்துவர உஷ்ண வயிற்று வலி போகும்.
களிம்பு ஏறாத பாத்திரத்தில் ரோஜா இதழ்களை பாத்திரத்திலிட்டு கொதிக்கும் நீரை அதில் விட்டு நன்றாக கிளறி விட்டு அப்படியே மூடி வைத்திருக்க வேண்டும். இப்படி 12 மணி நேரம் மூடி வைத்திருக்க வேண்டும்.
பிறகு மூடியை திறந்து கைகளை சுத்தம் செய்து கொண்டு இதழ்களை கசக்கி பிழிந்து குழம்பு போல் ஆக்க வேண்டும். பிறகு இந்த நீரை வேறொரு பாத்திரத்திலிட்டு 500 கிராம் சர்க்கரை மற்றும் 200 மில்லி நீரும் சேர்த்து காய்ச்ச வேண்டும்.
சர்க்கரை பாகு வந்ததும் ஏற்கனவே செய்து வைத்த ரோஜாப் பூ நீரை இதில்விட்டு மறுபடியும் காய்ச்ச வேண்டும். இப்போது பாகு தேன் பதத்திற்கு வந்ததும் மூன்று அவுன்ஸ் அளவுக்குப் பன்னீரை கலந்து கிளறி இறக்கி ஆற வைத்துக் ஒரு பாட்டிலில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.
இரண்டு கரண்டி டம்ளரில் விட்டு தேவையான அளவு தண்ணீர்விட்டு சாப்பிட்டு வரலாம். இதனால் ரத்த விருத்தி உண்டாகும்.
ரோஜாப்பூ இதழ்களை தேவையான அளவு சேகரம் செய்து சம அளவு பயத்தம்பயிரை அதனுடன் சேர்த்து 4,5 பூலாங்கிழங்கை சேர்த்து அரைத்து விழுதாக எடுத்துக் கொண்டு தினமும் உடலில் இந்த விழுதை தேய்த்து அரை மணி பொறுத்து குளித்து வந்தால் சரும நோய்கள் ஒழிந்து உடல் நல்ல நிறம் பெறும்.

அரிசி


அரிசியின் பயன்பாடு உலகம் முழுவதும் உள்ளது. குறிப்பாக தென்னிந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மக்களின் அன்றாட உணவாக அரிசி இருக்கிறது. அரிசி உற்பத்தியில் மியான்மர் (பர்மா) முதலிடம் வகிக்கிறது. அதுபோல் தாய்லாந்து, இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் அதிகம் விளைகிறது.
அரிசி ஒரு மாவுப் பொருளாகும். உலகில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் அரிசியையே உணவாகக் கொண்டுள்ளனர்.
அரிசியில் அதாவது தவிடு நீக்கப்படாத அரிசியில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி12, வைட்டமின் கே, வைட்டமின் இ, மாவுச்சத்து, புரதச் சத்துக்கள் நிரம்பியுள்ளன.
ஆனால் தவிடு நீக்கப்பட்ட அரிசியில் மாவுச்சத்து மட்டுமே நிரம்பியுள்ளது.
இன்றைய கால கட்டத்தில் தவிடு நீக்கப்பட்ட அரிசியையே உட்கொள்ளும் சூழ்நிலையில் உள்ளோம்.
நாம் அனைவருமே கண்ணைப் பறிக்கும் வெண்மையான மல்லிகைப் பூ போன்ற அரிசியையே விரும்புகிறோம். இதில் நாவிற்கு சுவை மட்டுமே உண்டு. ஆனால் மாவுச்சத்தைத் தவிர வேறெந்த சத்துக்களும் கிடைப்பதில்லை.
இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்ட இவ்வகையான அரிசியில் உள்ள எல்லா வைட்டமின் சத்துக்களும் வெளியேற்றப்பட்டு விடுகிறது.
இந்த அரிசியை சமைத்து உண்பதால் மாவுச் சத்து அதிகம் உடலில் சேருகிறது. ஆரம்பத்தில் அந்த மாவுச்சத்தைக் கட்டுப்படுத்த உடலில் இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இன்சுலின் சுரப்பு குறைவதால் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது. இதனால் சர்க்கரை நோய் உண்டாகிவிடுகிறது.
விஞ்ஞான முன்னேற்றம் காணாத காலத்தில் மக்கள் கைக்குத்தல் அரிசியை பயன்படுத்தினர். உரலில் நெல்லை போட்டு உலக்கையால் அந்த நெல்லினை இடித்து அதன் உமியைப் பிரித்து சுத்தம் செய்து அந்த அரிசியை சமைத்து சாப்பிட்டனர். இந்த வகையில் எடுக்கப்படும் அரிசியில் தவிடு நீக்கப்படுவது இல்லை.
இவ்வாறு அரிசியை தவிட்டுடன் சேர்த்து சாப்பிடும்போது உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும். அதுபோல் அரிசியில் அடங்கியுள்ள மாவுப் பொருளை எளிதில் ஜீரணிக்கச் செய்யும்.
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்னும் பழமொழியை நாம் அறிந்திருப்போம்..
எந்த ஒரு பொருளையும் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதே இதன் பொருள். ஆனால் அதை முறியடிக்கும் மருந்தும் அந்த உணவிலேயே இருக்கிறது என்பதை பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.
இதைத்தான் சித்தர்கள் சத்துரு(பகைவன்), மித்துரு(நண்பன்) என்கின்றனர்.
அதாவது, மாம்பழம் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் அது பின்விளைவுகளை ஏற்படுத்தும் ஆனால் அதோடு சிறிதளவு மாம்பருப்பையும் சேர்த்து சாப்பிட்டால் எவ்வித பின்விளைவும் உண்டாகாது. இது அனைத்து உணவிற்கும் உண்டு.
தவிடு நீக்காத அரிசியை சாப்பிடுவதால் அதன் பலன்கள் அனைத்தும் சரிசமமாக உடலுக்கு சேர்கிறது.
இந்த தவிடு நீக்காத அரிசி இந்தியாவில் கேரளாவிலும், இலங்கையிலும் மட்டுமே அதிகம் பயன்படுத்துகின்றனர். தமிழ்நாட்டில் இந்த அரிசியை பயன்படுத்துவது தற்போது வெகுவாக குறைந்துவிட்டது.
முன்பு உற்பத்தி செய்யப்படும் நெல் அளவில் சற்று பெரியதாகவும், பயிர்க்காலம் 6 மாதமாகவும் இருந்தது. ஆனால் தற்போது குறுகிய காலத்தில் அதாவது 3 மாதத்திலேயே விளையும் நெல் வகைகளையே அதிகம் உற்பத்தி செய்கின்றனர். இவ்வகை பயிர்கள் அதிக விளைச்சலைக் கொடுக்கின்றது. உணவு பற்றாக்குறையைப் போக்க இவ்வகை பயிர்கள் மிகவும் உதவியாக உள்ளது.
இவ்வகை அரிசிகள் இரண்டு மூன்று முறை பாலீஷ் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது அளவில் சிறியதாகவும், சாப்பிட மிருதுவாகவும், வெண்மையாகவும் இருப்பதால் மக்கள் இதையே அதிகம் விரும்பி உண்கின்றனர்.
முன்பு கார் அரிசி, மணக்கத்தை, வாலான், கருங்குறுவை, ஈர்க்குச் சம்பா, புமுடுசம்பா, கோரைச்சம்பா, குறுஞ்சம்பா, மிளகுச் சம்பா, சீரகச் சம்பா, காளான்சம்பா, மைச்சம்பா, கோடைச்சம்பா, காடைச்சம்பா, மல்லிகைச் சம்பா, இலுப்பைப் பூச்சம்பா, மணிச்சம்பா, வினாதடிச்சம்பா, கைவரைச்சம்பா, செஞ்சம்பா, கல்துண்டைச் சம்பா, குண்டுச்சம்பா, குன்றிமணிச்சம்பா, அன்னமழகி, சொர்ணவல்லி என பல வகைகள் உண்டு.
உமி நீக்கிய அரிசியின் பொது குணங்கள் பற்றி:
உமி நீக்கிய அரிசி இதில் பச்சரிசி, புழுங்கல் அரிசி என இரு வகைப்படுத்துகின்றனர். நெல்மணியை நீர்விட்டு அவித்து காயவைத்து உரலில் வைத்து குத்தி உமியை நீக்கினால் அது புழுங்கல் அரிசி. நெல்லை வேகவைக்காமல் அப்படியே குத்தி உமியை நீக்கி பயன்படுத்தினால் அது பச்சரிசி.
கைக்குத்தல் அரிசியின் மருத்துவப் பயன்கள்:
  • எளிதில் சீரணமடையும்
  • மலச்சிக்கலைப் போக்கும்
  • சிறுநீரை நன்கு பிரிக்கும்
  • இரத்தத்தைச் சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
  • பித்த அதிகரிப்பை குறைக்கும்
  • நீரிழிவு நோயின் தாக்கம் இருக்காது
  • உடலில் தேங்கியுள்ள கொழுப்பை நீக்கும்.
  • சருமத்தைப் பாதுகாக்கும்.
  • வாத பித்த, கபத்தை அதனதன் நிலையில் வைத்திருக்கும்.
கைக்குத்தல் அரிசி தற்போது அதிகம் கிடைப்பதில்லை. உமி நீக்கி பாலீஷ் செய்யாத அரிசியை வாங்கி சமைத்து சாப்பிடுங்கள். நாவிற்கு ருசி, தொண்டைவரை, ஆனால் பலன் ஒன்றுமில்லை. ஆரோக்கிய உடலுக்கு கைக்குத்தல் அரிசி சிறந்தது. பாலீஷ் செய்த வெள்ளை அரிசி சத்தற்றது. அவற்றை சாப்பிடுவதை குறைத்து தவிடு நீக்காத அரிசியை வாங்கி உண்டு சிறந்த ஆரோக்கியத்தைப் பெறுங்கள்.


நன்றி:

தினகரன் & தமிழ் இணையத்தளம்

Jan 18, 2012

காதல்


பாடல் காதல் ஒரு பள்ளிக்கூடம்
படம்     ஆசை ஆசையாய்.

தாவரங்கள்

<div style="border-bottom-color: rgb(255, 215, 0); border-bottom-style: solid; border-bottom-width: 25px; border-left-color: rgb(255, 215, 0); border-left-style: solid; border-left-width: 25px; border-right-color: rgb(255, 215, 0); border-right-style: solid; border-right-width: 25px; border-top-color: rgb(255, 215, 0); border-top-style: solid; border-top-width: 25px; color: black; font-family: Verdana, Arial, sans-serif; font-size: 12px; margin-bottom: 0px; margin-left: 0px; margin-right: 0px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 0px; padding-right: 0px; padding-top: 0px; width: 600px;">
<div style="border-bottom-color:rgb(255, 215, 0); border-bottom-style: double; border-bottom-width: 30px; border-left-color: rgb(184, 134, 11); border-left-style: double; border-left-width: 30px; border-right-color: rgb(184, 134, 11); border-right-style: double; border-right-width: 30px; border-top-color: rgb(255, 215, 0); border-top-style: double; border-top-width: 30px; color: black; font-family: Verdana, Arial, sans-serif; font-size: 12px; margin-bottom: 0px; margin-left: 5px; margin-right: 5px; margin-top: 0px; padding-bottom: 0px; padding-left: 10px; padding-right: 10px; padding-top: 0px;"> English - Botanical - Hindhi - TAMIL

 Blue waterlily - Nymphaea  nouchali - Neelkamalநீலாம்பல்
Bougainvillea - Bougainvillea glabra - Booganbel - காகிதப்பூ
China Rose, Chinese hibiscus - Hibiscus rosa-sinensis - Gurhal - செம்பருத்திப்பூ  
Chrysanthemum - Chrysanthemum indicumChandramallika - சாமந்திப்பூ, செவ்வந்திப்பூ
Cobra saffron, Ceylon ironwood, Indian rose chestnut - Mesua ferrea - Nag champaNagkesar - நாகப்பூ
Cockscomb, Feathered Amaranth - Celosia argentea var. plumosa - Lalmurga -  கோழிப்பூ
Crape jasmine, Carnation of India - Tabernaemontana divaricata - Chandni நந்தியார்வட்டை, நந்தியாவட்டம்
Crossandra, Firecracker Flower - Crossandra infundibuliformis - Aboli  கனகாம்பரப்பூ
Cypress Vine, Star Glory, Hummingbird Vine - Ipomoea quamoclit - Kamlata - கெம்புமல்லிகை மயிர்மாணிக்கம்
Damask Rose - Rosa x damascenagulab,fasti gulab, Sudburg, Gulabi rang பன்னீர்ப்பூ
Datura - Datura innoxiaSafeddhatura - வெள்ளை ஊமத்தை, ஊமத்தம்பூ
Elephant CreeperArgyreia nervosaghav bel - கடற்பாலை சமுத்திரப்பாலை
Four O'clock, Beauty-of-the-night - Mirabilis jalapa - Gul abbas, Gulbakshi - அந்தி மந்தாரை Frangipani - Plumeria rubra  - champa, golachin, golenchi - சம்பங்கி சம்பங்கிப்பூGhanera - Nothapodytes nimmonianaGhanera - அரளி,அரளிப்பூ
Globe Amaranth - Gomphrena globosa - Gule makhmal - வாடாமல்லி வாடாமல்லிப்பூ
goden champa- Michelia champaca - champa - சம்பங்கி, சண்பகம்Green Shrimp Plant - Ecbolium ligustrinum - Udajat - நீலாம்பரி
Indian tulip - Thespesia populnea - Paras pipal  - பூவரசு, பூவரசம்பூ
Ixora, Jungle flameIxora coccinea - Rugmini - Vedchi - வெட்சி, வெட்சிப்பூ, இட்லிப்பூKewda, Fragrant Screw Pine - Pandanus odorifergagan-dhul - கேதகை தாழை,தாழம்பூKunda, Star jasmine - Jasminum multiflorum - Kunda - மகரந்தம்,மகரந்தப்பூ
Kurinji - Strobilanthes kunthiana - Kurinji - நீலக்குறிஞ்சி,குறிஞ்சிப்பூ
Law's Persian Violet - Exacum lawiiLahan chirayat - மருக்கொளுந்து
Lotus - Nelumbo nucifera - Kamal - செந்தாமரைப்பூ, தாமரைப்பூ, தாமரை, ஆம்பல்Madan mogra, Arabian Jasmine - Jasminum sambac - Madan mogra - குண்டு மல்லி, மல்லிகைப்பூ, முல்லைப்பூMadhavi lata, Hiptage, Helicopter Flower - Hiptage benghalensis - Madhavi lata -  வசந்தகால மல்லிகை
Malabar glory lily, Superb lily - Glariosa superba - bachnag - காந்தள், செங்காந்தள், வெண் காந்தள், தோன்றி, கார்த்திகைப்பூ
Maloo Creeper - Bauhinia vahlii - Malu, Jallaur - மந்தாரை, காட்டு மந்தாரை
Maulsari, Bullet wood - Mimusops elengi - Maulsari - மகிழம்பூ,வகுளம்பூ
Midday Flower, Scarlet Mallow - Pentapetes phoenicea - Dupahariya - நாகப்பூ
Night-flowering Jasmine - Nyctanthes arbor-tristis - Parijat - பவளமல்லிகைப்பூ, பவளமல்லி, பவழமல்லிகைப்பூ, பாரிஜாதம், பாரிஜாதப்பூ
Oleander - Kaner - Kaner  - அரளி,அரளிப்பூPeacock Flower - Caesalpinia pulcherrima forma flava - guletura - மயிற்கொன்றை,மயில் கொன்றை
Periwinkle - Catharanthus roseus - Sadabahar  - நித்தியகல்யாணிப்பூPink jasmine, Winter jasmine, Chinese jasmine - Jasminum polyanthum - Gulabi chameli - ஜாதிமல்லி
Pride of India, Queen Crape Myrtle - Lagerstroemia speciosa - Jarul - கதலிQuick Weed, gallant soldier - Galinsoga parviflora - Hameng shampakpi - மூக்குத்திப்பூ
Rose - Rosa - Gulab - ரோஜா,ரோசாSunflower - Helianthus annuus - Surajmukhi - சூரியகாந்தி, சூரியகாந்திப்பூTanner's cassia - Cassia auriculatatarwar - ஆவாரை, ஆவாரம்பூ, ஆவிரம்பூWater lily - Nymphaea lotus - Kumud - ஆம்பல்,அல்லி, வெள்ளாம்பல், அல்லிப்பூ, நெய்தல்..........!!! </div>
</div>

Jan 16, 2012

ரோஜா மலர்.4

பழைய தோட்ட ரோஜாக்கள்
பெரும்பாலான பழைய தோட்ட ரோஜாக்கள் கீழே உள்ள தொகுதிகள் ஒன்றில் வகைப்படுத்தப்படுகின்றன. பொதுவாக, ஐரோப்பிய அல்லது மத்திய தரைக் கடல் பகுதியை மூலமாகக் கொண்ட பழைய தோட்ட ரோஜாக்கள் ஒரு காலத்தில், குறிப்பிடத்தக்க நறு மணத்துடன், முதன்மையாக வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு வண்ணங்களில் இரட்டை இரட்டையாய்ப் பூக்கள் பூக்கும் மரப் புதர்கள். இந்தப் புதர்களின் இலைகள் மிகவும் நோய் எதிர்ப்புச் சக்தி கொண்டவையாக இருக்கின்றன, மற்றும் அவை பொதுவாக இரண்டு வருடம் முதிர்ந்த பிரம்புகள் மீது தான் படர்ந்து பூக்கின்றன.

ஆல்பா

அப்படியே சொல்வது என்றால் "வெள்ளை ரோஜாக்கள்", ஆர். ஆர்வேன்சிஸ் மற்றும் நெருங்கிய தொடர்புடைய ஆர்.ஆல்பா விலிருந்து வந்தவை. மிகப் பழைய தோட்ட ரோஜாக்களின் சில வகைகளான இவைகளை, கிரேட் பிரிட்டனுக்கு ரோமானியர்கள் எடுத்து வந்திருக்க்கக்கூடும். இந்தப் புதர்கள் வருடத்திற்கு ஒரு முறை வசந்த காலத்தில் வெள்ளை அல்லது மங்கலான இளஞ்சிவப்பு பூக்களாய் பூக்கின்றன. இந்தப் புதர்கள் அடிக்கடி பழுப்பு-பச்சை இலைகளைக் கொண்டிருக்கும் மற்றும் இவை வளர்ச்சியின் போது மேல் ஏறிச் செல்லும் வழக்கம் உள்ளவை. உதாரணங்கள்: 'ஆல்பா செமிப்லேனா', 'யார்க்கின் வெள்ளை ரோஜா'.
 
கேலிக்கா



கேலிக்கா ரோஜா 'சார்ல்ஸ் டே மில்ஸ்', 1790 க்கு முன்பு
மத்திய மற்றும் தெற்கு ஐரோப்பாவைச் சேர்ந்த ஆர்.கேலிக்கா விலிருந்து உருவாக்கப்பட்ட கேலிக்கா அல்லது ப்ராவின்ஸ் ரோஜாக்கள் மிகப் பழைய வகுப்பு ஆகும். அப்போதகேரியின் ரோஜா, ஆர்.கேல்லிக்கா அபிஷினாலிஸ் , மத்திய காலங்களில் துறவிகளின் மூலிகைப் பண்ணைகளில் வளர்க்கப் பட்டது, மற்றும் ஆங்கிலேய சரித்திரத்தில் லன்கஸ்டரின் சிவப்பு  ரோஜா என்று பிரபலமாகியது. அவை கோடையில் குட்டையான, அபூர்வமாக நான்கு அடிக்கு மேற்பட்ட புதர்களில் ஒரு முறை பூக்கும். ஒரு முறை பூக்கும் மற்ற பல பழைய தோட்ட ரோஜாக்களைப் போலன்றி, கேலிக்கா வகுப்பு சிவப்பு, பழுத்த சிவப்பு, ஆழ்ந்த ரத்தச் சிவப்பு வண்ணங்களையும் உள்ளடக்கியது. உதாரணங்கள்: 'கார்டினல் டே ரிஷேலியு', 'சார்ல்ஸ் டே மில்ஸ்', 'ரோசா முண்டி' (' ஆர். கேலிக்கா வர்ஸிகலர்).
 
டமாஸ்க்
 


'ஆட்டம் டமாஸ்க்' (க்வேட்ரே சைசோன்ஸ்')
தொன்மையான காலங்களில் ரோசா மோஸ்சாட்டா x ரோசா கேலிக்கா x ரோசா பிட்ஷேன்கொனா வகைகளின் இயற்கையான கலப்பால் தோன்றிய டமாஸ்க் ரோஜாக்களை 1254 க்கும் 1276 க்கும் இடைப் பட்ட ஒரு காலத்தில் பர்சியாவிலிருந்து ஐரோப்பாவுக்கு கொண்டு வந்த பெருமை ராபர்ட் டே ப்ரை க்கு வழங்கப் படுகிறது என்றாலும் அதற்குப் பல நுற்றாண்டுகளுக்கு முன்பே ஐரோப்பாவில் குறைந்த பட்சமாக ஒரு டமாஸ்க் ரோஜாவாவது இருந்தது என்பதற்கு பழங்கால ரோமானிய சுவரோவியங்களின் சான்று உள்ளது. கோடை டமாஸ்க்குகள் கோடையில் ஒருமுறை பூக்கின்றன. இலையுதிர் காலம் அல்லது நான்கு பருவங்கள் டமாஸ்க்குகள் இலையுதிர் காலத்தில் பிறகு மீண்டும் பூக்கின்றன: the only remontant பழைய ஐரோப்பிய ரோஜாக்கள். புதர்கள் ஒரே சீராகவும், கண்ட இடங்களில் பரவியும் வளரும் பழக்கங்கள் கொண்டவை மற்றும் கொடிய முட்கள் கொண்டவை. இதன் பூக்கள் பொதுவாக, கேலிக்கா வகையை விட சற்றே அதிகமாக தளர்ந்த இதழ் அமைப்பும், ஒரு வலிமையான விரும்பத்தக்க நறு மணமும் கொண்டவை. உதாரணங்கள்: 'இஸ்பகான்', 'மேடம் ஹார்டி'.
 

சென்டிபோலியா அல்லது ப்ரோவென்ஸ்

நெதர்லாந்தில் பதினேழாம் நுற்றாண்டில் வளர்க்கப்பட்ட சென்ட்டிபோலியா  ரோஜாக்கள், அவற்றின் "நூறு இதழ்களுக்காக" அவ்வாறு பெயரிடப்பட்டிருக்கின்றன; அந்தப் பூக்களின் கோள வடிவம் காரணமாக அவை முட்டைக்கோஸ் ரோஜாக்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. டமாஸ்க் ரோஜாக்கள் ஆல்பாஸ்களுடன் கலப்பு செய்யப்பட்டதன் விளைவான சென்ட்டிபோலியாக்கள் ஒரு-முறை பூப்பவை. ஒரு பிரிவு என்கிற முறையில், பலவிதமான அளவுகள் மற்றும் உருவங்களின் சிதைவுகள் கொண்ட, மோஸ் ரோஜாக்கள் மற்றும் முதன்முறையாக மிகச் சிறிய அளவில் சுருக்கப்பட்ட சில ரோஜாக்களை உள்ளடக்கிய (கீழே பார்க்க).உற்பத்திக்கு, வளைந்து கொடுக்கக்கூடியவை என்று புகழ் பெற்றவை. உதாரணங்கள்: 'சென்ட்டிபோலியா', 'பால் ரிக்கால்ட்'.

மோஸ்

மோஸ் ரோஜாக்கள், முதன்மையாக சென்ட்டி போலியா ரோஜாக்களின் (அல்லது சில சமயங்களில் டமாஸ்க்குகளின் )சிதைவுகள், தமது தண்டுகளின் மேற்புறம் திரண்ட தசை வளர்ச்சியும், தேய்க்கப்படும் பொழுது மரம் அல்லது தைல வாசனையை வெளித் தள்ளும் புற இதழ்களையும் கொண்டவை. மோஸ் ரோஜாக்கள் இந்த அரிதான சிறப்பு இயல்புக்காக அன்புடன் போற்றி வளர்க்கப்படுகின்றன என்றாலும் ஒரு பிரிவு என்கிற முறையில் அவை ரோஜாக்களின் புதிய வகைப்படுத்துதலுக்கு எந்த ஒரு பங்களிப்பும் செய்து விடவில்லை. சென்ட்டி போலியாவை பின்புலமாகக் கொண்ட மோஸ் ரோஜாக்கள் ஒருமுறை-பூப்பவை. ஆனால் தாம் ஆட்டம் டமாஸ்க் பாரம்பரியம் என்பதை உணர்த்தும் விதமாக சில மோஸ் ரோஜாக்கள் மீண்டும் மீண்டும் பூக்கும் தன்மையை வெளிப்படுத்துகின்றன. உதாரணம்:'காமன் மோஸ்'(சென்ட்டிபோலியா-மோஸ்), 'ஆல்பிரட் டே டல்மாஸ்' (ஆட்டம் டமாஸ்க் மோஸ்).

போர்ட்லேன்ட்

நீண்ட காலமாக போர்ட்லேன்ட் ரோஜாக்கள் சீன ரோஜாக்களுக்கும் ஐரோப்பிய ரோஜாக்களுக்கும் ஏற்பட்ட கலப்பின் முதல் பிரிவு என்றே நினைக்கப்பட்டு வந்தன; ஆயினும்,லயான்ஸ் பல்கலை கழகத்தின் சமீபத்திய மரபணுச் சோதனைகள், மூல போர்ட்லேன்ட் ரோஜாக்களில் சீன மரபு வழி எதுவும் இல்லை, மாறாக சொல்லப்போனால் அவை ஒரு ஆட்டம் டமாஸ்க்/கேலிக்கா சந்ததியி ன் எடுத்துக்காட்டு என்று தெளிவுபடுத்தியிருக்கின்றன. 1775 ஆம் ஆண்டு வாக்கில் ஆர்.பேஸ்ட்டானா அல்லது 'ஸ்கேர்லெட் போர் சீசன்ஸ்' ரோஸ்' (இப்பொழுது எளிமையாக அறியப்படுகிற 'தி போர்ட்லேன்ட் ரோஸ்') என்று அழைக்கப்பட்ட ஒரு ரோஜாவை போர்ட்லேன்டின் கோமகள் இத்தாலியிலிருந்து பெற்றுக் கொண்டதை அடுத்து அவைகள் அவர் பெயரில் அழைக்கப்படுகின்றன. அதன் பிறகு அந்த ஒரு ரோஜாவிலிருந்து போர்ட்லேன்ட் ரோஜாக்கள் என்கிற முழு வகுப்பும் உருவாக்கப்பட்டது. முதன் முதலாய், மீண்டும் மீண்டும் பூக்கக்கூடிய, கவர்ச்சியான ஐரோப்பிய-பாணி பூக்கள் கொண்ட, இந்த ரோஜா வகுப்பின் செடிகள் குட்டையாகவும், அடர்த்தியாகவும், இதன் பூக்காம்புகளும் அதே விகிதப்படி குட்டையாக விளங்கும் தன்மையும் கொண்டவை. உதாரணம்: 'ஜேம்ஸ் வெயிட்ச்', 'ரோஸ் டே ரெஷ்ட்', 'கோம்டே டே ஷேம்புர்ட்'.

சீனா


'பார்சன்'ஸ் பிங்க் சீனா' அல்லது 'ஓல்ட் ப்ளஷ்' "வீரியமான சீனாக்களில்" ஒன்று.
ரோசா சினென்சிஸ் ஐ ஆதாரமாகக் கொண்ட சீனா ரோஜாக்கள், கிழக்கு ஆசியாவில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் பயிரிடப்பட்டு கடைசியாக 1700௦௦ களில் மேற்கு ஐரோப்பாவுக்கு வந்து சேர்ந்தது. அவைகள் தான் இன்றைய  பலவற்றின் பெற்றோர்கள் மற்றும் அவை பூவின் அமைப்பில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்தன. மேலே கூறிய ஐரோப்பிய ரோஜா வகுப்புகளுடன் ஒப்பிடுகையில், சீன ரோஜாக்கள் குளிரால் அதிகமாய் பாதிப்படைகின்ற புதர்களும், குறைவான மணம், அதிக சுள்ளிகள் மீது அமைந்த சிறு வடிவப் பூக்களும் கொண்டவை. என்றாலும் அவை ஐரோப்பிய வகைகளைப் போலன்றி கோடை முழுமைக்கும், இலையுதிர் காலத்தின் கடைசி கட்டம் வரை, மீண்டும் மீண்டும் பூக்கும் வியக்கத்தக்க திறன் கொண்டிருந்தன. இதனால் 1800 களின் ஆரம்பத்தில் கலப்பினம் செய்யும் நோக்கங்கள் காரணமாக இவை மிகவும் விரும்பப்பட்டவையாக இருந்தன. ஐரோப்பிய ரோஜாக்கள் திறந்த பிறகு பொலிவு இழப்பது போலன்றி, சீன ரோஜாக்களின் பூக்கள் "சூரிய பழுப்பு" அல்லது காலப்போக்கில் கருப்பாகின்ற தன்மையைக் கொண்டிருந்ததால் குறிப்பிடத்தக்கவை ஆகின. இன்றைய கண்காட்சி ரோஜா தனது வடிவத்திற்கு சீன உயிர் அணுக்களுக்குக் கடமைப் பட்டிருக்கிறது. மேலும், திறந்தவுடன் விரிந்து கொள்ளும் மெல்லிய மொட்டுகளை கொண்டு வந்ததும் சீனா ரோஜாக்கள் தாம். கிரகாம் ஸ்டூவர்ட் தாமஸ் கூற்றுப்படி, சீன ரோஜாக்கள் என்கிற வகுப்பு மீது தான் நவீன காலத்து ரோஜாக்கள் முன்னேற்றம் கண்டிருக்கின்றன. 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் துவக்கப் பகுதியிலும், நான்கு வீரியமான சீன ரோஜாக்கள் ('ச்லேட்டர்ஸ்'கிரிம்சன் சீனா'1792, 'பார்சன்ஸ் பிங்க் சீனா' 1793, 'ஹும்ஸ் ப்ளஷ் டீ-சென்ட்டட் சீனா, 1809; மற்றும் 'பார்க்ஸ்' யெல்லொவ் டீ-சென்ட்டட் சீனா, 1824) ஐரோப்பாவுக்கு  கொண்டு வரப்பட்டன என்பது மரபுக் கூற்று. உண்மையில் அதை விட அதிகமாக, குறைந்த பட்சம் ஐந்து சீனாக்கள், தேயிலைகளை எண்ணிக்கையில் கொள்ளாமல், இறக்குமதி செய்யப்பட்டன. மீண்டும் மீண்டும் பூக்கும் பழைய தோட்ட ரோஜாக்களின் முதல் வகுப்புகள் மற்றும் பிற்பாடு நவீன தோட்ட ரோஜாக்கள் படைப்பை இது கொண்டு வந்தது. உதாரணங்கள்: 'ஓல்ட் ப்ளஷ் சீனா', 'முடாபிலிஸ்' (வண்ணத்துப் பூச்சி ரோஜா). உதாரணங்கள்: 'ஓல்ட் ப்ளஷ் சீனா', 'முடாபிலிஸ்' (வண்ணத்துப் பூச்சி ரோஜா).
 
டீ
 

டீ ரோஜா 'மிஸ்ஸஸ் டட்லி கிராஸ்' (பால் 1907)
கீழ்திசை பயிரிடு வகைகளான, மூலமான "டீ-சென்ட்டட் சீனாஸ்" (ரோசா x ஓடோரட்டா ) வகைகள் ஆர்.சினென்சிஸ்ஸும் ஆசியாவின் வெளிர் மஞ்சள் பூக்களுடன் கூடிய ஒரு பெரிய ஏறு வகை ரோஜாவான ஆர்.ஜைஜான்டீயும் சேர்ந்த கலப்பினங்களின் பிரதிநிதியாக கருதப்பட்டு வந்தன. 1800 களின் துவக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்ட உடனேயே வளர்ப்பாளர்கள், குறிப்பாக பிரான்சில் , முதலில் அவற்றை சீனாக்களுடனும் பிறகு போர்பான்கள் மற்றும் நோயசெட்டேக்களுடனும் கலப்புச் செய்து தமது வேலையை ஆரம்பித்தனர். டீக்கள் மீண்டும் மீண்டும் பூக்கும் ரோஜாக்கள், அவற்றின் நறு மணம் சீனாவின் கறுப்புத் தேநீரை நினைவு படுத்துவதால் (இது எப்பொழுதும் பொருந்துவதில்லை என்றாலும்)அவ்வாறு பெயரிடப்பட்டவை. நிறத்தின் விதங்களில் வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் (அந்தக் காலத்தில் ஒரு புதுமை) மஞ்சள், மஞ்சள் கலந்த ஆரஞ்ச் போன்ற மென்மையான வெளிர் வண்ணங்கள் அடங்கும். பலவீனமான பூக்காம்புகள் காரணமாக பயிருடு வகைகளின் தனி பூக்கள் பாதி தொங்குபவை மற்றும் தலையசைப்பவை. "எடுத்துக்காட்டாக" அமையும் ஒரு டீயில், கூரான மொட்டுக்கள் உயர்ந்து-நடுவிலான, அதன் இதழ்கள் பின்னோக்கி சுருண்டிருக்க சுருள் சுருளாய் விரியும் பூக்களையும், அதன் இதழ்கள் ஒரு கூர்நுனி கொண்டும் திகழும். இப்படியாக டீக்கள் தாம் இன்றைய "உதாரணமாய்த் திகழ்கிற" பூ வியாபாரிகளின் ரோஜா வடிவத்தின் மூலகர்த்தாக்கள். சரித்திர ஆசிரியர் ப்ரென்ட் டிக்கர்சன் கூற்றுப்படி, இந்த டீ வகைப்படுத்தல் எந்த அளவுக்கு தாவர இயலுக்கு கடமைப்பட்டதோ அதே அளவுக்கு வியாபார யுக்திக்கும். 19 வது நூற்றாண்டு தோட்டக்கலைஞர்கள் அவர்கள்தம் வசம் விரும்பத்தகுந்த டீ பூ வடிவம் இருந்தால், அவர்களது ஆசியாவை ஆதாரமாகக் கொண்ட பயிரிடு வகைகளை "டீஸ்" என்று வகைப்படுத்தி விடுவார்கள், அவர்களிடம் இல்லை என்றால் "சீனாஸ்". சீனாஸ் போல இந்த டீஸ் குளிரான சீதோஷ்ண நிலைகளில் கடுமையாக இருப்பதில்லை. உதாரணங்கள்: 'லேடி ஹில்லிங்க்டன்', 'மேமன் கோஷட்'.
 

போர்பான்

போர்பான்கள் இந்திய மகா சமுத்திரத்தில் மடகாஸ்கருக்கு அப்பால் லே ஐல் டே போர்பான் என்கிற(தற்போது ரீயுனியன் என்று அழைக்கப்படும்) இடத்தில் தோன்றியவை. இவை ஆட்டம் டமாஸ்குக்கும், 'ஓல்ட் ப்ளஷ்' சீன ரோஜாவுக்கும் இடையே ஏற்பட்ட கலப்பின் விளைவாக தோன்றியிருக்க வேண்டும், இவை இரண்டுமே அந்த தீவில் புதர் வேலி அமைக்கும் பொருளாக அடிக்கடி பயன் படுத்தப் பட்டவை. வழவழப்பான இலைகளும் மங்கலான ஊதா நிறப் பிரம்புகளும் கொண்ட உயிர்த்துடிப்புள்ள, அடிக்கடி பாதி மேலே ஏறும் புதர்கள் மீது இவை மீண்டும் மீண்டும் பூக்கின்றன. பிரான்சில் இவை முதன் முதலாக 1823 இல் அறிமுகப்படுத்தப்பட்டன. உதாரணங்கள்: 'லுயிசே ஓடியர்', 'மேம்' பியர்ரே ஓகர்', 'சேபிரின் ட்ரௌஹின்'.

நோய்செட்டே


நோய்செட்டே ரோஜா 'டெஸ்ப்ரெ ஆ' ப்லுஅர்ஸ் ஷோன்ஸ்' (டெஸ்ப்ரெ 1830)
முதல் நோய்செட்டே ரோஜா தெற்கு கரொலிநாவைச் சேர்ந்த ஜான் சேம்ப்னிஸ் என்ற பெயர் கொண்ட அரிசி பயிரிடுபவரால் ஒரு கலப்பின நாற்றாக வளர்க்கப்பட்டது. இதன் பெற்றோர்கள் சீன ரோஜா 'பார்சன்ஸ்'பிங்க்' மற்றும் இலையுதிர் காலத்தில் பூக்கும் கஸ்தூரி ரோஜா (ரோசா மோஸ்சேட்டா ), விளைவு வசந்த காலம் தொடங்கி இலையுதிர் காலம் வரை சிறிய இளஞ்சிவப்பு பூக்கள் கொண்ட பெரிய கொத்துகளை உருவாக்கும் உயிர்த்துடிப்புள்ள ஏறும் ரோஜா. சேம்ப்னிஸ் தமது ரோஜாவின் நாற்றுகளை ('சேம்ப்னிஸ்' பிங்க் க்லஸ்தர்' என்று அழைக்கப்படும்) பிலிப்பே நோய்செட்டே என்ற தனது தோட்டக்கலை நண்பருக்கு அனுப்பி வைத்தார், அவர் அந்தத் தாவரங்களை பாரிசிலிருந்த  தனது சகோதரர் லூயிக்கு அனுப்பினார், இவர் 'ப்ளஷ் நோய்செட்டே' வை 1817 இல் அறிமுகப்ப்படுத்தினார். முதல் நோய்செட்டேக்கள் சின்னப்பூக்கள் கொண்டதாயும், பெருமளவு குளிர் தாங்கும் ஏறிகள் ஆகவும் இருந்தன. பிற்பாடு டீ ரோஜாக்களின் மரபணுக்களைப் புகுத்தியது, அளவில் பெரிய பூக்கள், அளவில் சிறிய கொத்துக்கள், கணிசமாகக் குறைந்து போன குளிர் தாங்கும் வலிமை கொண்ட ஒரு டீ-நோய்செட்டே துணைவகுப்பை உருவாக்கியது. உதாரணங்கள்: 'ப்ளஷ் நோய்செட்டே', 'மேம். ஆல்பிரட் கேரியேர்' (நோய்செட்டே), 'மரேச்சல் நியல்' (டீ -நோய்செட்டே). (ஸீ மற்றும் [[: டே:நோய்செட்டே-ரோஜா|ஜெர்மன்]] இன் நோய்செட்டே ரோஜாக்களை பற்றிய கட்டுரைகள்)

ஹைப்ரிட் பர்பெச்சுவல்


ஹைப்ரிட் பெர்பெச்சுவல் ரோஜா 'ல ரெயின்'(லஃபே 1844)

விக்டோரியாவின்  இங்கிலாந்தில் முதன்மையான ரோஜாக்களின் வகுப்பு, ஹைப்ரிட் பெர்பெச்சுவல்ஸ் (ஹைப்ரைட்ஸ் ரிமோன்ட்டன்ட்ஸ் இன் ஒரு தவறான பொருள் தரும் மொழி பெயர்ப்பு, 'மீண்டும் பூக்கும் கலப்பினங்கள்') 1838 இல் ஆசிய ரேமொண்டன்சி ஐயும், பழைய ஐரோப்பிய மரபு வழிகளையும் வெற்றிகரமாக இணைத்த முதல் ரோஜாக்களாக வெளிப்பட்டது. தோன்றியது. மீண்டும் பூத்தல் என்பது ஒரு மந்த கால இயல்பு ஆதலால், ஆசிய/ஐரோப்பிய கலப்புகளின் (ஹைப்ரிட் சீனாஸ், ஹைப்ரிட் போர்பான்ஸ்,ஹைப்ரிட் நோய்செட்டேஸ்),முதல் தலைமுறை பிடிவாதமாக ஒருமுறை பூத்தன, ஆனால் இந்த ரோஜாக்களை அவற்றைத் தம்முடனேயே அல்லது சீனாஸ் உடன் அல்லது டீஸ் உடன் மறு கலப்பு செய்த போது, அவற்றின் சில சேய்கள் ஒரு முறைக்கு மேலாகவே பூத்தன. இந்த வகையில் ஹைப்ரிட் பர்பெச்சுவல்கள் ஒரு விதமான தொகுப்பு, பெருமளவுக்கு போர்பான்ஸ் களிடமிருந்தும் சீனாஸ்,டீஸ்,டமாஸ்க்ஸ், கேல்லிக்காஸ் மற்றும் ஒரு சிறிய அளவில் நோய்செட்டேஸ், ஆல்பாஸ் மற்றும் சென்ட்டி போலியாஸ் களிடமிருந்தும் சேர்த்துக் கலந்த கலவையிலிருந்து பெற்ற ஒரு ஜாடி வகுப்பு. மென்மையான தேநீர் ரோஜாக்கள் குளிர் பகுதிகளில் செழித்து வளர முடியாது என்பதால் இவை அந்தக் காலத்தில் வட ஐரோப்பாவின் மிகப் பிரபலமான தோட்ட மற்றும் பூ வியாபாரிகளின் ரோஜாக்களாக ஆக ஆனது. மற்றும் ஹைப்ரிட் பர்பெச்சுவல்கள் இன் அளவில் மிகப் பெரிய பூக்கள் போட்டா போட்டி கண் காட்சிகள் என்கிற புதிய புதிர்-மோகத்திற்கு நன்கு பொருந்தி வந்தன. பெயரில் இருக்கும் "பர்பெச்சுவல்" என்கிற வார்த்தை மீண்டும் மீண்டும் பூத்தலைக் குறிப்பால் உணர்த்துகின்றன, ஆனால் இந்த வகுப்பின் பல சார்ந்தினங்கள் மீண்டும் மலரும் பழக்கம் அறவே இல்லாது இருந்தன. வசந்த காலத்தில் ஒரு மிகப் பெரிய அளவில் பூத்தல், தொடர்ந்து கோடையில் சிதறிய பூத்தல், சிறிய அளவில் இலையுதிர் கால வெடித்து சிதறல் அல்லது சில நேரங்களில் அடுத்த வசந்தம் வரை பூத்தல் என்பது பூஜ்யம் என்கிற போக்கு இருந்தது. குறைந்த வரம்பிலான நிறத் தட்டு (வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்பு) நம்பத் தகுந்த மீண்டும் மீண்டும் பூத்தல் இல்லாமை, போன்ற காரணங்களால் ஹைப்ரிட் பர்பெச்சுவல்ஸ் கடைசியாக அவைகளின் சொந்த சந்ததியினரான ஹைப்ரிட் டீஸ் ஆல் இருளடைந்தன. உதரணங்கள்: 'பர்டிநந் பிச்சர்ட்', 'ரெயின் டேஸ் வயலேட்ட்ஸ்', 'பால் நெய்ரான்'.

 ஹைப்ரிட் மஸ்க்



ஹைப்ரிட் மஸ்க் ரோஜா 'மூன்லைட்'(பெம்பர்ட்டன் 1913)

ஹைப்ரிட் மஸ்க் தொகுதி முதன்மையாக ரெவரென்ட் ஜோஸப் பெம்பர்டன் என்கிற ஒரு பிரிட்டிஷ் ரோஜா நிபுணரால் 20 ஆம் நுற்றாண்டின் துவக்கத்தில் பீட்டர் லேம்பர்ட் இன் 1896 ஆம் வருடத்துக் கலப்பு 'ஆக்லையா' வை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த ரோஜாவின் 'ட்ரையர்' என்கிற நாற்று இந்த வகுப்பின் அடிக்கல்லாகக் கருதப் படுகிறது. இவற்றின் சில பெற்றோர்கள் அறிமுகம் இல்லாதவர்கள் ஆதலால், இந்த வகுப்பின் மரபியல் அவ்வளவு தெளிவாக இல்லை. ஆயினும், ரோஸ் மல்டிபிளோரா ஒரு பெற்றோராக அறியப் படுகிறது, மற்றும் ஆர்.மோஸ்சாட்டா (கஸ்தூரி ரோஜா)வும் இதன் மரபுரிமையில் கணக்கிடப்படுகிறது. என்றாலும் அதன் பெயர் குறிப்பிட்டுக் காட்டுவதைப் போல் அதற்கு அந்த அளவு முக்கியத்துவம் கிடையாது. ஹைப்ரிட் மஸ்க்குகள் நோய்-எதிர்ப்பவை, ரேமொண்டன்ட் மற்றும் வலிமையான, தனிப்பட்ட "கஸ்தூரி" வாசனையுடன் பொதுவாகக் கொத்துகளாய் பூப்பவை. 'பப் பியுட்டி' மற்றும் 'பெனலோப்' உதாரணங்களில் அடங்கும்.

 பெர்முடா "மிஸ்டரி" ரோஜாக்கள்

குறைந்தது ஒரு நூற்றாண்டாய் பெர்முடாவில் வளர்க்கப்பட்டு வந்த பல டசன் "கண்டுபிடிக்கப்பட்ட" ரோஜாக்களின் ஒரு தொகுதி. வெப்ப மண்டல மற்றும் உப வெப்ப மண்டலப் பகுதிகளில் ரோஜாக்கள் வளர்ப்பவர்களுக்கு இந்த ரோஜாக்கள் குறிப்பிடத்தக்க பயன் மற்றும் ஆர்வம் தருபவை, ஏனென்றால், இவை வெப்பமான ஈரப்பதம் உள்ள பகுதிகளில் ரோஜா சாகுபடியை வாட்டும் நேமட்டோட் எனப்படும் புழுக்கள் ஏற்படுத்தும் கேடு மற்றும் காளான் நோய்களுக்கு  சிறந்த எதிர்ப்பு தருபவை மற்றும் வெப்பமான, ஈரப்பதம் உள்ள தட்பவெப்ப நிலையில் பூக்க வல்லவை. இவற்றில் பெரும்பாலான பூக்கள் ஏதோ ஒரு வகையில் வேளாண்மை அல்லது அதன் நடவடிக்கைகளிலிருந்து நீக்கி வைக்கப்பட்ட பழைய தோட்ட ரோஜா பயிரிடு வகைகளாக இருக்கக் கூடும். இவைகள் "மிஸ்டரி ரோஜாக்கள்" ஏனென்றால் இவற்றின் "சரியான" சரித்திரப் பெயர்கள் தொலைந்து போய் விட்டன. மரபின் கட்டளை என்னவென்றால் இவற்றிற்கு, இவற்றை மறுகண்டுபிடிப்பு செய்த தோட்டத்தின் உரிமையாளர் பெயரை இட வேண்டும் என்பது தான்.

ஹைப்ரிட் ருகோசா


ருகோசா ரோஜா 'ப்ளேங்க் டபள் டே கொபர்ட்' (கோஷட் 1893)

ஆர்.ருகோசா தாவரங்களில் இருந்து பெறப்பட்ட, இந்த உயிர்த்துடிப்புள்ள ரோஜாக்கள் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுடன் மிகவும் கடுமையானவை. இவற்றில் பெரும்பாலானவை மிகவும் நறுமணமானவை, மீண்டும் மீண்டும் பூப்பவை, நடுத்தரமான இரண்டு தட்டையான பூக்கள் கொண்டவை. ஹைப்ரிட் ருகோசாவின் தனிப்படுத்திக் காட்டும் சிறப்பு என்னவென்றால் இதன் சுருக்கம் விழுந்த இலைகள், ஆனால் சில கலப்பினங்களுக்கு இந்த தனி இயல்பு இருக்காது. இந்த ரோஜாக்கள் அடிக்கடி இடுப்புகளை அமைத்துக் கொள்ளும். 'ஹன்சா' மற்றும் ரோசரேயி டே ல'ஹே' உதாரணங்களில் அடங்கும்.

மற்றவை

மற்ற வேறு சில சிறு வகுப்புகளும் இருக்கின்றன (ஸ்காட்ஸ், ஸ்வீட் ப்ரையர் போன்றவை) மற்றும் சில பழைய ரோஜாக்களின் ஏறும் வகுப்புகள் (ஐர்ஷைர், க்ளைம்பிங் சீனா, லேவிகேட்டா, செம்பர்விரேன்ஸ், போர்சால்ட், க்ளைம்பிங் டீ, மற்றும் க்ளைம்பிங் போர்பான் ஐ உள்ளடக்கியவை) உள்ளன. ஏறு மற்றும் புதர் வடிவங்களின் வகுப்புகள் இரண்டும் அடிக்கடி ஒன்றாகத் தொகுக்கப்படுகின்றன.

 நவீன தோட்ட ரோஜாக்கள்

நவீன ரோஜாக்களை வகைப்படுத்துதல் என்பது மிகவும் குழப்பமளிக்கக் கூடியது ஏனென்றால் பல நவீன ரோஜாக்களில் பழைய தோட்ட ரோஜாக்களின் பாரம்பரியம் உள்ளது மற்றும் இவற்றின் உருவம் மிக அதிகமாக வேறுபடுகிறது. வகைப்படுத்துதல் வளர்ச்சி மற்றும் பூக்கும் சிறப்பு இயல்புகள் நோக்கில் "பெரிய பூக்கள் கொண்ட புதர்", "மீண்டும் தோன்றும், பெரிய பூக்கள் கொண்ட புதர்", "கொத்துப் பூக்கள் கொண்டவை", "ரேம்ப்ளர் ரெகரன்ட்", அல்லது "கிரௌண்ட் கவர் நான்-ரெகரன்ட்" போன்று அமையும். மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் பிரபலமான நவீன தோட்ட ரோஜாக்களின் வகைப்படுத்துதல் கீழ்க் கண்டவையில் அடங்கும்:

ஹைப்ரிட் டீ


ஒரு 'மெமோரியம்' ஹைப்ரிட் டீ ரோஜா (வான் ஆப்ராம்ஸ் 1962)

நவீன ரோஜாக்களின் வரலாற்றின் பெரும் பகுதியில் அதிகமாய் விரும்பப்படும் ஹைப்ரிட் டிஸ் முதலில் 1800 களின் இறுதியில் டீ ரோஜாக்களை ஹைப்ரிட் பர்பெச்சுவல்ஸ் களுடன் கலப்பினம் செய்து உருவாக்கப்பட்டன. 1867 இல் உருவாக்கப்பட்ட 'ல பிரான்ஸ்' ரோஜாக்களின் ஒரு புதிய வகுப்பின் முதல் அறிகுறி என்று உலகெங்கும் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஹைப்ரிட் டீஸ் இல் தமது இரண்டு பெற்றோர்களுக்கும் இடையிலான நடுவழி தனி இயல்புகள் காட்சி தருகின்றன: டீஸ் ஐ விடக் கடுமையானவை ஆனால் ஹைப்ரிட் பர்பெச்சுவல்ஸ் ஐ விடக் கடுமை குறைந்தவை, மற்றும் எப்போதும் பூப்பதில் ஹைப்ரிட் பெர்பெச்சுவல்ஸ் ஐ விட அதிகம் ஆனால் டீஸ் ஐ விடக் குறைவு. பூக்கள் பெரிய, உயர்-நடுவிலான மொட்டுகளுடன் நன்கு வடிவமைந்து, ஒவ்வொரு பூத்தண்டும் சொல்லி வைத்தாற்போல் ஒற்றையான நன்கு அமைந்த பூவில் முடிவு பெறுகிறது. புதர்கள் விரைப்பாக மேல்நோக்கியும், நெருக்கமில்லாத இலைகளுடனும் கூடிய இவை இன்றைய நாட்களில் பெரும்பாலும் இயற்கைப் பரப்பின் ஒரு வேண்டாத சுமையாகப் பார்க்கப்படுகின்றன. ஹைப்ரிட் டீஸ் 20 ஆம் நூற்றாண்டின் மிகவும் பிரபலமான தோட்ட ரோஜாக்களின் ஒரு வகுப்பு என்று பெயர் பெற்றன; இன்று, இவை மற்ற எந்த ரோஜா வகுப்பைகளையும் விட பராமரிப்புச் செலவு அதிகம் பிடிக்கும் வகை என்கிற அவப்பெயர் காரணமாய் தோட்டக்காரர்கள் மற்றும் இயற்கை பரப்பை சீரமைப்பவர்கள் மத்தியில் இவற்றிற்கு ஒரு செல்வாக்கு சரிவு ஏற்பட்டு குறைந்த பராமரிப்புச் செலவு பிடிக்கும் "இயற்கை பரப்பு" ரோஜாக்கள் பக்கம் செல்லும் நிலை. ஹைப்ரிட் டீ பூ தொழிலின் நிர்ணயிக்கப்பட்ட தரம் கொண்ட ரோஜாவாக நிலவி வருகிறது, அது சம்பிரதாயமான சூழல்களில் சிறிய தோட்டங்களில் இன்னமும் விரும்பப்படுகிறது. உதாரணங்கள்: 'பீஸ்' (மஞ்சள்), 'மிஸ்டர் லின்கன்' (சிவப்பு), 'டபிள் டிலைட்'(இரு நிறம் சந்தனம் மற்றும் சிவப்பு).

 பெர்னேடியானா


பெர்னேஷியானா ரோஜா சொலெயில் டி'ஓர்,' அதன் வகுப்பின் முதன்மையானது (பெர்னெட் 1900)

பிரெஞ்சு வளர்ப்பாளர் ஜோசப் பெர்னெட்-டச்சர்  தனது 1900 வருஷ அறிமுகம் 'சொலேய்ல் டி'ஓர்.'உடன் பழைய ஆஸ்ட்ரியன் பிரையர் ரோஜா ரோசா பீட்டிடா வின் மரபணுக்களை உள்ளடக்கி ரோஜாக்களின் முதல வகுப்பைத் துவக்கி வைத்தார்.
இதனால் ரோஜாக்களின் முழுவதும் புதியதான ஒரு நிறப் பரப்பு உருவானது. ஆழ்ந்த மஞ்சள், மஞ்சள் கலந்த ஆரஞ்ச், செம்புச் சிவப்பு, ஆரஞ்ச், உண்மையான கருஞ்சிவப்பு, மஞ்சளின் இரு நிறங்கள், லேவண்டர், சாம்பல் நிறம் மற்றும் பழுப்பு கூட இப்போது சாத்தியமாகின.
உண்மையில் ஒரு தனி வகுப்பாகக் கருதப் பட்டாலும், 1930 இல் பெர்நிஷியானாஸ் அல்லது ஹைப்ரிட் பீட்டிடாஸ் ஹைப்ரிட் டீஸ் உடன் அதிகாரபூர்வமாக இணைக்கப்பட்டது.
20 ஆம் நூற்றாண்டில் இந்தப் புதிய நிறப் பரப்பு ஹைப்ரிட் டீ இன் புகழை மிக உயரே தூக்கிச் சென்றது ஆனால் இந்த நிறங்களுக்காக ஒரு விலை கொடுக்கவும் நேர்ந்தது: நோயினால் பீடிக்கப்படும் போக்கு,வாசனை இல்லாத பூக்கள் மற்றும் கத்தரித்துச் சீர்படுத்துதலைத் தாங்க முடியாத தன்மைகளை ரோசா பீட்டிடா தமது சந்ததியினருக்கு விட்டுச் சென்றது.

போலியந்தா

அப்படியே சொல்வது என்றால் "பல பூக்கள் கொண்ட" ரோஜாக்கள், கிரேக்க வார்த்தை "போலி" (பல) மற்றும் "அன்தோஸ்" (பூ).
உண்மையில் இரண்டு கிழக்காசிய தாவரங்கள் ரோசா சினென்சிஸ் மற்றும் ஆர்.மல்டிபிளோரா வின் கலப்புகளிலிருந்து பெறப் பெற்ற போலியந்தாக்கள் பிரான்சில் 1800 களின் இறுதியில் ஹைப்ரிட் டீக்களுடன் முதலில் தோன்றின.
அவை குட்டையான செடிகளைக் கொண்டிருந்தன-சில அடர்த்தியாக, மற்றவை பரந்திருக்கும் பழக்கத்தில் - சிறு சிறு பூக்களுடன் - (சராசரியாக 1" குறுக்களவில்) பெரிய தெளிப்புகளாக ரோஜாக்களுக்கே உரித்தான வெள்ளை, இளஞ்சிவப்பு மற்றும் சிவப்பு நிறங்களில் இருந்தன.
இவற்றின் புகழுக்கு முக்கியமான காரணம் இவை ஏராளமாகப் பூத்தல்: வசந்த காலத்திலிருந்து இலையுதிர் காலம் வரை, இயற்கைப் பரப்பில் ஒரு வலிமையான நிறத் தாக்கம் ஏற்படுத்தும் விதமாக ஒரு ஆரோக்கியமான போலியந்தா புதர் முழுக்க முழுக்க பூக்களால் மூடப்பட்டிருக்கக் கூடும்.
போலியந்தா ரோஜாக்கள் குறைந்த பராமரிப்புச் செலவு, நோய்-எதிர்ப்பு சக்தி கொண்ட தோட்ட ரோஜாக்கள் என்று இன்று வரை மதிக்கப்படுகின்றன, மற்றும் அதே காரணத்திற்காக இன்று பிரபலமாகவும் இருந்து வருகின்றன.
உதாரணங்கள்: "செசில் பிரன்னர்", "தி பைரி","ரெட் பைரி", "பிங்க் பைரி".

ப்லோரிபண்டா


ரோசா 'போருசியா', ஒரு நவீன ப்லோரிபண்டா ரோஜா
போலியன்தாஸ் ஐ ஹைப்ரிட் டீஸ் உடன் கலப்புச் செய்வதில் உள்ள பயனை ரோஜா வளர்ப்பாளர்கள் உடனடியாகக் கண்டு கொண்டனர் - போலியந்தா போன்று மிக தாராளமாக பூக்கக் கூடிய, ஆனால் ஹைப்ரிட் டீ யின் பூ அழகு மற்றும் நிற பரப்புடன் கூடிய ரோஜாக்களை உருவாக்குவதில் ஈடுபட்டனர்.
இரண்டு பெற்றோர்களின் வகுப்புகளுக்கும் இடைப்பட்ட வழி குணாதிசயங்களுடன் 1909 இல் முதல் போலியந்தா/ஹைப்ரிட் டீ கலப்பு, "க்ரஸ் அன் ஆச்சென்' உருவாக்கப்பட்டது. உருவத்தில் பெரிய, நன்கு வடிவமைந்த பூக்கள் மற்றும் ஹைப்ரிட் டீ போன்ற வளரும் பழக்கம் இந்தப் புதிய ரோஜாக்களைப் போலியன்தாஸ் மற்றும் ஹைப்ரிட் டீஸ் இரண்டிலிருந்துமே பிரித்துக் காட்டியது, ஒரு புதிய வகுப்பு உருவாக்கப்பட்டு ப்லோரிபண்டா என்று பெயரிடப்பட்டது, "பலமுறை-பூப்பவை" என்பதற்கு லத்தீனச் சொல்.
ஒரு சரியான ப்லோரிபண்டா, அளவில் சிறிய அதே சமயம் சராசரி ஹைப்ரிட் டீ ஐக் காட்டிலும் அடர்த்தியான, ஆனால் சராசரி போலியந்தா வைக் காட்டிலும் குறைவான அடர்த்தி, பரப்புடனும், விரைப்பான புதர்களைக் கொண்டிருக்கும்.
இதன் பூக்கள் ஹைப்ரிட் டீஸ் ஐக் காட்டிலும் அளவில் சிறியவை ஆனால் பெரிய தெளிப்புகளாக பரந்து, தோட்டத்தில் ஒரு நல்ல பூத்தாக்கத்தைத் தருகின்றன.

ப்லோரிபண்டாக்கள் அனைத்து ஹைப்ரிட் டீ நிறங்களிலும், ஹைப்ரிட் டீஸ்களுக்கே உரித்தான பூ அமைப்புடனும், சில சமயங்களில் ஹைப்ரிட் டீஸ் களிடமிருந்து கொத்துக் கொத்தாகப் பூக்கும் தன்மையிலிருந்து மட்டுமே வேறுபட்டு காணப்படுகின்றன.
இவை இன்று பொது பூங்காக்கள்  மற்றும் அது போன்ற இடங்களின் பெரிய படுக்கை அமைப்பு திட்டங்களில் இன்னமும் பயன்படுத்தப்படுகின்றன.
உதாரணங்கள்: 'டைன்ட்டி மெய்ட்', 'ஐஸ்பர்க்', 'டஸ்கான் சன்'.

 க்ரேண்டிப்லோரா

க்ரேண்டிப்லோராக்கள் என்பவை ("பெரிய பூக்களாலான" என்பதற்கு லத்தீனச் சொல்) 1900 களின் நடுவில் உருவாக்கப்பட்ட ரோஜாக்களின் வகுப்பு - ஹைப்ரிட் டீஸ் களுக்கும் ப்லோரிபண்டாஸ் களுக்கும் இடையேயான இரண்டு இனத்திலும் பொருந்தாத பின்-கலப்புகளுக்கு - குறிப்பாக, 1954 இல் அறிமுகப்படுத்தப்பட்ட 'க்வீன் எலிசபத்' ரோஜாவுக்கு, இடப்பட்ட பெயர்.
க்ரேண்டிப்லோரா புதர்கள் ஹைப்ரிட் டீஸ் அல்லது ப்லோரி பண்டாஸ் புதர்களை விட அளவில் பெரியவை, மற்றும் ஹைப்ரிட் டீ-பாணியில், ஒரு ப்லோரிபண்டாவைப் போன்று, சிறிய கொத்துக்களில் மூன்றிலிருந்து ஐந்துவரையிலான பூக்கள் என்கிற அமைப்பைக் கொண்டவை.
1950 களில் தொடங்கி 1980 கள் வரைக்கும் க்ரேண்டிப்லோராக்கள் கொஞ்சம் புகழுடன் திகழ்ந்தன ஆனால் இன்று இவைகள் ஹைப்ரிட் டீஸ் அல்லது ப்லோரிபண்டாஸ் களைக் காட்டிலும் மிகவும் புகழ் குறைந்தவையே. உதாரணங்கள்: 'க்வீன் எலிசபத்', 'கொமான்ச்சே', 'மோன்டிசுமா'.

 மினியேச்சர



மைலண்டைன் (ஒரு மினியேச்சர் ரோஜா) ஒரு டெரகோட்டா பூந்தொட்டியில்

பழைய தோட்ட ரோஜாக்களின் எல்லா வகுப்புகளும் - கேல்லிக்காஸ், சென்ட்டிபோலியாஸ் போன்றவை - இவற்றின் பெரிய வகை வடிவங்களைப் போன்றே இவை ஒருமுறை-பூப்பவை என்றாலும், ஒத்தாற்போன்ற மிகச் சுருக்கப்பட்ட வடிவங்கள் ஏற்படுத்தக் கொண்டிருந்தன.
சாதாரண மாதிரி-வடிவம் கொண்ட சார்பு இனங்கள் போன்றே மினியேச்சர் பழைய தோட்ட ரோஜாக்கள், எப்பொழுதும் பூக்கும் மினியேச்சர் ரோஜாக்களை உருவாக்க மீண்டும் மீண்டும் பூக்கும் ஆசிய தாவரங்களுடன் கலப்புச் செய்யப் பட்டன.
இன்று, மினியேச்சர் ரோஜாக்கள் என்றால் குச்சிகள் நிறைந்த, மீண்டும் மீண்டும் பூக்கும், உயரத்தில் 6"லிருந்து 36" வரையிலும், பெரும்பாலானவை 12"-24" உயர பரப்பிலும் அடங்குகிற புதர்கள்.
பூக்கள் எல்லா ஹைப்ரிட் டீ நிறங்களிலும் தோன்றுகின்றன; பல சார்பினங்களும் சிறப்பான உயர்-மத்தி ஹைப்ரிட் டீ பூ வடிவைப் பின்பற்றுகின்றன.
மினியேச்சர் ரோஜாக்கள் பெரும்பாலும் பூ தொழில் அதிபர்களால் வீட்டுச்செடிகள் என்று வியாபார யுக்தியுடன் விற்கப்படுகின்றன, ஆனால் இந்தச் செடிகள் பெரும்பாலும் வெப்பமான பகுதிகளைச் சேர்ந்த வெளிப்புற புதர்களிடமிருந்து தோன்றியவை என்பதையும், மினியேச்சர் ரோஜா சார்ந்தினங்கள் பலவற்றிற்கு உயிர் வாழ வருடா வருடம் குளிர் இல்லாத ஒரு காலப் பகுதி தேவை என்பதையும் நினைவில் கொள்வது முக்கியமானது.
உதாரணங்கள்: பெடைட் டே ஹாலண்ட் (மினியேச்சர் சென்ட்டிபோலியா, ஒருமுறை-பூப்பவை), கப்கேக்(நவீன மினியேச்சர், மீண்டும் மீண்டும்-பூப்பவை).)

க்ளைம்பிங்/ரேம்ப்லிங்


ரோசா 'சேஃபிரைந் ட்ரௌஹிந்', ஒரு ஏறும் போர்போன் ரோஜா (பைசோட் 1868)

மினியேச்சர் ரோஜாக்களைப் போன்றே மேற்கூறிய அனைத்து ரோஜாக்களின் வகுப்புகளும், பழையவை மற்றும் நவீனம் இரண்டும், "ஏறும்" வடிவங்கள் கொண்டவை, இதனால், இந்தப் புதர்களின் பிரம்புகள் அதிக உயரம் வளர்பவை மற்றும் சாதாரண ("புதர்") வடிவங்களை விட அதிகம் வளைந்து கொடுப்பவை.

பழைய தோட்ட ரோஜாக்களில், இது பெரும்பாலும் பயிரிடு வகைகள் மற்றும் சர்ந்தினங்களின் இயற்கையான வளர்ச்சி பழக்கம்; ஆயினும், நவீன ரோஜாக்கள் பலவற்றில், ஏறும் ரோஜாக்கள் என்பவை தானாகவே நிகழ்கிற சிதைவுகளின் விளைவுகள்.
உதாரணமாக,'பீஸ்'ஹைப்ரிட் டீ ரோஜாவின் வடிவம், இவற்றின் பிரம்புகள் நீண்டவை மற்றும் வளைந்து கொடுப்பவை அதாவது "க்ளைம்பிங்" என்பதைத் தவிர, மரபணு ரீதியாக சாதாரண "புதர்" ஐ ஒத்தது என்பதால் 'க்ளைம்பிங் பீஸ்' "க்ளைம்பிங் ஹைப்ரிட் டீ" ஆக நியமனம் பெறுகிறது.

க்ளைம்பிங் ரோஜாக்கள் பல உயரத்தில் 8' முதல் 20' வரை வளர்கின்றன மற்றும் மீண்டும் மீண்டும் பூப்பதை வெளிப்படுத்துகின்றன. ரேம்ப்ளர் ரோஜாக்கள், தொழில் நுட்ப ரீதியாக ஒரு தனி வகுப்பு என்றாலும் பெரும்பாலும் ஏறும் ரோஜாக்களுடன் சேர்த்துத்தான் பேசப் படுகின்றன.
இவையும் நீண்ட, வளைந்து கொடுக்கும் பிரம்புகளை வெளிப்படுத்துகின்றன, ஆனால் உண்மையான ஏறிகளிலிருந்து இரண்டு வழிகளில் வேறுபடுகின்றன: அளவில் பெரிய ஒட்டு மொத்தமான உருவம் (20-30' உயரம் என்பது சாதாரணம்), மற்றும் ஒருமுறை-பூக்கும் ஒரு தன்மை.
க்ளைம்பிங் ரோஜாக்கள் மற்றும் ரேம்ப்ளிங் ரோஜாக்கள் இரண்டுமே ஐவி, க்ளிமேடிஸ் அல்லது விச்டிரியா  க்கள் போல உண்மையான படர கொடிகள் அல்ல; இவை தாங்கிகளுடன் தாமாகவே ஒட்டிக் கொள்ளும் செய்திறன் அற்றவை, ஆகவே, கொடிப்பந்தல் மற்றும் கொழுகொம்பு  போன்ற கட்டமைப்புகள் உடன் கட்டப்பட வேண்டும் மற்றும் கைகளைக் கொண்டு பழக்கப் படுத்த வேண்டும்.
உதாரணங்கள்: 'ப்ளேஸ்' (மீண்டும் மீண்டும்-பூக்கும் ஏறி), 'அமெரிக்கன் பில்லர்' (ஒரு முறை-பூக்கும் ரேம்ப்லேர்).

 இங்கிலீஷ்/டேவிட் ஆஸ்டின்

ரோஜாக்களின் ஒரு தனி வகுப்பு என்று எந்த நிறுவப்பட்ட ரோஜா அலுவலகத்தாலும் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படவில்லை என்றாலும், - இங்கிலீஷ் (டேவிட் ஆஸ்டின் என்றும் அறியப்படுகிற) ரோஜாக்கள் ஒரே மாதிரியாக உபயோகிப்பாளர்களாலும், சில்லறை வியாபாரிகளாலும் தனியாக எடுத்து வைக்கப்படுகின்றன.
 இங்கிலாந்து  ஐச் சேர்ந்த டேவிட் ஆஸ்டின் 1960 களில் நவீன ஹைப்ரிட் டீஸ் மற்றும் ப்லோரிபண்டாஸ் களைக் கலப்புச் செய்து பழைய தோட்ட ரோஜாக்கள் மீதான ஆர்வத்தைத் தூண்ட விரும்பி முன்னேற்றப் பணியைத் துவக்கினார்.
நவீன, மீண்டும் மீண்டும் பூக்கும் குணாதிசயங்களுடனும், எண்ணிக்கையில் அதிகமான நிறப் பரப்புடன், பழைய-பாணி வடிவங்கள் மற்றும் நறுமணங்கள் கொண்ட தனித் தன்மை உள்ள கேல்லிக்கா , ஆல்பா மற்றும் "டமாஸ்க்" ரோஜாக்களை நினைவுபடுத்தும் விதமாக, ரோஜாக்களின் ஒரு புதுப் பிரிவை உருவாக்குவது என்பது தான் திட்டம்.
ஆஸ்டின் தனது பணியில் பெரும்பாலும் வெற்றி அடைந்தார்; தற்சமயம் எண்ணிக்கையில் நூற்றுக்கணக்கான சார்ந்தினங்கள் கொண்ட அவரது "இங்கிலீஷ்" ரோஜாக்கள் கூட்டம், தோட்டக்கலை மக்களால் அன்புடன் கட்டித் தழுவி ஏற்கப்பட்டிருக்கின்றன மற்றும் உபயோகிப்பாளர்களுக்கு பரவலாக கிடைக்கின்றன.
டேவிட் ஆஸ்டின் ரோஜாக்கள், தொடர்ச்சியாக புதிய சார்ந்தினங்கள் வெளியிடப்பட்டு, இன்றும் முனைப்புடன் உருவாக்கப்படுகின்றன,
இந்த முயற்சியில் பழைய தோட்ட ரோஜாக்களின் மரபுக்கே உரித்தான குளிர்-தாங்கும் தன்மையும், நோய்-எதிர்ப்பு வலிமையும் பெரிய அளவில் விட்டுக் கொடுக்கப்பட்டுள்ளன என்பதை குறித்துக் கொள்ள வேண்டும்; நவீன ஹைப்ரிட் டீஸ் மற்றும் ப்லோரிபண்டாஸ் களை பீடிக்கும் அதே நோய் தொந்தரவுகளுக்கு பல இங்கிலீஷ் ரோஜாக்களும் ஆளாகக் கூடும் மற்றும் யுஎஸ்டிஏ மண்டலம் 5 க்கு வடக்கில் இவைகள் திடகாத்திரமாக இல்லை.
உதாரணங்கள்: 'மேரி ரோஸ்', 'கிரகாம் தாமஸ்', 'தமோரா'.

கனேடியன் ஹார்டி ரோசெஸ்

கடினமான கனேடியன் குளிர் காலங்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த ரோஜாக்கள் அக்ரிகல்ச்சர் கனடா வால் மோர்டன் இல் உள்ள மோர்டன் ரிசர்ச் ஸ்டேஷன் இலும், மேனிடோபா மற்றும் எக்ஸ்பரிமென்டல் பார்ம், ஒட்டாவா விலும் (பிற்பாடு ல'அசொம்ஷன், க்யூபெக்-யிலும்) உருவாக்கப்பட்டன.
இந்த இரண்டு முக்கியமான வழிகள் பார்க்லேன்ட் தொடர் மற்றும் எக்ஸ்ப்ளோரர் தொடர் என்று அழைக்கப்படுகின்றன.
இந்த செயல் திட்டங்கள் தற்போது கைவிடப்பட்டுள்ளன; ஆயினும் மிச்சமுள்ள செடி கையிருப்பு கனேடியன் ஆர்ட்டிஸ்ட்ஸ் தொடர் வழியாக தனியார் வளர்ப்பாளர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.
பெரும்பாலும் கனேடியன் பழங்குடி தாவரங்கள் மற்றும் அதிக மென்மையான ரோஜாக்களின் கலப்புகளில் பெறப்பட்ட இந்தச் செடிகள் மிக அதிகமாக குளிர் தாங்குபவை, சில -45 டிகிரீ செல்சியஸ் வரையிலும் கூட. ஒரு பரந்த வகைப்பாடு உள்ள உருவங்கள் மற்றும் நிறங்கள் சாதிக்கப்பட்டன .'மோர்டன் பெல்லி', 'வின்னிபெக் பார்க்ஸ்' மற்றும் 'க்யுத்பெர்ட் கிரான்ட்' உதாரணங்களில் அடங்கும். மற்ற குறிப்பிடத்தக்க கனேடியன் வளர்ப்பாளர்களில் ஜார்ஜெஸ் பக்நெட் மற்றும் ராபர்ட் எர்ஸ்கின் அடங்குவர்.

லேன்ட்ஸ்கேப் ரோசஸ்


ஒரு புதர் ரோஜாவின் உதாரணம்.

இவைகள் முக்கியமாக பொது மக்களின் இனிமை வாழ்க்கை தோட்டத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு நவீன வகை ரோஜா. இவைகள் ஒட்டுமொத்தமாக புதர் ரோஜாக்கள் என்று அழைக்கப்படுகின்றன. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், தோட்டக்காரர்கள் மற்றும் இயற்கைபரப்பு சீரமைப்பாளர்கள் மத்தியில் பாரம்பரிய ஹைப்ரிட் டீ மற்றும் ப்லோரிபண்டா வகைகள் ஆதரவை இழந்தன, ஏனெனில் அவை பெரும்பாலும் கடும் மனித உழைப்பும், ரசாயனமும் தேவைப்பட்ட, பலவிதமான தீங்கிழைக்கும் பூச்சிகள் மற்றும் நோய் உபாதைகளால் பாதிக்கப்படும் செடிகள்.
"லேன்ட் ஸ்கேப்" ரோஜாக்கள் என்று பெரிதாக அழைக்கப்படும் ரோஜாக்கள், நிறம், வடிவம் மற்றும் நறுமணம் தரும், அதே சமயம் பராமரிப்புச் செலவு குறைவாகவும் பேணுவது சுலபமானதாகவும் உள்ள ஒரு தோட்ட ரோஜாவுக்கான உபயோகிப்பாளரின் ஆசையைப் பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டவை தாம். லேன்ட் ஸ்கேப் ரோஜாக்கள் பல கீழ்க்கண்ட குணாதிசயங்களைக் கொண்டுள்ளன:
  • நல்ல நோய் எதிர்ப்புத் தன்மை
  • குள்ளமாக வளரும் தன்மை வழக்கமாக 60 செமீ (24 இன்சுகள்)க்குக் கீழ்
  • மீண்டும் மீண்டும் பூத்தல்
  • நோய் மற்றும் தீங்கிழைக்கும் பூச்சி எதிர்ப்பு
  • உறிஞ்சி உயிர் வாழாமல், தமது வேர்கள் மீதே வளர்தல்.
புதிய லேன்ட் ஸ்கேப் ரோஜாக்களின் சார்ந்தினங்களை வளர்ப்பதில் ஈடுபட்ட முதன்மையான நபர்கள்: வெர்னெர் நோக் (ஜெர்மனி), மெய்டிலேன்ட் ரோசஸ் (பிரான்ஸ்), பூட் & கோ (நெதர்லேன்ட்ஸ்) மற்றும் வில்லியம் ரேட்ளர் (யுஎஸ்ஏ). பூக் கம்பள ரோஜாக்கள், அல்லது கம்பள ரோஜாக்கள் என்றும் அறியப் படுகின்ற இவ்வகை, தரைப்பரப்பு ரோஜாக்கள் பிரிவின் முழுத் தன்மையையும் மாற்றியிருக்கின்றன. 1990 இல் வெர்னெர் நோக் ஆல் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட அவைகள், அந்த நேரத்தில் உலகத்தின் மிகக் கடுமையான ரோஜா பரீட்சைகளில் ஒன்றான டாயிச்லேன்ட் ரோஸ் டெஸ்டர்ஸ் ஆல் தரப்படும் மிக உயரிய விருதைப் பெற்றன.இந்தப் பரீட்சையில் கலந்து கொண்ட 43 சார்ந்தினங்களில் - நோய் எதிர்ப்பு சம்பந்தமாக சுமார் 200 முறைகள் சோதிக்கப்பட்டதில் - இந்த ஒரு வகை மட்டுமே அந்தப் பரீட்சையில் தேறியது, அதுவும் ஒரு ரோஜாவுக்கு எப்போதுமே கொடுக்கப் பட்ட மிக அதிகமான அந்த நேரத்தில் சாத்தியமான 100 க்கு 85.5, நோய் எதிர்ப்புக்கு 20 க்கு 18.3 குறி எண்களுடன்.இவை இப்போது வளர்க்கப்பட்ட ரோஜாக்களில் சிறந்த தரைபரப்பு ரோஜா பிரிவு என்று மதிக்கப்படுகின்றன, உலகம் முழுமையும் கிடைக்கின்றன.

 கார்ப்பெட் ரோசஸ்

டேவிட் ஆஸ்டின் போலவே இவையும் ஒரு தனி ரோஜா வகுப்பு என்று நிறுவப்பட்ட ரோஜா அதிகாரி மூலமாக அதிகாரபூர்வமாக அங்கீகாரம் பெறாமல் வேண்டுமானால் இருக்கலாம், ஆனால் கார்ப்பெட் ரோஜாக்கள் (பிளவர் கார்ப்பெட் என்றாலும்) உபயோகிப்பாளர்களாலும், இயற்கைப்பரப்பு சீரமைப்பாளர்கள் மற்றும் தொழில் சம்பந்தப்பட்டவர்களாலும் அவ்விதமே கருதப் படுகின்றன. வெர்னர் நோக் (ஜெர்மனி) 1965 இல் நோய் எதிர்ப்பு ரோஜாக்களை வளர்க்கத் தொடங்கினார். அவர் ரோஜாக்கள் மீது தீவிர விருப்பம் கொண்டிருந்தார், ஆனால் ரோஜாவின் இந்த எல்லாவிதமான நோய்களுடன் அவை நீண்ட காலத்திற்கு தோட்டக் காரர்களின் மனதை கவர முடியும் என்று கருதவில்லை.
அவர் 1989 இல் தனது முதல் பிளவர் கார்ப்பெட் ரோஜா, பிளவர் கார்ப்பெட் பிங்க் ஐ அறிமுகப் படுத்தினார். முன்னெப்பொழுதும் இல்லாத நோய் எதிர்ப்பு தன்மை மட்டுமன்றி எந்த ரோஜாவையும் விட மிக நீண்ட காலம் பூப்பவை ( 5 லிருந்து 9 மாதங்கள் வரை- சீதோஷ்ண நிலையைப் பொறுத்து)ஆகவும், கவர்ச்சியான கத்தரித்து சீரமைத்தல் தேவை இல்லாமலும் - பெரிய கத்தரிக்கோல், டிராக்டரைக் கொண்டும் கத்தரிக்க முடியும் (1/3 ஆகக் குறைக்கிறோமா, அல்லது தரை மட்டமாக ஆக்குகிறோமா என்பதும் ஒரு விஷயமில்லை) இவை எல்லாமே சிறந்த பச்சைப்பசேல் இலைகளின் மீது என்பதான ரோஜா அது. தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும் ஒரு வலிமையான வளர்ப்பு திட்டம் காரணமாய் வெள்ளை, ஆப்பிள் ப்லோஸம், சிவப்பு, மஞ்சள், தங்க நிறம், பவழ நிறம் போன்ற பலவிதமான நிறங்கள் அறிமுகமாயின, கிடைக்கவும் ஆரம்பித்தன.
இந்தச் சமயத்தில் அவருடைய மைந்தர் ரெயின்ஹார்ட்நோக் கின் கீழ் வளர்ப்பு வேலை தொடர்ந்தது. மேன்மேலுமான வளர்ப்பு, 2007 இல் அடுத்த தலைமுறை வளர்ப்பு பிளவர் கார்ப்பெட் பிங்க் சுப்ரீம் உடன் ஸ்கார்லெட் மற்றும் ஆம்பர் ஆக அறிமிகம் ஆனது. முந்தியவற்றின் குணாதிசயங்களோடு இவைகள் 41 டிகிரீ வரையிலான வெப்பமான சூழ்நிலைகளிலும் சவுகரியமாக இருக்கக் கூடியவை.