Feb 16, 2012

கண்ணதாசன்.

நான் மலரோடு.

நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்
நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்
உன் வலை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
நீ வருகின்ற வழி மீது யார் உன்னை கண்டார்
உன் வலை கொஞ்சும் கை மீது பரிசென்ன தந்தார்
உன் மலர் கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
உன் மலர் கூந்தல் அலை பாய அவர் என்ன சொன்னார்
உன் வடிவான இதழ் மீது சுவை என்ன தந்தார்
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்
பொன் வண்டொன்று மலர் என்று முகத்தோடு மோத
நான் வலை கொண்ட கையாலே மெதுவாக மூட
பொன் வண்டொன்று மலர் என்று முகத்தோடு மோத
நான் வலை கொண்ட கையாலே மெதுவாக மூட
என் கருண் கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
என் கருண் கூந்தல் கலைந்தோடி மேகங்களாக
நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற
நீ இல்லாமல் யாரோடு உறவாட வந்தேன்
உன் இளமைக்கு துணையாக தனியாக வந்தேன்
நான் மலரோடு தனியாக ஏன் இங்கு நின்றேன்
என் மகராணி உன்னை காண ஓடோடி வந்தேன்


****************************************

காலங்களில் அவள்.

காலங்களில் அவள் வசந்தம்.. கலைகளிலே அவள் ஓவியம்..
மாதங்களில் அவள் மார்கழி.. மலர்களிலே அவள் மல்லிகை..
காலங்களில் அவள் வசந்தம்.. கலைகளிலே அவள் ஓவியம்..
மாதங்களில் அவள் மார்கழி.. மலர்களிலே அவள் மல்லிகை..
பறவைகளில் அவள் மணிப் புறா.. பாடல்களில் அவள் தாலாட்டு..
ஒ ஒ ஒ ஒ..
பறவைகளில் அவள் மணிப் புறா.. பாடல்களில் அவள் தாலாட்டு..
கனிகளிலே அவள் மாங்கனி.. கனிகளிலே அவள் மாங்கனி..
காற்றினிலே அவள் தென்றல்..
காலங்களில் அவள் வசந்தம்.. கலைகளிலே அவள் ஓவியம்..
மாதங்களில் அவள் மார்கழி.. மலர்களிலே அவள் மல்லிகை..
பால்போல் சிரிப்பதில் பிள்ளை.. அவள் பனிபோல் அணைப்பதில் கன்னி..
கண்போல் வளர்ப்பதில் அன்னை.. கண்போல் வளர்ப்பதில் அன்னை..
அவள் கவிஞ்ஞன் ஆக்கினால் என்னை..
காலங்களில் அவள் வசந்தம்.. கலைகளிலே அவள் ஓவியம்..
மாதங்களில் அவள் மார்கழி.. மலர்களிலே அவள் மல்லிகை..
காலங்களில் அவள் வசந்தம்..