பெண்: காதல் வந்தும் சொல்லாமல் நெஞ்க்குள்ளே ஏங்கும் என்னை, கொல்வாயோ? உன் காதல் சொல்வாயோ?
ஆண்: இதயத்திலே ஒரு வலி, இமைகளிலே பலதுளி,
நீ சென்றால்கூட காதல் சுகமாகும்!
பெண்: நீ பிரிந்தால் உலகம் உருகும் மெழுகாகும்!
ஆண்: வார்த்தை ஒன்றிலே வாழ்க்கை தந்திடு, பூமிப் பந்தையே ஒரு சொல்லில் சுத்திடு...
பெண்: விதியின் கைகளோ வானம் போன்றது,
புரியுமுன்னமே மனம் சாம்பலாகுது...
பெண்: நினைவு இடறி மண்ணில் விழுகிறதே,
நிழலில் கரைந்து அது சாகாதா? காதல் கதறி இங்கு அழுகிறதே, இரண்டு கண்ணும் அதில் கருகாதா!
ஆண்: ஏன்தான் காதல் வளர்த்தேன்,அதை ஏனோ என்னில் புதைத்தேன்... சுடரில்லாத தீயில் எரிகின்றேன்,சுடும் கண்ணீரில் கடிதம் வரைகின்றேன்... பெண்ணே......உன் பாதையில் நகரும் மரமாகுவேன்... இரவை தின்று வாழ்ந்தாய் நீயடி...ஒ... இதயம் கொண்டு போனால் என்னடி
(காதல் வந்தும்)